பெற்றோருக்கு வரும்போது, எந்த அளவும் பொருந்தாது. பெற்றோர்கள், முற்றிலும் நல்ல அர்த்தமுள்ளதாக இருக்கும்போது, சில சமயங்களில் தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்காக தீவிர நீளத்திற்குச் செல்கிறார்கள், கூச்சலிடுதல், அலறல் மற்றும் அவ்வப்போது வன்முறை ஆகியவற்றைக் கூட நாடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த முறைகள் எப்போதுமே செயல்படாது, ஏனென்றால் குழந்தைகளுக்கு ஒழுங்குபடுத்த பொறுமை, சரியான நோக்கம், நன்கு திட்டமிடப்பட்ட அணுகுமுறை மற்றும் இரு கூட்டாளர்களின் பங்களிப்பு தேவை. ஒழுக்கத்திற்கு வரும்போது, பெற்றோர்கள் பயன்படுத்தும் பல நுட்பங்கள் உள்ளன, அவற்றில் “நல்ல காப், பேட் காப்” நுட்பம் மிகவும் பிரபலமானது. இந்த நுட்பம் ஒரு பெற்றோர் கண்டிப்பாக இருப்பதன் மூலம் “மோசமான காவல்துறை” பாத்திரத்தை வகிக்கிறது, மற்றொன்று “நல்ல போலீஸ்காரரை” விளையாடுகிறது, ஓரளவு மென்மையாக இருப்பதன் மூலமும், கடன் வழங்கும் ஆண்டை வழங்குவதன் மூலமும். ஆனால் நல்ல நடத்தை கொண்ட குழந்தைகளை வளர்க்கும் போது இந்த முறை உண்மையில் செயல்படுகிறதா? ஆழமாக ஆராய்வோம் …இந்த நுட்பம் என்னநல்ல…
Author: admin
ஓடிடியில் ஜூலை 4-ம் தேதி ‘மெட்ராஸ் மேட்னி’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷிணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் பலரும், இப்படத்தைப் பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள். தற்போது இதன் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ப்ரைம் வீடியோ மற்றும் டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெற்ற வரவேற்பை விட, ஓடிடி தளத்தில் மேலும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனென்றால் அதில் ஒரு சிறிய குரங்கு இருந்தது. அதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வனத்துறையினர் நேரில் வந்து சோதித்த போது, அது அமேசான் காடுகளில் வசிக்கும் அரிய வகை அணில் குரங்கு என்பது தெரிய வந்தது. ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உயரம் வளரும் இக்குரங்குகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், வன உயிரியல் சட்டத்தின்படி இந்தியாவை தவிர்த்த மற்ற…
எஃப் 1 பாக்ஸ் ஆபிஸ் சேகரிப்பு நாள் 1: எஃப் 1. விளையாட்டு நடவடிக்கை நாடகமும் நேர்மறையான மதிப்புரைகளைப் பெற்றது. எஃப் 1 டாப் கன்: மேவரிக் புகழ் ஜோசப் கோசின்ஸ்கி இயக்கியுள்ளார். எஃப் 1 இந்தியாவில் நன்றாக திறக்கிறதுபிராட் பிட் தனது சமீபத்திய படத்தின் காரணமாக வெளிச்சத்தில் இருக்கிறார் எஃப் 1இது இப்போது திரையரங்குகளில் உள்ளது. இது இந்தியாவில் ஒரு நல்ல பதிலைத் திறந்தது, மேலும் திரைப்பட பார்வையாளர்களையும் கவர்ந்தது. வர்த்தக வலைத்தளமான சாக்னில்க் கருத்துப்படி, விளையாட்டு நடவடிக்கை நாடகம் முதல் நாளில் ரூ .5.25 கோடி (நெட்) சம்பாதித்தது. இது ஜாக்கி சானை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது கராத்தே குழந்தை புராணக்கதைகள்இது முதல் நாளில் ரூ .1.75 கோடி சம்பாதித்தது. இருப்பினும், அது வெல்லத் தவறிவிட்டது மி 8. டாம் குரூஸின் அதிரடி நாடகம் அதன் தொடக்க நாளில் ரூ .16.5 கோடியை ஈட்டியது. நிகழ்ச்சிகளையும் மரணதண்டனையையும் பாராட்டும்…
வாரணாசி: இந்தியாவுக்கு சோசலிசம் தேவையில்லை, மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்தியாவில் சோசலிசம் தேவையில்லை. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரத்தின் மையக்கரு அல்ல. எனவே, இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தனது அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். அப்போது எல்லைகளில் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, உள்நாட்டு பாதுகாப்புக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. பிரதமர் பதவிக்கு மட்டுமே அச்சுறுத்தல் இருந்தது. எனவே, ஜூன் 25, 1975 அன்று இரவு, அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தாமலேயே நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது எனக்கு 16 வயதுதான். அப்போதே நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இன்றும் கூட, அந்த இருண்ட நாட்களை நினைத்துப்…
‘விடாமுயற்சி’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தடையற தாக்க’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம், தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை பார்க்க அருண் விஜய், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் வந்திருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் மகிழ் திருமேனி பேசும் போது, “’தடையற தாக்க’ படத்தினை திரையரங்கில் பார்த்தவர்கள் போக, இணையத்தில் பார்த்தவர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்திருக்கும் என்று ஒருவர் சொன்னார்” என்று பேசினார். உடனே பத்திரிகையாளர்கள் “13 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்கிறீர்கள். அதே போலவே ‘விடாமுயற்சி’ படமும் இன்னும் 13 ஆண்டுகள் கழித்து வந்தால் கொண்டாடப்படும் என்று சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மகிழ் திருமேனி, “ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதை தீர்மானிப்பது ரசிகர்கள்…
திண்டுக்கல்: அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடியில் புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோபி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 28) தொடங்கி வைத்தார். இதே போல், ரூ.2.25 கோடியில் திண்டுக்கல்லில் 4 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 3,600 பேரும், உள் நோயாளிகளாக 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த மருத்துவமனையில் கூடுதலாக சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 1,500…
அதிகாலை 5 மணிக்கு எழுந்திருக்காமல், ஒருவர் தங்கள் எல்லா பணிகளையும் நெறிப்படுத்தி, வெற்றிகரமான நாளைத் திட்டமிடலாம் என்று எப்போதாவது நினைத்தீர்களா? ஆம்! உற்பத்தித்திறன் குருக்கள் மற்றும் சுய உதவி புத்தகங்களால் பிரபலமான 5 AM கிளப்பின் வழிபாட்டு முறை, ஆரம்பத்தில் எழுந்து சூரிய உதயத்தை அடிப்பதில் வெற்றி உள்ளது என்று பலரும் நம்புவதற்கு வழிவகுத்தது. காலை 5 மணிக்கு எழுந்திருப்பதற்குப் பின்னால் இந்த கட்டுக்கதையை ஆராய்ச்சி செய்வதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் செல்லும்போது, ஸ்லீப் சயின்ஸ் நாள் கைப்பற்ற நீங்கள் ஓய்வு தியாகம் செய்ய தேவையில்லை என்று அறிவுறுத்துகிறது.ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?இருப்பினும், உண்மை என்னவென்றால், உங்கள் காலையை கட்டுப்படுத்துவது நீங்கள் எழுந்திருக்கும்போது அல்ல, ஆனால் நீங்கள் விழித்தவுடன் உங்கள் நாளைத் தொடங்குவது எப்படி.ஆரம்பகால ரைசர் என்ற கட்டுக்கதைசில உயர் கலைஞர்கள் விடியற்காலுக்கு முந்தைய சடங்குகளால் சத்தியம் செய்யும் அதே வேளையில், காலவரிசைப்பு வல்லுநர்கள் உற்பத்தித்திறன் ஆழ்ந்த தனிப்பட்டது என்று வாதிடுகின்றனர். ஒரு நபரின்…
ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறுகிறது. விருது பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு, ஜன. 12 முதல் 16 வரை நடைபெறும். பரிந்துரைகள், ஜன. 22-ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்நிலையில், விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, ‘காஸ்டிங்’ இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் 534 திரைக்கலைஞர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும் அதில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை 10,143-ஆகவும் உயரும். ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினர் ஆவதற்கு அழைக்கப்படுவது திரைத்துறையில் கவுரவமாகக் கருதப்படுகிறது.
சென்னை: “நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே, நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து…