Author: admin

எம்-சாண்டு, பி-சாண்டு மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு ஏற்றப்பட்ட விலையிலிருந்து ரூ.1,000-த்தை குறைத்து விற்பனை செய்யவும், சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 என நிர்ணயி்க்கவும் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகள் குறைவான எண்ணிக்கையில் செயல்படுவதாலும், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி விலை உயர்வாலும் கட்டுமானத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இவற்றின் விலையைக் குறைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறத்தின. இந்நிலையில் இதுகுறித்து முடிவு எடுப்பது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. அப்போது, கடந்த 25-ம் தேதி கல்குவாரி, கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள்…

Read More

70 வயதில், பெரும்பாலான நபர்கள் ஓய்வு பெறுவதற்கு தயாராகி வருகிறார்கள், தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார்கள், அல்லது அன்றாட வாழ்க்கையின் உடல் ரீதியான விகாரங்களிலிருந்து எளிதாக்குகிறார்கள். ஆனால் டான் பெட்டிட் அல்ல. நாசாவின் பழமையான முழுநேர விண்வெளி வீரராக, பெட்டிட் தனது ஏழாவது தசாப்தத்தில் விண்வெளியில் மிதந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) ஏழு மாத காலத்தை முடித்தார். ஏப்ரல் 20, 2025 அன்று அவர் பூமிக்கு திரும்பினார், அவரது 220 நாள் பணியின் முடிவைக் குறித்தது மட்டுமல்லாமல், அவரது மைல்கல் பிறந்தநாளுடன் ஒத்துப்போனது-ஒரு நாள் அவர் வளிமண்டலத்தின் வழியாக ஒரு தடைபட்ட ரஷ்ய சோயுஸ் காப்ஸ்யூலில் வீழ்ச்சியடைந்தார்.மீண்டும் பூமிக்கு வந்த பிறகு தனது முதல் பொது தோற்றத்தில், பெட்டிட் தனது அனுபவத்தைப் பற்றி ஒரு வெளிப்படையான மற்றும் விஞ்ஞான ரீதியாக சுவாரஸ்யமான வர்ணனையை வழங்கினார். ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திலிருந்து பேசிய அவர், விண்வெளியில் எடை…

Read More

இங்கிலாந்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக ஊழல்கள் குறித்த தனது கருத்துக்களுக்காக எலோன் மஸ்க் ஒரு பிரிட்டிஷ் அமைச்சர் பகிரங்கமாக விமர்சித்துள்ளார், தொழில்நுட்ப பில்லியனருக்கு இந்த விவகாரத்தில் அறிவு இல்லை என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் குரல் ஆதரவாளரான மஸ்க், இங்கிலாந்து பிரதமரை குறிவைக்க தனது சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) ஐப் பயன்படுத்தினார் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமைச்சரைப் பாதுகாத்தல் ஜெஸ் பிலிப்ஸ். ராய்ட்டர்ஸின்படி, ஸ்டார்மர் தனது பதவிக்காலத்தில் பொது வழக்குகள் இயக்குநராக இருந்த காலத்தில் சீர்ப்படுத்தும் கும்பல்களைத் தண்டிக்கத் தவறியதாக குற்றம் சாட்டியுள்ளார், மேலும் பிலிப்ஸை ஒரு என்று குறிப்பிட்டார் “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர். “மஸ்கின் கருத்துக்களுக்கு பாராட்டு மற்றும் கண்டனத்துடன், சர்ச்சை பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.பிலிப்ஸுக்கு எதிரான எலோன் மஸ்கின் கூற்றுக்கள்: “கற்பழிப்பு இனப்படுகொலை மன்னிப்புக் கலைஞர்”2008 முதல் 2013 வரை அரசு வழக்கு விசாரணைகளின் இயக்குநராக இருந்த…

Read More

ராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ‘அக்ரன்’ என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரஃபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று அனைத்து…

Read More

சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek). டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப்…

Read More

மத்திய அரசும் தமிழக அரசும் ஆளுக்கொரு பக்கம் மொழிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்த தாய்த்தமிழ் பள்ளிகள் நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன. 1993-ம் ஆண்டு வாக்கில், தமிழ்த்​தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் முன்னெடுப்பால் தமிழகமெங்கும் தாய்த்​தமிழ்ப் பள்ளிகள் உருவாகின. அப்படி உருவாகி நூற்றுக்கும் மேலாக பெருகிய அந்தப் பள்ளி​களில் இப்போது 17 பள்ளிகள் மட்டுமே செயல்​பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள் எல்லாம் பல்வேறு காரணங்​களால் இழுத்து மூடப்​பட்​டு​விட்டன இதுகுறித்து நம்மிடம் பேசிய தாய்த்​தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை பள்ளி​களின் கூட்டமைப்பு தலைவர் சிவ. காளிதாசன், “1993-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் மேனாம்​பேட்டில் ரூ. 1 மட்டும் நன்கொடை பெற்றுக்​கொண்டு, தாய் குழந்​தைக்கு பால் புகட்​டுவது போன்ற படத்தை பெற்றோரிடம் தந்து, குழந்​தைகளுக்கு பாடம் சொல்லித்தர துவங்​கினோம். பின்பு அதை தாய்த்​தமிழ் கல்விப்பணி அறக்கட்​டளையாக மாற்றி, அதே பகுதியில் 10…

Read More

நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல் சமத் 2, ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்த லக்னோ அணியால் அதன் பின்னர் சீரான முறையில் ரன் சேர்க்க முடியவில்லை. மார்ஷ், 36 பந்துகளில் 45…

Read More

டெக்சாஸ்: ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் மூலம் பெண் பிரபலங்கள் மட்டும் அடங்கிய குழு விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர். இதில் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸும் பயணித்தார். அவருடன் விமானியும் முன்னாள் பத்திரிகையாளருமான சான்செஸ், பாடகர் மற்றும் பாடலாசிரியர் கேட்டி பெர்ரி மற்றும் ‘சிபிஎஸ் மார்னிங்ஸ்’ இணை தொகுப்பாளர் கெயில் கிங், திரைப்பட தயாரிப்பாளர் கெரியான் ஃப்ளின், முன்னாள் நாசா பொறியாளர் ஆயிஷா போவ், விஞ்ஞானி அமண்டா ஆகியோர் விண்வெளிக்கு பயணித்தனர். இந்த நேரப்படி ஏப்.14 மாலை 7 மணி அளவில் இந்த விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த 2 மாதங்களில் லாரன் சான்செஸை திருமணம் செய்ய உள்ளார் பெசோஸ். இந்த நிலையில் விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டது. மேற்கு டெக்சாஸில் இருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலன் மூலம் வெறும் சில நிமிடங்கள் மட்டுமே இந்த பயணம் திட்டமிடப்பட்டது. பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடம் 21 விநாடிகள் என…

Read More

தேனி: சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவுக்காக இன்று (ஏப்.2) கொடியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆராட்டு (சுவாமி புனித நீராடல்) நிகழ்ச்சி வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று (ஏப்.1) மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. திருவிழா கொடியேற்றத்துக்கான கயறு, குதிரை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி உள்ளிட்டவை குளங்கா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலில் இருந்து அலங்கார ஊர்தியில் நேற்று மாலை சன்னிதானத்தை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கோயில் சுத்திகரிப்பு பூஜை நடைபெற்றது.பின்பு கொடிக்கு தந்திரி பிரம்மதத்தன் ராஜீவரு சிறப்பு பூஜைகள் நடத்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்பு தேங்காயில் நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை…

Read More