Author: admin

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் நேற்று முன்தினம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் அடங்கும். தொடக்க பேட்ஸ்மேன்களில் அபிஷேக் போரெல் தனது அதிரடியால் பலம் சேர்க்கிறார். ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள டு பிளெஸ்ஸிஸ், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமான ஆடுகளத்தில் ரன்கள் சேர்க்க மிவும் சிரமப்பட்டார். நடப்பு சசீசனில் 364 ரன்கள் சேர்த்துள்ள கே.எல்.ராகுலும் நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சுக்கு…

Read More

மாஸ்கோ: உக்ரைன் உடன் 3 நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில்” மனிதாபிமான காரணங்களுக்கான அடிப்படையில் அதிபர் புதின் மே 8 முதல் 10 வரை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதனை உக்ரைனும் பின்பற்ற வேண்டும். ஆனால், இதனை மீறி உக்ரைன் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷ்யா அதற்கான தகுந்த பதிலடியை கொடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்” உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் நான் மகிழ்ச்சியடையவில்லை. அது அவசியமில்லை. மிகவும் மோசமான நேரம். விளாடிமிர் , நிறுத்து! வாரத்துக்கு 5,000 வீரர்கள் உயிரிழக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார். வெற்றி தினம்: இந்த நிலையில், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் மே 9 வெற்றி தினத்தையொட்டி…

Read More

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு தின திருவிழாவுக்காக இன்று கொடியேற்றம் நடைபெற உள்ளது. தமிழக எல்லையான குமுளி அருகே விண்ணேற்றிப்பாறை எனும் இடத்தில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு தமிழகம், கேரளா வழியே செல்ல இரண்டு தனித்தனி பாதைகள் உள்ளன. லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கிமீ. தூர வனப்பாதையில் நடந்து செல்லலாம். இதே போல் குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கிமீ. தூரத்தில் ஜீப்பிலும் செல்லலாம். வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில் என்பதால் சித்திரை மாத முழுநிலவன்று ஒருநாள் மட்டும் இங்கு திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்றம் இன்று (செவ்வாய்) பளியன்குடியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ஆகவே நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள், விரதம் ஏற்பவர்கள் மாலை அணிந்து அன்று விரதத்தை தொடங்கலாம் என்று மங்கலதேவி கண்ணகி…

Read More

பஹல்காம் தாக்குதல் குறித்த ஆண்ட்ரியாவின் கருத்து, இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தினால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதில் ஆண்ட்ரியாவின் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதல் குறித்து ஆண்ட்ரியா, “ஒரு காலத்தில் நானும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்துவிட்டேன். அதே வேளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் நிலையை நினைத்து வருந்துகிறேன். நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் / சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான்…

Read More

தமிழகத்தில் போதைப்பொருள், கஞ்சா விற்பனை விவாகாரம் தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: போராட்டம் நடத்த உரிய நேரத்தில் விண்ணப்பித்தால் காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் போதைப்பொருட்கள், குட்கா விற்பனை தலைவிரித்தாடியது. நாங்கள் அதனை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தோம். போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக மத்திய அரசு அறிக்கை கூறுகிறது. பழனிசாமி: அண்டை மாநிலங்களில் இருந்து ரயில்கள்…

Read More

நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் பெற்றுள்ளனர். உங்கள் புதிய பொறுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. பொருளாதாரத்தை, உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும். உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ந்த பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும். வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

Read More

ஹெய்ன்றிச் ஹெர்ட்ஸ், நிகோலா டெஸ்லா, ஏர்னஸ்ட் அலெக்சாண்டர்சன், ஜெகதீச சந்திர போஸ், மார்கோனி போன்ற பலரும் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். 50 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஜெகதீச சந்திர போஸ் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பை உருவாக்கினார். ஆனால், அறிவியல் உலகம் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவருக்குப் பின்னரே மார்கோனி கம்பியில்லாமல் ஆண்டெனா மூலம் ஒன்றரை கி.மீ. தொலைவுக்குச் சமிக்ஞை அனுப்பு வதில் வெற்றி பெற்றார். அவர் மேலும் முயற்சி செய்ததில் 2.5 கி.மீக்குச்சமிக்ஞை கிடைத்தது. ஆண்டெனா வின் உயரத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல, அந்த அளவுக்குச் சமிக்ஞைகள் தெளிவாகக் கிடைத்தன. இத்தாலியில் மார்க்கோனிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு 6 கி.மீ. தொலைவு வரை தகவலை அனுப்பிக் காட்டினார். இங்கிலாந்து அரசு அவரின் கண்டறிதலை அங்கீகரித்தது. ஜெகதீச சந்திர போஸ் காப்புரிமையும் பெற்றார் மார்கோனி. ரேடியோ அலைகள் நேர்க் கோட்டில்…

Read More

சென்னை: தமிழகத்தில் 78 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஆதார் புதுப்பித்தல் பணிகள் மேற்கொண்டதற்காக, பள்ளிக்கல்வித் துறைக்கு தேசிய சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில ஏதுவாக, ஊக்கத்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஊக்கத்தொகை பயனர்களுக்கு தாமதமின்றி சென்று சேருவதை உறுதிசெய்வதற்காக, நேரடி பயனர் பரிமாற்றம் (டிபிடி) திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், பயனர்களான மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக உதவித் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியமாகும். அந்தவகையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆதார் அட்டை பெறுதல், புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகளிலேயே ஆதார் பதிவு திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்தியது. 2024 பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 78 லட்சத்து 45,608…

Read More

அஞ்​சாத மன உறு​தி, அசராத திறன், அற்​புத​மான பேட்​டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்​களை முதல் ஆட்​டத்​திலேயே கவர்ந்து இழுத்​துள்​ளார் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி​யின் இளம் வீரர் ஆயுஷ் மாத்​ரே. மகா​ராஷ்டிர மாநிலம் விரார் பகு​தி​யைச் சேர்ந்த ஆயுஷ் மாத்​ரே, கடந்த 20-ம் தேதி மும்பை வான்​கடே மைதானத்​தில் சிஎஸ்கே அணிக்​காக முதல்​முறை​யாக களமிறங்கி 15 பந்​துகளில் 32 ரன்​களை விளாசி அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கையை வசப்​படுத்​தி​யுள்​ளார். முதல் போட்​டி​யிலேயே மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் பந்​து​வீச்சை விளாசித்​தள்ளி பயமறியா சிங்​கம் என்​பதை நிரூபித்​துள்​ளார் மாத்​ரே. மேலும், சிஎஸ்கே அணிக்​காக களமிறங்​கிய மிக இளம் வயது வீரர்​கள் பட்​டியலில் முதலிடத்​தை​யும் ஆயுஷ் மாத்ரே பிடித்​துள்​ளார். அவர் 17 வயது 278 நாட்​களான நிலை​யில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி​னார். இதற்கு முன்​பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்​களான நிலை​யில் களமிறங்​கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்​றிருந்​தார். முதல்…

Read More

வாஷிங்டன்: அமெரிக்கா​வும், சீனா​வும் வர்த்தக போரில் குதித்​துள்​ளன. இந்​நிலை​யில் சீனா விற்​பனை​யாளர்​கள், தங்​கள் வர்த்தக வியூ​கத்தை மாற்றி விளம்​பரம் செய்​யத் தொடங்​கி​யுள்​ளனர். அமெரிக்​கா​வில் விற்​பனை​யாகும் பிர்​கின் மற்​றும் லூயிஸ் உய்ட்​டன் போன்ற பிரபல பிராண்​டு​களின் கைப்​பைகள், ஆடைகள், அழகு​சாதன பொருட்​களை லோகோ இல்​லாமல் வாடிக்​கை​யாளர்​களுக்கு நேரடி​யாக மலிவு விலை​யில் விற்​பனை செய்​வ​தாக சீன நிறு​வனங்​கள் அறி​வித்​துள்​ளன. பிர்​கின் பிராண்ட் கைப்​பைகளை விநி​யோகிக்​கும் ஒரு​வர் கூறுகை​யில், ‘‘34,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்​படும் கைப்​பை​யின் தயாரிப்பு செலவு 1,400 டாலர்​தான். பிரபல பிராண்​டு​களின் பொருட்​களை தயாரிக்​கும் எங்​களுக்கு குறைந்த லாபம்​தான் கிடைக்கிறது. லாபத்​தில் பெரும்​பங்கை லோகோ மற்​றும் பிராண்ட் நிறு​வனங்​கள் பெறுகின்​றன. 90 சதவீதத்​துக்கு அதி​க​மான விலை லோகோ மற்​றும் பிராண்ட்​டுக்​காக நீங்​கள் செலவு செய்​கிறீர்​கள். அதைப்​பற்றி நீங்​கள் கவலைப்​பட​வில்​லை​யென்​றால், அதே அளவு தரமான பொருட்​களை நீங்​கள் எங்​களிடம் மலிவு விலை​யில் பெறலாம்’’ என டிக்​டாக் வீடியோ​வில் சீன வியா​பாரி ஒரு​வர் கூறுகிறார். 100…

Read More