Author: admin

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க விரும்பும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஏப்.15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 28-ம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் மே 8-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணிக்குமேல் 8.59 மணிக்குள் நடைபெறவுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு பக்தர்கள் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான மற்றும் கோயிலின் இணையதளமான -ல் ஏப்.29 முதல் மே 2-ம் தேதி இரவு 9 மணிவரை ரூ.500, ரூ.200 கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் இரண்டு ரூ.500 கட்டணச்சீட்டும் அல்லது…

Read More

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற உணர்வையே இந்தப் படம் தரவில்லை, இயக்குநர் தன் கல்லூரி கால வாழ்க்கையைத் தான் எடுத்திருப்பார் என நினைத்தேன். மிக கவனமாக அர்ப்பணிப்புடன் எடுக்கப்பட்ட படைப்பாகத் தெரிந்தது. தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சனைகளை பேசும் கதைகள் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் கதைகள் என்று ஆகிவிட்டது. பெண்ணுரிமை, வாழ்வியல் பிரச்சினை பற்றிய கதைகளே இல்லாமல் போய்விட்டது. அதைப் பேசும் படமாக இப்படம் இருப்பதாக உணர்கிறேன். பெண்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்…

Read More

சென்னை: திருவல்லிக்கேணியில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடக்க இருந்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தல், எல்இடி திரைகள், உணவு பொருட்களை பறிமுதல் செய்து போலீஸார் எடுத்து சென்றனர். பிரதமர் மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக சார்பில் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் அவ்வை சண்முகம் சாலையில் மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. ஆனால், போலீஸார் அதற்கு திடீரென அனுமதி மறுத்து, சாலையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல், மேடை, எல்இடி திரை மற்றும் ஒலிபெருக்கிகளை அங்கிருந்து அகற்றி பறிமுதல் செய்தனர். மேலும், ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைவ, அசைவ உணவையும் போலீஸார் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதனால், பாஜகவினருக்கும் போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், குறிப்பிட்ட…

Read More

இஸ்லாமபாத்: ‘‘நாங்கள் வைத்துள்ள 130 அணு ஆயுதங்கள் காட்சிக்கு அல்ல. இந்தியாவுக்காகத்தான் வைத்துள்ளோம்’’ என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என இந்தியா அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி, ‘‘சிந்து நதி எங்களுக்கு சொந்தமானது. அதில் தண்ணீரை நிறுத்தினால் ரத்த ஆறு ஓடும்’’ என்றார். இந்நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிப் அப்பாஸி இது குறித்து கூறுகையில், ‘‘ சிந்து நதியில் இந்தியா தண்ணீரை நிறுத்தினால், போருக்கு தயாராக இருக்க வேண்டும். கோரி, ஷஹீன் மற்றும் ஹஸ்னவி போன்ற ஏவுகணைகளையும், 130 அணு ஆயுதங்களையும் நாங்கள் காட்சிக்கு வைத்திருக்க வில்லை. இந்தியாவிற்காகத்தான் வைத்துள்ளோம்’’ என கூறியுள்ளார்.

Read More

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பரவலாக பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் அது 40-50 சதவீத அலுவலக வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த ஆட்டோம்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் அரிந்தம் பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் லிங்டின் தளத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வரவு இந்தியாவில் ஒயிட்-காலர் ஜாப் எனப்படும் அலுவலக பணி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பிபிஓ துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏஐ வரவால் அலுவலக வேலைவாய்ப்புகளில் 40-50 சதவீதம் பறிபோகும் சூழல் உருவாகும். இது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவகளுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சவாலை உருவாக்கும். பொதுவாக இந்தியாவின் தயாரிப்பு துறை நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஏஐ வரவு பிரச்சினையின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பதால் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன்…

Read More

சென்னை: மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை யுபிஐ ‘க்யூஆர் கோடு’ மூலமாக செலுத்துவதற்கான வசதிகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது வளாகத்தில் ஏற்படுத்த வேண்டுமென யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: டிஜிட்டல் சார்ந்த அறிவாற்றாலை சமூகத்தில் அனைவரும் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடனும், அறிவுசார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. பணபரிமாற்றத்தை குறைத்து அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நம்நாட்டில் யுபிஐ பாதுகாப்பான, விரைவான பணப்பரிமாற்றத்தையும் உறுதி செய்கிறது. இதற்கிடையே கிராமப்புற கல்வி நிலையங்களில் மாணவர்கள் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பாடப் புத்தகங்கள் உட்பட பல்வேறு கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்துவதை விரும்புகின்றனர். இது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கல்வி சார்ந்த பணப்பரிமாற்றங்களை மாணவர்கள் ஆன்லைன்…

Read More

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. சொந்த மைதானத்​தில் இன்று விளை​யாட உள்​ள​தால் அந்த அணி வெற்​றிப் பாதைக்​குத் திரும்​ப வேண்​டும் என ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். அந்த அணி கடைசி​யாக நடை​பெற்ற 5 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்டு மோச​மான நிலை​யில் உள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அந்த அணி குஜ​ராத்தை வீழ்த்த வேண்​டும் என்று ரசிகர்​கள் காத்​திருக்​கின்​றனர். கடைசி​யாக ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அந்த அணி 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. 206 ரன்​கள் இலக்​குடன் விளை​யாடிய ராஜஸ்​தான், 194 ரன்​கள்…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹம்காம் அருகே உள்ள பைசரான் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த பல வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலில் இதுவும் ஒன்றாகும். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்…

Read More

திருச்சி: சமயபுரத்தில் நேற்று மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேர் பிற்பகல் 3 மணிக்கு நிலையை அடைந்தது. நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் வடம் பிடித்த பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. மேலும், நீர்மோர், பானகம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் தலைமையில் 1,263 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 80 சிசிடிவி…

Read More

‘96 பார்ட் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள். தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விலகினார். தற்போது ‘96’ 2-ம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதை சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் உறுதிப்படுத்தி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் முடிவில் இருந்தே, 2-ம் பாகத்துக்கான கதையினை எழுதியிருக்கிறார் பிரேம்குமார்.

Read More