மாற்றுப் பணி உத்தரவு பெற்று, வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனே அங்கிருந்து விடுவித்து அவரவர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த 2024 -25ம் ஆண்டில் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் வேறு பள்ளிகளில் மாற்றுப் பணி பார்ப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி உத்தரவு மூலம் வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அங்கிருந்து உடனடியாக விடுவித்து, பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Author: admin
புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவிள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் இந்த போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், தரையிலிருந்து…
சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நீண்ட காலத்துக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்சி எம்56 – சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் …
திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும். இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது.இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும். தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து…
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவுக்கு இது 9-வது ஆட்டத்தில் 7-வது தோல்வியாக அமைந்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் மங்கி உள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: இந்த சீசனில் நாங்கள் வெளிப்படுத்திய திறனால் ஏலத்தில் முழுமையாக சரியானவற்றை பெற்றோம் என்பது சொல்வது கடினம். மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன, அதுதான் ஏலத்தின் புள்ளி. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ஏலம் என்பது முழுமையான அறிவியல் இல்லை. ஏலம் மிருகம் போன்ற பாய்ச்சல் கொண்டது. 25 மணி நேரத்துக்குள் வீரர்களை வாங்குகிறோம். அதன் முடிவில் மனரீதியாகவும், சில நேரங்களில் உடல் ரீதியாகவும் சோர்வடைவதை பார்க்க முடியும்.…
இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்று சமுத்திரக்கனி புகழாரம் சூட்டியிருக்கிறார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே பல்வேறு இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் பேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்த நூற்றாண்டில் ஆகச் சிறந்த படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படம் பார்த்தவுடன் அவ்வளவு கனமாக இருந்தது, பெருமையாகவும் இருந்தது. இப்படம் பார்த்தவுடன் சசிகுமாரை கையெடுத்து கும்பிட வேண்டும் என தோன்றியது. இப்படியொரு படம் இதுவரை யாரும் எடுத்ததில்லை. உலகத்தில் இருக்கும் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும். சசிகுமாருக்கு ‘சுப்பிரமணியபுரம்’, எனக்கு ‘நாடோடிகள்’ போல் அபிஷனுக்கு ‘டூரிஸ்ட்…
லாகூர்: கோரி, ஷாஹீன், கஸ்னவி ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியதாவது: “பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், அவர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் வெறும் கண்காட்சிக்கானது அல்ல. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 130…
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “ரெங்கா.. கோவிந்தா..” என்ற கோஷம் விண்ணதிர தேரை வடம்பிடித்து இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேர், பங்குனித் தேர், சித்திரைத் தேர் என மூன்று தேர் திருவிழாக்கள் நடைபெறும். இத்திருவிழாக்களில் விருப்பன் திருநாள் என்றழைக்கப்படும் சித்திரைத் தேர் திருவிழா, பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்கும் விழாவாக விளங்குகிறது. நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.18 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் தினந்தோறும் நம்பெருமாள் தங்கக் கருட வாகனம், யாளி வாகனம், யானை வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூந்தேர், கற்பக விருட்ச வாகனம் என்று பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் இன்று காலை வெகு…
நீட் தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க, என்டிஏ இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ (NEET) தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 4-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…
புதுச்சேரி: பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ சிலை திறப்பு நிகழ்வு நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிலையை திறந்து வைத்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தின் வேங்கை வயல், கள்ளக்குறிச்சி, மேல்பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதற்கெல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே? திமுகவோடு நாம் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள். நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக-அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடும் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் 2 அணியிலும் பேசும் ராஜதந்திரம் நமக்குத் தெரியாது. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும்…