Last Updated : 11 Apr, 2025 12:24 PM Published : 11 Apr 2025 12:24 PM Last Updated : 11 Apr 2025 12:24 PM சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று விமர்சையாக நடந்தது ஈரோடு: சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.11) விமர்சையாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இக்கோயிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பங்குனி உத்திரத்தை ஒட்டி, வள்ளி, தெய்வானை சமேதரராக மலர் அலங்காரத்தில் அருள் பாலித்த சென்னிமலை முத்துக்குமாரசுவாமி. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி…
Author: admin
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘வீரா ராஜ வீரா’ பாடல் தனது தந்தை நசீர் ஃபயாசுதீன் தாகர் மற்றும் மாமா ஜஹீருதீன் தாகர் இருவரும் சேர்ந்து இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் வாசிஃபுதீன் தாகர் கூறியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அந்த பாடலை பயன்படுத்துவதை தடுக்கவும், தனக்கு இழப்பீடு வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை…
சென்னை: சர்.பிட்டி. தியாகராயரின் 174-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ரிப்பன் மாளிகையில் அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுப்பட்டது. திராவிட இயக்கத்தின் முன்னோடியும், நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவருமான ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் கடந்த 1852-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி பிறந்தார். சமூகநீதி காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் இவர் பாடுபட்டார். இவரது 174-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலக வளாகமான ரிப்பன் மாளிகையில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஏஎம்வி. பிரபாகரராஜா எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி ஆணைர் ஜெ.குமரகுருபரன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தியாகராயர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின்…
புதுடெல்லி: “இந்த முறை சமரசம் இருக்காது. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள்” என்று பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வரும் நாடு பாகிஸ்தான். இதற்கு முன் இருந்த அரசாங்கங்கள், பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும்போதெல்லாம் சிறிது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு, பின்னர் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால், இந்த முறை சமரசம் இருக்காது; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மண்டியிடுவார்கள். அரசு என்ன செய்யப் போகிறது என்பதை நாம் இங்கே ஊகிக்க முடியாது. நம்மிடம் ஒரு வலுவான, முதிர்ந்த அரசு உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் முட்டாள்தனமான…
Last Updated : 28 Feb, 2025 10:29 AM Published : 28 Feb 2025 10:29 AM Last Updated : 28 Feb 2025 10:29 AM இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் ஒன்று, ‘அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்ப்பது.’ அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரது தர்க்க – பகுத்தறிவு சார்ந்த மனப்பான்மை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நாம் தர்க்கரீதியாகவும் பகுத்தறிந்தும் அணுகுகிறோம் என்றால் நாம் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்று பொருள். தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் அறிவியல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நம்மால் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியும். நம் கண் முன் நடப்பவை குறித்தும் நமக்குச் சொல்லப்படுபவை குறித்தும் அறிவியலின் துணையோடு பகுத்தறிந்து சிந்தித்து முடிவெடுக்க முடியும். அறிவியலுக்குப் புறம்பான தகவல்களையும் செயல்பாடுகளையும் புறக்கணிக்க முடியும். சுதந்திர இந்தியாவின் முதல்…
ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,014 கல்லூரி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர்-செயலர் எஸ்.வின்சென்ட் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலையில் கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் இளங்கலையில் தொழில்முறை படிப்புகள் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழல், மருத்துவம், இயற்பியல், சமூகவியல், கால்நடை மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் , வேதியியல், இயந்திரவியல், கணினி அறிவியல், மின்சாரம், மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் 1,014 சாத்தியமான திட்டங்கள் ஐஐடி, சிஎல்ஆர்ஐ, நியாட் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற…
Last Updated : 25 Apr, 2025 07:40 AM Published : 25 Apr 2025 07:40 AM Last Updated : 25 Apr 2025 07:40 AM கேரள மாநிலம் கொச்சியின் தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதன் இறுதி நாளான நேற்று ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவை சேர்ந்த அனிமேஷ் குஜூர் பந்தய தூரத்தை 20.40 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு போடடியில் அம்லான் போர்கோகெய்ன் பந்தய தூரத்தை 20.52 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்த புதிய சாதனையை படைத்துள்ளார் அனிமேஷ் குஜூர். ஆசிய அளவில் அனிமேஷ் குஜூரின் சாதனை முதலிடத்திலும் உலக அளவில் 35-வது இடத்திலும் உள்ளது. எனினும் அனிமேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். உலக…
வாடிகன்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. அவரது மறைவை வாடிகன் தேவாலய நிர்வாகம் உறுதி செய்துள்ளது. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலையில் சீரற்ற தன்மையே நிலவியது. இந்நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. முதல் லத்தீன் அமெரிக்க போப்! ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம்…
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழாவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலை செப்புத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவில் தினசரி பல்வேறு அலங்காரங்களில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் நாள் விழாவான ஏப்ரல் 7-ம் தேதி கருட சேவை நடைபெற்றது. நேற்று இரவு ஆண்டாள் பூப்பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இன்று(ஏப்ரல் 11) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை 7.05 மணிக்கு செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக திவ்ய தம்பதிகள் ஆண்டாள் ரெங்கமன்னார் ராஜ அலங்காரத்தில் செப்புத் தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோபாலா’ கோஷம் முழங்க…
2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அண்மையில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு இப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார். சிம்ரனின் நடனத்தை அப்படியே ரீகிரியேட் செய்திருப்பதாக ரசிகர்கள் பலரும் பிரியா பிரகாஷ் வாரியரை பாராட்டி வருகின்றனர்.