புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், “சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார். சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து,…
Author: admin
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்தூர்பேட்டை அருகே பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வரும் 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு 18 நாள் சித்திரை தீருவிழா வருகின்ற 29-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 3-ம் தேதி தர்மர் பிறப்பு, 7-ம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட மகாபாரத சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மே 13-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள்…
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.24 கோடியில் ‘காலநிலை கல்வி திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நிதித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கடந்த 2024-2025-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 6.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வீதம் 9.5 சதவீதமாக இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த நீடித்த வளர்ச்சி வாயிலாக. 2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதல்வரின் இலக்கை நம்மால் எளிதாக எட்ட முடியும். மேலும், சேவைத் துறையின் வளர்ச்சி…
புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சொந்தநாடு திரும்புவதை உறுதி செய்வதற்காக 5,000 பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி போலீஸாரிடம் உளவுத்துறை (ஐபி) ஒப்படைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப்ஆர்ஆர்ஒ), பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருடன் பகிர்ந்து கொண்டது. அடையாளங்களைச் சரிபாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நீண்ட காலம் விசா அனுமதி வைத்திருக்கும், இந்து பாகிஸ்தானியர்களின் பெயர்களும் அடங்கும். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சரிபார்ப்பு பணிக்காக சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு இந்த பட்டியல் பகிரப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் அவர்களின் சொந்த நாட்டுக்கு திரும்பும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் வடகிழக்கு…
சென்னை: உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் இதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை (ஏப்.9) அன்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 1.5 மில்லியன் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன. சீனாவுக்கு பரஸ்பர வரி விதிப்பை நிறுத்த முடியாது என ட்ரம்ப் கூறியுள்ளார். இரண்டு தரப்பும் வரிகளை அன்றாடம் கூட்டி வருகின்றன. கிட்டத்தட்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வரி விதிப்பு யுத்தம் மூண்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆப்பிள் சாதனங்களை அமெரிக்கா கொண்டு செல்வதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி உள்ளது. அந்த நிறுவனத்தின் விற்பனை சந்தையில் அமெரிக்கா…
கோவை: தவெக-வின் ஆட்சி சிறுவாணி தண்ணீரை போல் சுத்தமான ஆட்சியாக அமையும் என, அக்கட்சித் தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி முகவர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சி பட்டறை நிகழ்வு கோவை எஸ்.என்.எஸ் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.27) நடந்தது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசியதாவது: பயிற்சி பட்டறை முதல் நாள் நிகழ்வில் நான் பேசும்போது இந்த நிகழ்வு ஓட்டுக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல என்று கூறினேன். காரணம் நமது தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. நம்மிடம் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு நன்மை நடக்கிறது என்றால் எந்த ஒரு நிலைக்கும் செல்ல தயங்க மாட்டோம். நமது ஆட்சி அமைந்த பின் ஊழல் இருக்காது, குற்றவாளிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் எவ்வித தயக்கமின்றி மக்களை சென்று சந்தியுங்கள். அவ்வாறு சந்திக்கும் போது அறிஞர் அண்ணா கூறிய,‘மக்களிடம்…
பாகிஸ்தானுடன் போர் அவசியமில்லை என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கருத்து தெரிவித்துள்ளார். சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சூர்யாவின் படங்கள் தனக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தது, எந்தளவுக்கு பிடிக்கும் என தனது பேச்சில் குறிப்பிட்டு பேசினார் விஜய் தேவரகொண்டார். அதனைத் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா, “தீவிரவாதிகளுக்கு மூளை இல்லை, அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு இல்லை, நாட்டுக்குள் அதன் சொந்த பிரச்சினைகளை கூட கையாள முடியவில்லை. ஆனால், காஷ்மீருக்காக இந்தியாவைத் தாக்கும் துணிச்சல் இன்னும் உள்ளது. காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, காஷ்மீர் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்தியர்களாக, நாம் மனிதர்களாக இருந்து நட்பை வளர்க்க…
நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 201 ரன்கள் எடுத்தது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 120 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி. கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா 2, வருண் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 202 ரன்கள் தேவை என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் – சுனில்…
தெஹ்ரான்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கிய அதே நேரத்தில், தெற்கு ஈரானில் சனிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெருசலேம் போஸ்ட் தகவலின்படி, இஸ்லாமிக் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) கப்பல் தளம் அருகே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்பு எதுவும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது. சமூக ஊடங்களில் பரவி வரும் வீடியோக்களில், பயங்கர வெடிப்புக்கு பின்பு கரும்புகையானது…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோயில் சித்திரைத் திருவிழாவில் நாளை (ஏப். 26) தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், நம் பெருமாளுக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்டவை ஶ்ரீரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், தன்னை பெருமாளின் மனைவியாக நினைத்து மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூமாலையை சூடிக் கொண்டார். ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மணம் புரிந்தார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம். அதைக் குறிக்கும் வகையில், ஆண்டாள் சந்நிதி உட்பிரகாரத்தில் 108 திவ்ய தேச பெருமாளும் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது மலையப்ப சுவாமி, மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் நம்…