நாக்பூர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 என்பது ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஒரே அரசியலமைப்பு என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நாக்பூரில் அரசியலமைப்பு முகப்புரை பூங்கா தொடக்க விழா இன்று (ஜூன் 28) நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க ஒரே ஒரு அரசியலமைப்பு மட்டுமே இருக்க வேண்டும் என கற்பனை செய்தவர் பி.ஆர்.அம்பேத்கர். ஒரு மாநிலத்துக்கு தனி அரசியலமைப்பு என்ற யோசனையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஒற்றை அரசியலமைப்பின் கீழ் ஒன்றுபட்ட இந்தியா என்ற அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து உச்ச நீதிமன்றம் உத்வேகம் பெற்றது” என தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, அதனை இரண்டு…
Author: admin
திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளிகளில் 20 சதவீதம் ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். திருநெல்வேலி அருகே சுத்தமல்லி பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பாஜகவில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது. வேண்டாம் திமுக; இனியும் வேண்டாம் என்பதுதான் எங்களது கோஷம். எங்கள் கூட்டணி குறித்து மட்டுமே ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. எங்களைச் சுற்றி சுற்றி வந்து இது குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி கேட்பீர்களா? விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு எத்தனை சீட் தருவீர்கள் என்று முதல்வரிடம் கேட்பீர்களா?. எனவே எங்கள் கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் கேட்க வேண்டாம் .தேர்தல் வரும்போது கேளுங்கள். மாறுதல் வேண்டும் என்பதுதான்…
உலகின் ஒவ்வொரு இடத்திற்கும் அதன் சொந்த கதை உள்ளது, கேட்க காத்திருக்கிறது. உலகில் சில இடங்கள் அதிசயங்களை விடக் குறைவாக இல்லை. அழகு, கட்டிடக்கலை மற்றும் பணக்கார வரலாறு -அவை எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக உள்ளன, இவை அனைத்தும் இந்த அதிசயங்களுக்கு அதிக ஆழத்தை சேர்க்கின்றன. அவற்றைப் பற்றிய கதைகளை நாம் எத்தனை முறை கேட்டு அவற்றைப் பார்த்தாலும், அவர்கள் அழகு, வரலாறு மற்றும் மந்திர கட்டிடக்கலை ஆகியவற்றைப் பற்றி அவர்கள் தொடர்ந்து பிரமித்திருக்கிறார்கள். ஒவ்வொரு அதிசயத்திற்கும் அதன் சொந்த வசீகரம், சொல்ல ஒரு தனித்துவமான கதை, மற்றும் வரைபடத்தில் அதன் சொந்த இடம்! மேலும் தாமதமின்றி, அதில் இறங்குவோம்
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளா, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரில் கடந்த 2 வாரங்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு நீர்வரத்து நேற்று மாலை 60,740 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி விநாடிக்கு நீர்வரத்து 73,452 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 4 மணிக்கு 114 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு 116.89 அடியாக உயர்ந்ததுள்ளது.…
வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு முன்பு, நகரங்கள், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் பலவற்றின் சலசலப்பான மையங்கள் இருந்தன. இந்த பண்டைய நகர்ப்புற அற்புதங்களில் சில பண்டைய உலகின் ஒரு காட்சியை நமக்கு வழங்குகின்றன.
சென்னை: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டு அதற்கான கருத்துருக்கள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரங்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உயர்நிலைக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியலில் உள்ள ஆசிரியர்களில் 4 சதவீத…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கனிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஆப்கனிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20=க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர், “ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ வாகனங்கள் மீது மோதியதில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். முந்தைய தாக்குதலின்போது 13 பேர் உயிரிழந்த…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நாளை (ஜூன் 29) காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது. ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு மாநில தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை மனுக்களை திரும்பப்பெறலாம். இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார். அநேகமாக ஒருவர் மட்டுமே மனு தாக்கல்…
நம்பிக்கை எப்போதும் ஒரு வளர்ந்து வரும் குரல் அல்லது விவேகமான கவனத்தை ஈர்க்கும் ஒரு அறைக்குள் நடக்காது. மிகவும் நம்பிக்கையுள்ள சிலர் அமைதியானவர்கள், பூமிக்கு கீழே, அவர்களிடம் இருப்பதில் திருப்தி அடைகிறார்கள்.உண்மையில், உண்மையான நம்பிக்கை எதையும் நிரூபிப்பது அல்ல; அதற்கு பதிலாக, நிலையான சரிபார்ப்பு தேவையில்லாமல் உங்கள் மதிப்பை அறிந்து கொள்வது பற்றியது. இது செயல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் ஒருவர் தங்களை மக்களிடையே முன்வைக்கும் விதம் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது; மேலும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்கள் எப்போதும் அச்சமின்றி உணரவில்லை, அவர்கள் எப்படியும் முன்னேறுவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.அதிக நம்பிக்கையுள்ள நபர்கள் தோல்விக்கு பயப்படுவதில்லை, அவர்கள் கருத்துக்களை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் குற்ற உணர்ச்சியின்றி ஆம் அல்லது இல்லை என்று எப்போது சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் நம்பிக்கை ஒன்று அல்லது இல்லாத ஒன்று அல்ல. இது படிப்படியாக ஒருவர் உருவாக்கக்கூடிய ஒரு திறமை.நம்பிக்கையுள்ளவர்கள் பயிற்சி செய்யும் ஐந்து அன்றாட…
புதுடெல்லி: சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்த சமண துறவி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் எனக்கு ‘தர்ம சக்ரவர்த்தி’ பட்டம் வழங்கி கவுரவித்தீர்கள். நான் இதற்கு தகுதியானவன் என்று கருதவில்லை. ஆனால், துறவிகளிடமிருந்து நாம் எதைப் பெற்றாலும், அதை ‘பிரசாதமாக’ ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரம். எனவே, இந்த ‘பிரசாதத்தை’ நான் பணிவுடன் ஏற்றுக்கொண்டு, அதை மா பாரதிக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று பிரதமர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாள் சிறப்பு வாய்ந்தது,…