சென்னை: உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை முடங்கியுள்ள காரணத்தால் மில்லியன் கணக்கான பயனர்கள் அந்த சேவையை பயன்படுத்த முடியாமல் தவிப்பு. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண தங்கள் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. பல்வேறு இணையாதள சேவை முடக்கம் குறித்த தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கி வரும் டவுன் டிடெக்டர் தளத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர். சாட்ஜிபிடி வலைதளம் மற்றும் ஏபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் செயலி வடிவில் சாட்ஜிபிடி-யை மொபைல் போனில் பயன்படுத்த முடிகிறது. கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த…
Author: admin
சென்னை: பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறந்த முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி நிதியை பகிர்ந்தளித்து விழாவுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5…
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி தலைமையிலான அணியை ஒருபோதும் நிராகரித்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வி தழுவியுள்ளது சிஎஸ்கே. அணியின் படுமோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே. பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் என அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் ரன் குவிக்க வேண்டுமென்ற முனைப்பு காட்டாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், நவீன டி20 பார்மெட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற வேண்டும்…
கீவ்: வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மோசமான இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் எதிர்வினையைக் கோரியுள்ளார். தரையில் கிடக்கும் சடலங்கள், அழிக்கப்பட்டப் பேருந்து, வீதிகளின் மத்தியில் எரிந்து கிடக்கும் வானங்கள் என மனதை உலுக்கும் காட்சிகளை காட்டும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர், “அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பது, அயோக்கியர்களால் மட்டுமே இவ்வாறு செயல்பட முடியும். இது கர்த்தர் ஜெருசலத்துக்குள் நுழைந்ததைக் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு அன்று மக்கள் தேவாலையம் செல்லும் நாளில் நடந்துள்ளது. ரஷ்யா, இந்த மாதிரியான தீவிரவாதத்தையே விரும்புகிறது மற்றும் போரை நீட்டிக்க விரும்புகிறது. ஆக்கிரமிப்பாளர் மீது அழுத்தம் கொடுக்காமல் அமைதி சாத்தியமாகாது. பேச்சுவார்த்தைகள்…
கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர பிரமேற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாக்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் ராஜா அனுக்கை, நேற்று தேவ அனுக்கை ஆகியவை நடந்தன. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கால சாந்தி பூஜை, உதய மார்த்தாண்ட பூஜை, சுப்பிரமணியர் பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னர் மூலவர் கழுகாசல மூர்த்தி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பின்னர் மூலவர் கழுகாசல மூர்த்தி மற்றும் வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில்…
‘மகாபாரதம்’ படத்துக்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்கவுள்ளார் ஆமிர்கான். இந்தியாவில் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்க பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனது வாழ்நாள் குறிக்கோள் என்னவென்றால் ‘மகாபாரதம்’ கதையினை படமாக்குவது தான் என்று ஆமிர்கான் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதற்கான பணிகளை இந்த ஆண்டே தொடங்க இருப்பதாக மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆமிர்கான். அப்பேட்டியில் ‘மகாபாரதம்’ குறித்து “எனக்கு இருக்கும் ஒரே லட்சியம், இந்த வருடமே ‘மகாபாரதம்’ படத்தின் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான். அதன் படப்பிடிப்பு தொடங்க சில காலம் ஆகும். ஏனென்றால் முதலில் படத்தினை எழுதி முடிக்கவே சில மாதங்கள் ஆகும். பெரிய கதை என்பதால் பல பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பாகத்துக்கும் யார் பொருத்தமான நடிகர் என்பதை வைத்து தான் நடிகர்கள் தேர்வு இருக்கும். நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவு…
சென்னை: “இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் Part-1 தான். 2026-ல் Version 2.0 Loading அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று (ஏப்.29) காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது: குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக காவல்துறை செயல்படவேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். இந்த நிலை உருவாகவேண்டும் என்றால், காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த சமூகமும் சில பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும். சட்டம் , ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது நம்முடைய அனைவரின் கூட்டுப் பொறுப்பு. எனவே, நீங்கள் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சின்ன சின்ன அலட்சியங்கள்கூட தவிர்த்து, சுய ஒழுக்கத்தோடு எல்லோருக்கும் இருக்க வேண்டும். ஒரு குற்றம் நடந்த பிறகு, உடனடியாக…
சென்னை: தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: “தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் ஏழை பெண் தொழிளார்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக உள்ளது. அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார். இதற்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
நீங்கள் இரவு முழுவதும் தொந்தரவு செய்தால், டாஸ் செய்து சரியாக தூங்கினால், இந்த தேநீர் உங்கள் மீட்பராக இருக்கும். குங்குமப்பூவில் குரோசின் மற்றும் சஃப்ரானல் போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை தளர்வை ஊக்குவிக்கின்றன மற்றும் தூக்கமின்மையின் விளைவுகளை அகற்றுகின்றன. எலெய்சியை இணைப்பதன் மூலம் ஒரு தேநீர் வடிவத்தில் தயாரிக்கப்படும் போது, இது இனிமையான பண்புகள் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், உங்கள் உடலை ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாரிக்கவும் உதவுகிறது.
வான நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளையும் வானியலாளர்களையும் கவர்ந்தன, நமது சூரிய மண்டலத்தின் செயல்பாடு குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அளிக்கின்றன. இவற்றில் மிகவும் வியத்தகு சூரிய கிரகணங்கள் -பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒளியை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுத்தது. சில கிரகணங்களை பூமியிலிருந்து காணலாம், மற்றவற்றை விண்வெளியில் இருந்து மட்டுமே காணலாம். நாசா போன்ற மேம்பட்ட செயற்கைக்கோள்களுக்கு நன்றி சூரிய இயக்கவியல் ஆய்வகம் . இந்த அவதானிப்புகள் சூரிய செயல்பாடு பற்றிய நமது புரிதலையும் அருகிலுள்ள நட்சத்திரங்களுடனான அதன் தொடர்புகளையும் மேம்படுத்துகின்றன.நாசாவின் எஸ்.டி.ஓ அரிய சூரிய கிரகணத்தை விண்வெளியில் இருந்து மட்டுமே தெரியும்ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை, ஒரு அரிய நிழலிடா நிகழ்வைக் கொண்டுவந்தது-பூமியில் காண முடியாத ஒன்றைக் கொண்டுவந்தது. ஒரு பகுதி சூரிய கிரகணம் இருந்தது, அதில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் தடுத்து, சூரியனின் முகத்தில் 23% தடுத்தது. எவ்வாறாயினும், கிரகணமே விண்வெளியில் இருந்து…