Author: admin

திண்டுக்கல்: சரித்திரத்தில் இருந்து ஒரு பாடத்தை கூட கற்றுக்கொள்ளாத நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானுக்கு மிகச்சரியான பாடத்தை இந்தியா கொடுக்கும், என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் அபிராமியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக கருத்தரங்கு இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீவிர தாக்குதலில் மக்கள் உயிரிழந்த பிறகும் பாகிஸ்தான் மீது இந்தியா படைஎடுக்ககூடாது என்று கூறும் திருமாவளவன், தனது வாக்கு வங்கி பலப்படும் என நினைத்து கூறுகிறார். காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. இதே உச்சநீதிமன்றம் தான் சொல்லியிருக்கிறது கேரள ஆளுநருக்கு துணைவேந்தர்களை நியமிக்க பரிபூரண அதிகாரம் உள்ளது என. இரண்டு தீர்ப்புகள் குறித்தும் சட்ட வல்லுனர்களை கொண்டு பார்க்கவேண்டும். திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தெய்வங்களை மலைக்கோட்டையின் மேல் வைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்தவகையில் அழுத்தம் கொடுக்கவேண்டுமோ அதை கொடுப்போம். தீவிரவாதிகளின் சதி பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு…

Read More

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் சிஎஸ்கே அணியை வீழ்த்​தி​யது. 155 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி கண்​டது. போட்டி முடிவடைந்​ததும் நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் கலந்து கொண்ட ஹைத​ரா​பாத் அணி​யின் பயிற்​சி​யாளர் டேனியல் வெட்​டோரி​யிடம், நடப்பு சீசனில் எந்த இடகை சுழற்​பந்து வீச்​சாளர் சிறப்​பாக செயல்​படு​கிறார் என கேட்​கப்​பட்​டது. இதற்கு பதில் அளித்த அவர், “குஜ​ராத் அணி​யின் சாய் கிஷோர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். அவருக்கு சிறந்த எதிர்​காலம் உள்​ளது. இதே​போன்று மும்பை அணி​யில் மிட்​செல் சாண்ட்​னர், சிஎஸ்​கே​வில் ஜடேஜா ஆகியோ​ரும் ஒரு சில ஆட்​டங்​களில் கிடைத்த வாய்ப்​பு​களில் பஞ்​சாப் அணியின் ஹர்​பிரீத் பிராரும் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளனர். சாய் கிஷோர் அற்​புத​மான பந்​து​வீச்​சாளர். ஏலத்​தில் நாங்​கள் அவரை மிக​வும் உன்​னிப்​பாக கவனித்​தோம். அவரை அணிக்கு தேர்வு…

Read More

சிம்புவுக்கு நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு, ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் சிம்புவுக்கு நாயகியாக நடிக்க கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிம்பு – கயாடு லோஹர் கூட்டணியுடன் சந்தானமும் நடிக்கவுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் உறுதி செய்திருந்தார் சந்தானம். இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ராம்குமார் படத்தினை முடித்துவிட்டு, தனது 50-வது படத்துக்கு செல்கிறார் சிம்பு. அதனை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இத்துடனேயே தனது 51-வது படத்தையும் தொடங்குகிறார் சிம்பு. அதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Read More

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் அமைந்துள்ள பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் சனிக்கிழமை (ஏப்.26) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதில் 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்துள்ளது. ஈரான் தலைநகரில் தெஹ்ரானில் இருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதும் வான்வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த விபத்து ஏற்பட்டது. உலக அளவிலான எண்ணெய் விநியோக பணியில் இந்த பகுதி முக்கியமானதாக உள்ளது. துறைமுகத்தில் இருந்த ரசாயனங்களை மிகவும் மோசமான முறையில் பராமரிப்பின்றி அலட்சியமாக கிடங்குகளில் வைத்திருந்ததுதான் காரணம் என்கிறார் ஈரானின் நெருக்கடி மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளராக ஹுசைன் சபாரி. “கன்டெய்னர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தான் இந்த வெடிவிபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு…

Read More

சென்னை / காஞ்சிபுரம்: ​காஞ்சி காமகோடி பீடத்​தின் 71-வது பீடா​திப​தி​யாக ரிக் வேத​விற்​பன்​னர் ஸ்ரீ கணேச சர்​மா​ தி​ரா​விட் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். அட்சய திரு​தியை தினத்​தில்​(ஏப்​.30-ம் தேதி), அவர் சந்​நி​யாஸ்ரம தீட்சை பெற உள்​ளார் என்று காஞ்சி சங்கர மடத்​தின் ஸ்ரீ கார்​யம் சல்லா விஸ்​வ​நாத சாஸ்​திரி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக காஞ்சி சங்கர மடம் சார்​பில் அவர் வெளி​யிட்ட அறிக்​கை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் 70-வது பீடா​திபதி ஜகத்​குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், புனித அட்சய திரு​தியை தினத்​தில் (ஏப்​.30-ம் தேதி, புதன்​கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்​ரமண்ய கணேச சர்மா திரா​விட்​டுக்​கு, காஞ்சி காமாட்சி அம்​மன் கோயி​லில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்​தத்​தில் காலை 6 மணி முதல் 9 மணிக்​குள் சந்​நி​யாஸ்ரம தீட்சை அருள உள்ளார். ஸ்ரீ ஆதிசங்​கரர் ஜெயந்தி: இந்த புனித நிகழ்ச்சி கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி…

Read More

மாற்றுப் பணி உத்தரவு பெற்று, வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனே அங்கிருந்து விடுவித்து அவரவர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த 2024 -25ம் ஆண்டில் அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சில பட்டதாரி ஆசிரியர்களுக்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையில் வேறு பள்ளிகளில் மாற்றுப் பணி பார்ப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, கடந்த ஆண்டில் மாற்றுப் பணி உத்தரவு மூலம் வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை அங்கிருந்து உடனடியாக விடுவித்து, பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவிள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் இந்த போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், தரையிலிருந்து…

Read More

சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். நீண்ட காலத்துக்கு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எம்’ வரிசையில் கேலக்சி எம்56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் கேலக்சி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்சி எம்56 – சிறப்பு அம்சங்கள் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் …

Read More

திண்டுக்கல்: தொகுதி ஒதுக்கீடு குறித்து இபிஎஸ், அமித்ஷா இருவரும் பேசிக்கொள்வார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும். இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது.இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும். தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து…

Read More

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் சேப்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. சிஎஸ்​கேவுக்கு இது 9-வது ஆட்​டத்​தில் 7-வது தோல்​வி​யாக அமைந்​தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பு மிக​வும் மங்கி உள்​ளது. இந்​நிலை​யில், ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஸ்டீபன் பிளெமிங் கூறிய​தாவது: இந்த சீசனில் நாங்​கள் வெளிப்​படுத்​திய திற​னால் ஏலத்​தில் முழு​மை​யாக சரி​யானவற்றை பெற்​றோம் என்​பது சொல்​வது கடினம். மற்ற அணி​கள் சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளன, அது​தான் ஏலத்​தின் புள்​ளி. ஆனால் எங்​களால் அதை சரி​யாக செய்ய முடிய​வில்​லை. ஏலம் என்​பது முழு​மை​யான அறி​வியல் இல்​லை. ஏலம் மிரு​கம் போன்ற பாய்ச்​சல் கொண்​டது. 25 மணி நேரத்​துக்​குள் வீரர்​களை வாங்​கு​கிறோம். அதன் முடி​வில் மனரீ​தி​யாக​வும், சில நேரங்​களில் உடல் ரீதி​யாக​வும் சோர்​வடைவதை பார்க்க முடி​யும்.…

Read More