டீப்சீக் ஏஐ சாட்போட்டுக்கு உலகளவில் கிடைத்துள்ள வெற்றிக்கு பின்னால் 29 வயதான லுவோ ஃபுலி-யின் கடின உழைப்பு மிக முக்கியமானதாக இருந்தது தெரியவந்துள்ளது. சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ மாடலுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட் ஏஐ போன்ற முன்னணி சாட்போட்களை பின்னுக்குத் தள்ளி டீப்சீக் சாட்போட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இது, அமெரிக்க பங்குச் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் பல முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் கணிசமான சரிவுக்கு வழிவகுத்தது. டீப்சீக் சாட்போட்டின் இந்த அபார வெற்றிக்கு பின்னால் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற திடமான எண்ணம் கொண்ட திறமையான குழு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த குழுவில் உள்ள ஒரு தனித்துவமான உறுப்பினர்தான் லுவோ ஃபுலி. 29 வயதான இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் தனித்திறமையுடன் மேதையாக விளங்கியுள்ளார். டீப்சீக்-வி2 உருவாக்கத்தில் அவரது இயல்பான மொழி செயலாக்கம் மிக…
Author: admin
வாஷிங்டன்: அமெரிக்க விமான விபத்தில் இந்திய பெண் மருத்துவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாய் சைனி. பெண் மருத்துவரான இவர் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டை சேர்ந்த மைக்கேல் குரோபை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிக்கு கரீனா, ஜார்ட், அனிதா ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். வார விடுமுறையை கொண்டாட மைக்கேல் குரோப் குடும்பத்தினர், நியூயார்க் மாகாணம், வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டனர். ஜார்ஜியா மாகாணம், கொலம்பியா பகுதிக்கு சென்ற அந்த விமானத்தில் மைக்கேல் குரோப், அவரது மனைவி ஜாய் சைனி, மகள் கரீனா, அவரது நண்பர் ஜேம்ஸ், மகன் ஜார்ட் ஆகியோர் பயணம் செய்தனர். கொலம்பியாவை நெருங்கும்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் விமானியும் உயிரிழந்தனர். மைக்கேல் குரோப், ஜாய் சைனி தம்பதியின்…
Last Updated : 03 Apr, 2025 02:17 PM Published : 03 Apr 2025 02:17 PM Last Updated : 03 Apr 2025 02:17 PM ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் – ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா இன்று காலை 11 மணிக்கு கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 108 வைணவ திவ்ய பாசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர் வடபத்ரசாயி, பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு. அதனால் ஆண்டு தோறும் பங்குனி உத்திரம் நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருக்கல்யாண…
சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ வரிசையின் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. நாயகியாக நடித்திருக்கிறார் கீத்திகா திவாரி. கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி என பெரும் நட்சத்திரக் கூட்டம் படத்தில். காமெடிக்கும் ஹாரருக்கும் பஞ்சமில்லாத படம் இது என்கிற இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், மிக்ஸிங்கில் பிசி. அவரிடம் பேசினோம். இயக்குநரா இது உங்களுக்கு இரண்டாவது படம்… எப்படி வந்திருக்கு? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்துக்குப் பிறகு நான் இயக்கி இருக்கிற படம் இது. இயக்குநரா எனக்கு இது 2-வது படமா இருந்தாலும் சந்தானத்தோட என் பயணம் ரொம்ப வருஷமா தொடருது. அவரோட ரசிகனா பழகி, பெரும்பாலான படங்கள்ல, அதாவது ‘சிவா மனசுல சக்தி’ தொடங்கி இப்பவரை நாங்க ஒரு டீமா அவருக்கு காமெடி எழுதியிருக்கோம். அதனால, ரசிகர்கள் அவர்கிட்ட என்ன எதிர்பார்ப்பாங்க அப்படிங்கறதை புரிஞ்சு, அதுக்கு ஏற்ற மாதிரியான காமெடி ஹாரர் படமா…
சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமார், பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன். விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத் துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயர் நியமிக்கப்பட வேண்டும். கடன் வழங்கிய நிறுவனம், கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது என்றும், கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்காட்டாயமாக வசூலிக்கும்…
அறிவியல் புனைகதைகளை நினைவூட்டுகின்ற ஒரு காட்சியில் அல்லது வெறுமனே வைரஸ் இணைய கலாச்சாரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு பெரிய திரையில் 100 முறை பெரிதாக்கப்பட்ட டீன் ஏஜ்-சிறிய விந்தணுக்கள் பெரிதாக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பெருமளவில் ஆரவாரம் செய்தனர்.அத்தகைய அதிர்ச்சியூட்டும் காட்சியின் பின்னால் சூத்திரதாரி? பெயரிடப்பட்ட 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவர் எரிக் ஜுதனது அசாதாரண கனவை நனவாக்க ஒரு மில்லியனுக்கும் அதிகமான டாலர்களுக்கு மேல் நிதியளித்தவர், அனைவருமே ஆண் கருவுறாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக AFP தெரிவித்தனர்.கடந்த 50 ஆண்டுகளில் விந்தணு எண்ணிக்கைகள் பாதியாக வீழ்ச்சியடைந்துள்ளன, மேலும் அவர் கூறும் போது, ”யாரும் குழந்தைகளை உருவாக்க முடியாது” என்று ஒரு உலகத்தை அச்சுறுத்துகிறார்கள் என்ற டைர் அறிக்கைகளால் ஜு தூண்டப்பட்டார்.”இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பற்றி மக்கள் புறக்கணிக்க முடியாத வகையில் சிந்திக்க வைக்க நான் விரும்பினேன்” என்று ஜு AFP க்கு விளக்கினார்.நுண்ணோக்கி, பைப்பெட்டுகள் மற்றும் விழிப்புணர்வுக்கான இனம்நிகழ்வின்…
1990 களின் முற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரைன், உலகின் மிகப்பெரிய அணுசக்தி கையிருப்புகளில் ஒன்றாகும். மூன்றாவது பெரிய அணுசக்தி, இது சுமார் 5,000 அணு ஆயுதங்களை பெற்றது, இதில் தெர்மோநியூக்ளியர் போர்க்கப்பல்களை வழங்கக்கூடிய இடை கண்டார் ஏவுகணைகள் அடங்கும். இந்த சக்திவாய்ந்த ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருந்த பிறகு, உக்ரைன் முன்னோடியில்லாத வகையில் அதன் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான படியை ET அறிக்கைகளின்படி எடுத்தது. இந்த முடிவு, தேசத்தின் தலைவிதியை தீர்மானித்தபடி, ரஷ்யாவுடனான எதிர்கால மோதலுக்கான கட்டத்தை நிர்ணயிக்கும், இது பிராந்தியத்தில் தொடர்ந்து பதட்டங்கள் மற்றும் புவிசார் அரசியல் சவால்களுக்கு வழிவகுக்கும்.அணு ஆயுதங்களை விட்டுக்கொடுக்கும் உக்ரைனின் தைரியமான முடிவுஉக்ரேனின் அணுசக்தி மயமாக்கல் முடிவு எண்ணற்ற கருத்தாய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. நாடு உடல் ரீதியாக ஆயுதங்களை வைத்திருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. ரஷ்யா, துவக்கக் குறியீடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருப்பது, ஆயுதங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. இது உக்ரேனின்…
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத்திட்டம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டு இருகட்டமாக 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தபோதும், பாடத்திட்டத்தின் அளவு அதிகமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் சார்ந்த பாடநூல்கள் அதிகபட்சம் 600 பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக சிரமப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்துக்கு மாநில பள்ளிக்கல்வித் துறையின் பாடப் புத்தகங்களை படித்து வருகின்றனர். ஆனால், பாடப் புத்தக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை குறைத்து தேர்வுகளை நடத்துகின்றனர். உதாரணமாக 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில்…
புவனேஸ்வர்: கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால். மிட்ஃபீல்டர்கள்: ஜிதேந்திர சிங், லால்ரின்லியானா நாம்டே, ஜிதேஸ்வர் சிங், எல்சினோ டியாஸ், லூகாஸ் பிராம்பிலா, ஃபரூக் சவுத்ரி, மகேசன் சிங். முன்கள வீரர்கள்: கானர் ஷீல்ட்ஸ், வின்சி பாரெட்டோ, கியான் நாசிரி, வில்மார், குர்கீரத் சிங், இர்பான் யத்வாட், டேனியல் சிமா சுக்வு.