Author: admin

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். பிறப்பால் அமெரிக்கரான துளசி கப்பார்ட், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க எம்பியாக பதவி வகித்தபோது பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான பிஎப்ஐயின் இயக்குநராக காஷ் படேல் பதவி…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார். இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் க்‌ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலங்கானா மாநிலம்…

Read More

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக 3 பேருக்கு நன்னடைத்தைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதுகள்’ இரண்டு பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால், மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத், சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி ஆகிய மூன்று பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா விருதுகளை வழங்கினார். விழாவில் விருந்தினர்கள், விருதாளர்கள் பேசியதாவது: காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான்: மத நல்லிணக்கத்தை பேணியதற்காக மூன்று பேருக்கு விருது…

Read More

புதுடெல்லி: இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் 300கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாளரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம். கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம். விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும். அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ,…

Read More

சென்னை: அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விற்பனை ஏப்ரல் 16 முதல் இந்திய சந்தையில் தொடங்கி உள்ளது. அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் சில்லறை வர்த்தக பிரிவில் இந்த போனை பெறலாம். சிறப்பு அம்சங்கள்: 6.88 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம் ஆக்டா-கோர் Unisoc டி7250…

Read More

திண்டுக்கல்: சரித்திரத்தில் இருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக்கொள்ளாத நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு மிகச்சரியான பாடத்தை இந்தியா கொடுக்கும், என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அபிராமியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிர தாக்குதலில் மக்கள் உயிரிழந்த பிறகும் பாகிஸ்தான் மீது இந்தியா படைஎடுக்ககூடாது என்று கூறும் திருமாவளவன், தனது வாக்கு வங்கி பலப்படும் என நினைத்து கூறுகிறார். காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியிருக்கிறது கேரள ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்க பரிபூரண அதிகாரம் உள்ளது என. இரண்டு தீர்ப்புகள் குறித்தும் சட்ட வல்லுனர்களை கொண்டு பார்க்கவேண்டும். திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தெய்வங்களை மலைக்கோட்டையின் மேல் வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்தவகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமோ அதை கொடுப்போம். தீவிரவாதிகளின் சதி பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு…

Read More

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி கண்​டது. போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் கலந்து கொண்ட ஹைத​ரா​பாத் அணி​யின் பயிற்​சி​யாளர் டேனியல் வெட்​டோரி​யிடம், நடப்பு சீசனில் எந்த இடகை சுழற்​பந்து வீச்​சாளர் சிறப்​பாக செயல்​படு​கிறார் என கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்த அவர், “குஜ​ராத் அணி​யின் சாய் கிஷோர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். அவருக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. இதே​போன்று மும்பை அணி​யில் மிட்​செல் சாண்ட்​னர், சிஎஸ்​கே​வில் ஜடேஜா ஆகியோ​ரும் ஒரு சில ஆட்​டங்​களில் கிடைத்த வாய்ப்​பு​களில் பஞ்​சாப் அணியின் ஹர்​பிரீத் பிராரும் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர். சாய் கிஷோர் அற்​புத​மான பந்​து​வீச்​சாளர். ஏலத்​தில் நாங்​கள் அவரை மிக​வும் உன்​னிப்​பாக கவனித்​தோம். அவரை அணிக்கு தேர்வு…

Read More

சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிம்பு – கயாடு லோஹர் கூட்டணியுடன் சந்தானமும் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்திருந்தார் சந்தானம். இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராம்குமார் படத்தினை முடித்துவிட்டு, தனது 50-வது படத்துக்கு செல்கிறார் சிம்பு. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இத்துடனேயே தனது 51-வது படத்தையும் தொடங்குகிறார் சிம்பு. அதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Read More

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது. ஈரான் தலைநகரில் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதும் வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த விபத்து ஏற்பட்டது. உலக அளவிலான எண்ணெய் விநியோக பணியில் இந்த பகுதி முக்கியமானதாக உள்ளது. துறைமுகத்தில் இருந்த ரசாயனங்களை மிகவும் மோசமான முறையில் பராமரிப்பின்றி அலட்சியமாக கிடங்குகளில் வைத்திருந்ததுதான் காரணம் என்கிறார் ஈரானின் நெருக்கடி மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளராக ஹுசைன் சபாரி. “கன்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தான் இந்த வெடிவிபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு…

Read More

சென்னை / காஞ்சிபுரம்: ​காஞ்சி காமகோடி பீடத்​தின் 71-வது பீடா​திப​தி​யாக ரிக் வேத​விற்​பன்​னர் ஸ்ரீ கணேச சர்​மா​ தி​ரா​விட் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அட்சய திரு​தியை தினத்​தில்​(ஏப்​.30-ம் தேதி), அவர் சந்​நி​யாஸ்ரம தீட்சை பெற உள்​ளார் என்று காஞ்சி சங்கர மடத்​தின் ஸ்ரீ கார்​யம் சல்லா விஸ்​வ​நாத சாஸ்​திரி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக காஞ்சி சங்கர மடம் சார்​பில் அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், புனித அட்சய திரு​தியை தினத்​தில் (ஏப்​.30-ம் தேதி, புதன்​கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​டுக்​கு, காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில் காலை 6 மணி முதல் 9 மணிக்​குள் சந்​நி​யாஸ்ரம தீட்சை அருள உள்ளார். ஸ்ரீ ஆதிசங்​கரர் ஜெயந்தி: இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி…

Read More