மதுரை: “பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். அந்த நாட்டுடன் உலக நாடுகள் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. மத தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாகிஸ்தான், அதனை தூண்டி விடுவது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இதனால் பாகிஸ்தான் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை. நேரு காலத்தில் பல இடங்களை இழந்துள்ளோம். இந்த முறை பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நல்லவராக இருப்பதை விட வல்லவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நம்பர் ஒன்னாக உள்ளார். இந்தியா எப்போதும் சமாதானத்தை தான் விரும்புகிறது.…
Author: admin
‘ரெட்ரோ’ பட விழாவில் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் நடிகை சூர்யா. சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா. இதன் தெலுங்கு விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர் நாக வம்சி, இயக்குநர் வெங்கி அட்லுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ் படமாக உருவானாலும், பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா. ‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதனை முடித்துவிட்டு தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்…
கொல்கத்தா: “பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதனால், பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் ரீதியிலான உறவுகளை இந்திய கிரிக்கெட் அணி முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும். அது ஐசிசி தொடர்கள் என்றாலும் சரி” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான கங்குலி, தனது கருத்தை பகிர்ந்துள்ளார். “பாகிஸ்தான் உடன் கிரிக்கெட் ரீதியான உறவை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். நூறு சதவிதம் இதை செய்ய வேண்டும். இது மாதிரியான கடுமையான நடவடிக்கை அவசியம் தேவை. ஆண்டுதோறும் இதுமாதிரியான தாக்குதல் நடக்கிறது. தீவிரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. அப்படி செய்யவும் கூடாது. நாம்…
வாடிகன்: வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 1300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88 வது வயதில் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வாடிகன் சென்றார். இரண்டு நாள் பயணமாக வாடிகன் சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, இந்திய அரசு மற்றும் மக்கள் சார்பாக பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவருடன் சென்ற மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் நலன் மற்றும் மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜோசுவா டி…
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் கோயில் சித்திரைப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி, கொடிமரம் முன்பு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் உட்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாவட்ட நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், கோயில் கண்காணிப்பாளர் ரவி, செயல் அலுவலர் சத்தியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று முதல் மே 10-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் புறப்பாடு நடைபெறும். பிரதான நிகழ்ச்சி எண் திசை கொடியேற்றம் மே 1-ம் தேதி காலை 10.45 மணிக்கு மேல் காலை 11.45 மணிக்குள் நடைபெறும். மே 2-ம் தேதி சந்திரசேகரர் முத்து பல்லக்கில் புறப்பாடு, மே 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளல், அன்று காலை 5.30 மணிக்கு மேல் காலை 6.30 மணிக்குள் தேரோட்டம், மே…
கோடை விடுமுறை காலங்களில் மாணவர்கள் டிவி, செல்போனில் அதிகமான நேரத்தை செலவிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. எனவே, இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு: மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின்போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும்…
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எடுத்துக்கொள்கிறது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் வழக்கை தேசிய புலனாய்வு முகமை முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடைமுறையைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்ள்ளது. ஏற்கனவே பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைரசன் புல்வெளியில் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ குழுவினர் புதன்கிழமை முதல் முகாமிட்டு தாக்குதலுக்கான ஆதாரங்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமையின் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி மேற்பார்வையிலான குழு அமைதியான மற்றும் அழகிய பைசரன் புல்வெளியில் கண்கள் முன்னே தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றன. காஷ்மீரில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவங்களை ஒரு வரிசையில்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வி50 போனை விவோ அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 882 சென்சார் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள…
சென்னை: பஹல்காம் தாக்குதல் 140 கோடி இந்திய மக்கள் மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ஏறக்குறைய 26 பேர் உயிரிழந்து இன்றோடு ஐந்து தினங்கள் ஆகிவிட்டன. இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருத இயலாது. 140 கோடி இந்திய மக்கள் மீது நடத்தப்பட்ட யுத்தமாகத் தான் கருத வேண்டும். அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். நமது நோக்கம் பாகிஸ்தானோடு இந்தியா ஒரு ராணுவ முஸ்தீப்பை அல்லது ராணுவ நடவடிக்கையைக் காட்ட வேண்டும் என்பது அல்ல. ஒரு போர் என்பது எவ்வளவு பெரிய பொருளாதார ரீதியான பாதிப்புகளை உருவாக்கும்; அதே போல உயிரிழப்புகளை உருவாக்கும் என்பது தெரியும்.…
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தயாரான உடனே இயக்குநர்கள் பலருக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பார்த்த இயக்குநர்கள் அனைவரும் ஒன்றிணைந்த விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர்கள் என அனைவரும் பேசினார்கள். இதில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் குறிப்பிட்டு நன்றி கூறினார். இறுதியாக “கடைசியாக ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அகிலா இளங்கோவன். 6-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து உன்னை தெரியும். 10-ம் வகுப்பில் இருவரும் நட்பாக இருக்கிறோம். இந்த இடத்தில் உன்னிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு ஒன்று கேட்க வேண்டும் என தோன்றுகிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதி என்னை திருமணம் செய்து…