ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதின் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து, ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து கடந்த வருடம் ‘லாபதா லேடீஸ்’ தேர்வு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடக்கும் 98-வது ஆஸ்கர் விருதுக்கு ‘ஹோம்பவுண்ட்’ (Homebound) என்ற இந்திப் படம் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படுகிறது. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இதில், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்.26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பே பல்வேறு சர்வதேசப் பட விழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பஷாரத் பீர் என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. வட இந்திய கிராமம் ஒன்றில்…
Author: admin
மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள் தோறும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். பயணிகள் பாதுகாப்பு, வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுக்கிறது. அந்த வகையில், பயணிகள் தவறவிட்ட பொருட்களை ஒப்படைக்க, மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு, (இயக்கம் மற்றும் பராமரிப்பு), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.…
புதுடெல்லி: அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, இந்திய விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பணியாளர்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். இந்தச் சூழலில், திடீரென எச்1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று அமலுக்கு வருவதால் அவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி வருகின்றனர். இதன்காரணமாக டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் எதிர்விளைவாக விமான கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, சைபர் தாக்குதல் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் நேற்று விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த இந்திய பொறியாளர்கள் பாதிக்கப்பட்டனர். நிறுவனங்கள் அலர்ட்: இன்று முதல் விசா கட்டணம் உயர்த்தப்படுவதால், தாய்நாட்டுக்கு சென்றுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் 24 மணி நேரத்தில்…
இந்த உலக அல்சைமர் தினம், அன்புக்குரியவர்களுடன் சரிபார்க்க நேரம் ஒதுக்குங்கள். சிறிய விஷயங்களைக் கவனியுங்கள். அவர்கள் மீண்டும் கேள்விகளைச் செய்கிறார்களா? நண்பர்களைத் தவிர்க்கிறீர்களா? பில்களுடன் போராடுகிறீர்களா? திறந்த, இரக்கமுள்ள உரையாடல்களைக் கொண்டிருப்பது முதல் படியாகும். ஒரு மருத்துவரைப் பார்க்க அவர்களை ஊக்குவிக்கவும், அல்சைமர் முழு குடும்பத்தையும் பாதிக்கும் ஒரு நபரை மட்டும் பாதிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விழிப்புணர்வும் ஆதரவும் பயணத்தை குறைவாக தனிமைப்படுத்துகிறது.அல்சைமர் பெரும்பாலும் அமைதியாக பதுங்குகிறது, அன்றாட மறதி அல்லது மனநிலை என மாறுவேடமிட்டு. அதனால்தான் அல்சைமர் நோயின் முதல் அறிகுறிகளுக்கு குடும்பங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறோமோ, அவ்வளவு எளிதாக இருப்பதையும் உரையாற்றப்படுவதையும் ஏற்படுத்துகிறது. இந்த உலகில் அல்சைமர் தினத்தில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாம் விரும்பும் மக்களில் உள்ள சிறிய விஷயங்களை உண்மையில் கவனிப்போம். அல்சைமர் ஆரம்பத்தில் பிடிப்பது சிகிச்சையைப் பற்றியது அல்ல என்பதால், இது குடும்பங்களுக்கு நேரம்,…
ராயசோட்டி: ஆந்திர மாநிலம், அன்னமைய்யா மாவட்டம், ராயசோட்டியில் பெய்த கன மழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் எஸ்.எம். நகரில் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக பலரது வீடுகளில் மழை நீரும் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட ஷேக் முன்னி (28) எனும் பெண் தனது 4 வயது மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது மழை வெள்ளத்தில் மகன் அடித்துச் செல்வதை தடுக்க அவரும் வெள்ளத்தில் இறங்கினார். இதனால் இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரான கணேஷ் (25) என்பவர் இவர்கள் இருவரையும் காப்பாற்ற வெள்ளத்தில் இறங்கினார். ஆனால் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். பின்னர், நள்ளிரவு நேரத்தில் 3 பேருமே சடலமாக மீட்கப்பட்டனர். இதேபோன்று, ராயசோட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ட்யூஷனுக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் சிறுமி ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். 4 பேரின் உடல்களும் நேற்று பிரேதப்…
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி கைகுலுக்காத விவகாரத்தில் ஆண்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டல் விடுத்தது. ஆனால் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் ஆட்டத்திலும் பைகிராஃப்ட்டே மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட்டிருந்தார். இந்த நிலையே இன்றைய ஆட்டத்திலும் தொடரக்கூடும் என தெரிகிறது.
2025 முடிவடைவதற்கு முன்பு, ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று (செப்டம்பர் 21, 2025) நடைபெறும். சூரிய கிரகணம் இயற்கையின் மிகவும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகும், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது நிகழ்கிறது, நமது கிரகத்தில் ஒரு நிழலை செலுத்துகிறது. இந்த சீரமைப்பு சூரியனின் ஒளியை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கலாம், இது பார்வையாளர்களுக்கு மூச்சடைக்கக்கூடிய காட்சியை உருவாக்குகிறது. மொத்த சூரிய கிரகணங்கள் உள்ளன – மொத்த, பகுதி, வருடாந்திர மற்றும் கலப்பின. சூரியன் சந்திரனால் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும் போது, சில நிமிடங்கள் இரவாக மாறும் போது மொத்த கிரகணம் நிகழ்கிறது. ஒரு பகுதி கிரகணத்தில், சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஒரு வருடாந்திர கிரகணம் சந்திரன் சூரியனின் மையத்தை உள்ளடக்கியது, ஆனால் அதன் விளிம்புகளைத் தெரியும் என்பதால் ஒரு “நெருப்பு மோதிரம்” விளைவை உருவாக்குகிறது. ஒரு கலப்பின கிரகணம் என்பது மொத்த…
புதுடெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பெத் மூனி 75 பந்துகளில், ஒரு சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 68 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 72 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சேர்த்தனர். 413 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடி தொடக்கம் கொடுத்தார். மட்டையை சுழற்றிய அவர், 50 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்திய…
சிலந்திகள் தங்கள் வலைகளை உடைக்கத் தொடங்கும் போது, நாள் முடிவில் அவர்கள் செய்யும் ஒன்று. கிரகணம் நடந்தவுடன், அவற்றை மீண்டும் மீண்டும் உருவாக்கத் தொடங்குகிறது. ஜிம்பாப்வேயில் உள்ள ஹிப்போக்கள் ஆறுகளை விட்டு வெளியேறி, அவர்களின் இரவு நேர உணவு மைதானத்தை நோக்கிச் செல்வதைக் காண முடிந்தது, கிரகணம் நடுப்பகுதியில் காணாமல் போனவுடன் பணியை நிறுத்த வேண்டும். அனிமல்ஸ் இதழில் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, பாபூன்கள், கொரில்லாக்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஃபிளமிங்கோக்கள், கிளிகள் மற்றும் லோரிகெட்டுகள் ஆகியவற்றிலும் கவிதை மற்றும் பிற பதட்டத்தின் வெளிப்பாடுகள் காணப்பட்டன. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிமாடாலஜியில் அறிக்கையிடப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி, யெர்கேஸ் பிரைமேட் ஆராய்ச்சி மையத்தில் சிம்பன்ஸிகள் ஏறும் கட்டமைப்பின் மிக உயர்ந்த இடத்தை எவ்வாறு ஏறி வானத்தைப் பார்த்தார்கள், அது மீண்டும் பிரகாசிக்கும் வரை, மே 30, 1984 அன்று ஒரு வருடாந்திர கிரகணத்தின் போது.
புதுடெல்லி: பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியும் பாஜக.வும் சரிபாதி தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் மாநில சட்டப்பேரவையில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பதவிக் காலம் முடிவதால், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று தெரிகிறது. இந்நிலையில், பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) – பாஜக கூட்டணி தலைவர்கள், தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐஜத தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஹார் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினர். முப்பது நிமிடங்கள் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ஐஜத மூத்த…