தெஹ்ரான்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கிய அதே நேரத்தில், தெற்கு ஈரானில் சனிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெருசலேம் போஸ்ட் தகவலின்படி, இஸ்லாமிக் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) கப்பல் தளம் அருகே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்பு எதுவும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது. சமூக ஊடங்களில் பரவி வரும் வீடியோக்களில், பயங்கர வெடிப்புக்கு பின்பு கரும்புகையானது…
Author: admin
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோயில் சித்திரைத் திருவிழாவில் நாளை (ஏப். 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், நம் பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை ஶ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூமாலையை சூடிக் கொண்டார். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில், ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம்…
கோவை: போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற குறிப் பெடுத்து படிப்பதும், தன்னம்பிக்கையும் அவசியம் என, கோவையில் நடைபெற்ற ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன?, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும்?, அதிகம் செலவாகுமா? என்ற ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். இவ்வாறான தயக்கத்தை போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்கு படிப்பதற்கான தெளிவை தரும் நோக்கத்தில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை – உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினரான கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவணசுந்தர் பேசியதாவது: யுபிஎஸ்சி தேர்வு…
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 121-வது அத்தியாத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது ‘SACHET’ என்ற மொபைல் செயலி குறித்து குறிப்பிட்டிருந்தார். “நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம். எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல். இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும். இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காப்பாற்றுகிறது, இதன் பெயரும் கூட SACHET (சசேத்). சசேத் செயலியை, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதே போனுடன் iQOO Z10 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. 5ஜி நெட்வொர்க்கில் இந்த போன் இயங்குகிறது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியன்ட் மற்றும் இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. சிறப்பு அம்சங்கள்: 6.72 இன்ச் டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7300 சிப்செட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் இரண்டு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் 6ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ் பின்பக்கத்தில் இரண்டு கேமரா.…
சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை (ஏப். 28) மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைத்தார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார். அதோடு, அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் துறை ஒதுக்கீடுகளுக்கான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வசம், மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சராக இருப்பார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருப்பார். பால் மற்றும்…
‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சூர்யா, ‘ரெட்ரோ’ படக்குழுவினர் குறித்தும், அவர்களுடைய பணி குறித்தும் பேசினார். கடந்த முறை ‘கங்குவா’ படத்துக்கு விளம்பரப்படுத்தும்போது, சூர்யா நடனமாடினார். அந்தப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்டாலும், சூர்யா வெறுமனே கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ பதிவினை முன்வைத்து பலரும் இணையத்தில் “உங்களை இப்படி பார்த்ததில்லை சூர்யா” எனப் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். இதனிடையே சூர்யா தனது பேச்சினை முடிக்கும் முன்பு, ‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக பேசினார். அதில் “பாக்சிங் போட்டிகளில் நீங்கள் விழும்போது தோற்பதில்லை. எழுந்திருக்க மறுக்கும் போதுதான் தோற்றுவிடுகிறீர்கள். நாங்கள் மீண்டும் பெரியளவில் மீண்டு வருவோம். மீண்டும் ஒரு வலுவான அடி…
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் விளாசினர். ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷால் படேல் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் முகமது ஷமி, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து…
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். பிறப்பால் அமெரிக்கரான துளசி கப்பார்ட், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க எம்பியாக பதவி வகித்தபோது பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான பிஎப்ஐயின் இயக்குநராக காஷ் படேல் பதவி…
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார். இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் க்ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலங்கானா மாநிலம்…