Author: admin

சென்னை: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மனோ தங்கராஜ் நாளை (ஏப். 28) மீண்டும் அமைச்சராகிறார். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் வனத்துறை அமைச்சர் கே. பொன்முடி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்குமாறு முதல்வர், ஆளுநருக்கு பரிந்துரைத்தார். ஆளுநர் இந்தப் பரிந்துரையை அங்கீகரித்துள்ளார். அதோடு, அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் துறை ஒதுக்கீடுகளுக்கான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வசம், மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் போக்குவரத்து மற்றும் மின்சார அமைச்சராக இருப்பார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஒதுக்கப்படுகிறது. எனவே, அவர் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருப்பார். பால் மற்றும்…

Read More

‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் சூர்யா, ‘ரெட்ரோ’ படக்குழுவினர் குறித்தும், அவர்களுடைய பணி குறித்தும் பேசினார். கடந்த முறை ‘கங்குவா’ படத்துக்கு விளம்பரப்படுத்தும்போது, சூர்யா நடனமாடினார். அந்தப் பாடல்கள் எல்லாம் பாடப்பட்டாலும், சூர்யா வெறுமனே கை மட்டும் தட்டிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ பதிவினை முன்வைத்து பலரும் இணையத்தில் “உங்களை இப்படி பார்த்ததில்லை சூர்யா” எனப் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். இதனிடையே சூர்யா தனது பேச்சினை முடிக்கும் முன்பு, ‘கங்குவா’ தோல்வி குறித்து மறைமுகமாக பேசினார். அதில் “பாக்சிங் போட்டிகளில் நீங்கள் விழும்போது தோற்பதில்லை. எழுந்திருக்க மறுக்கும் போதுதான் தோற்றுவிடுகிறீர்கள். நாங்கள் மீண்டும் பெரியளவில் மீண்டு வருவோம். மீண்டும் ஒரு வலுவான அடி…

Read More

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்தில் வீழ்த்​தி​யது சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்​களில் 154 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக டெவால்ட் பிரே​விஸ் 25 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 42 ரன்​களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்​துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்​களும் விளாசினர். ஹைத​ரா​பாத் அணி சார்​பில் பந்து வீச்​சில் ஹர்​ஷால் படேல் 4 ஓவர்​களை வீசி 28 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பாட் கம்​மின்​ஸ், ஜெயதேவ் உனத்​கட் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் முகமது ஷமி, கமிந்து மெண்​டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். 155 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 155 ரன்​கள் எடுத்து…

Read More

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் 26 இந்துக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நாங்கள் துணை நிற்போம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாட வேண்டும். நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம். இவ்வாறு துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார். பிறப்பால் அமெரிக்கரான துளசி கப்பார்ட், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றி வருகிறார். இவர் அமெரிக்க எம்பியாக பதவி வகித்தபோது பகவத் கீதை மீது பிரமாணம் செய்து பதவியேற்றார். அமெரிக்க புலனாய்வு அமைப்பான பிஎப்ஐயின் இயக்குநராக காஷ் படேல் பதவி…

Read More

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கரமடத்தின் அடுத்த பீடாதிபதியாக கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 30-ம் தேதி சன்யாச தீக்‌ஷயை காஞ்சி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார். இது தொடர்பாக காஞ்சி சங்கர மட ஸ்ரீகார்யம் (மேலாளர்) சல்லா விஸ்வநாத சாஸ்திரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப்.30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா திராவிட்-டுக்கு சன்யாச தீக்‌ஷை வழங்குகிறார். இந்தப் புனித நிகழ்வு கிமு 482-இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் அன்னவரம் க்‌ஷேத்திரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலங்கானா மாநிலம்…

Read More

காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக 3 பேருக்கு நன்னடைத்தைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதுகள்’ இரண்டு பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால், மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத், சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி ஆகிய மூன்று பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா விருதுகளை வழங்கினார். விழாவில் விருந்தினர்கள், விருதாளர்கள் பேசியதாவது: காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான்: மத நல்லிணக்கத்தை பேணியதற்காக மூன்று பேருக்கு விருது…

Read More

புதுடெல்லி: இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் 300கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாளரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம். கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம். விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும். அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ,…

Read More

சென்னை: அண்மையில் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ரெட்மி ஏ5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விற்பனை ஏப்ரல் 16 முதல் இந்திய சந்தையில் தொடங்கி உள்ளது. அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் சில்லறை வர்த்தக பிரிவில் இந்த போனை பெறலாம். சிறப்பு அம்சங்கள்: 6.88 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம் ஆக்டா-கோர் Unisoc டி7250…

Read More

திண்டுக்கல்: சரித்திரத்தில் இருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக்கொள்ளாத நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு மிகச்சரியான பாடத்தை இந்தியா கொடுக்கும், என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அபிராமியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிர தாக்குதலில் மக்கள் உயிரிழந்த பிறகும் பாகிஸ்தான் மீது இந்தியா படைஎடுக்ககூடாது என்று கூறும் திருமாவளவன், தனது வாக்கு வங்கி பலப்படும் என நினைத்து கூறுகிறார். காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியிருக்கிறது கேரள ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்க பரிபூரண அதிகாரம் உள்ளது என. இரண்டு தீர்ப்புகள் குறித்தும் சட்ட வல்லுனர்களை கொண்டு பார்க்கவேண்டும். திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தெய்வங்களை மலைக்கோட்டையின் மேல் வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்தவகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமோ அதை கொடுப்போம். தீவிரவாதிகளின் சதி பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு…

Read More

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி கண்​டது. போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் கலந்து கொண்ட ஹைத​ரா​பாத் அணி​யின் பயிற்​சி​யாளர் டேனியல் வெட்​டோரி​யிடம், நடப்பு சீசனில் எந்த இடகை சுழற்​பந்து வீச்​சாளர் சிறப்​பாக செயல்​படு​கிறார் என கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்த அவர், “குஜ​ராத் அணி​யின் சாய் கிஷோர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். அவருக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. இதே​போன்று மும்பை அணி​யில் மிட்​செல் சாண்ட்​னர், சிஎஸ்​கே​வில் ஜடேஜா ஆகியோ​ரும் ஒரு சில ஆட்​டங்​களில் கிடைத்த வாய்ப்​பு​களில் பஞ்​சாப் அணியின் ஹர்​பிரீத் பிராரும் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர். சாய் கிஷோர் அற்​புத​மான பந்​து​வீச்​சாளர். ஏலத்​தில் நாங்​கள் அவரை மிக​வும் உன்​னிப்​பாக கவனித்​தோம். அவரை அணிக்கு தேர்வு…

Read More