டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் டிரினிடாட் மற்றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் இதில் பங்கேற்றனர். டிரினிடாட் மற்றும் டோபாகோவை சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.38 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும்,…
Author: admin
கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது. தமிழகத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதால், அங்கிருந்து குப்பை, கழிவுகள் இரவில் கொண்டுவரப்பட்டு, தமிழக வனப்பகுதியில் அடிக்கடி கொட்டப்படுகின்றன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு கம்பம்மெட்டு மலையடிவாரம் புதுக்குளம் பகுதியில், சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் மூட்டை மூட்டையாக கேரள குப்பை கொட்டப்பட்டிருந்தது. தகவலறிந்த மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் பத்மா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் அங்கு கொட்டப்பட்டது தெரியவந்தது. அவற்றை புதுப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர். தொடர்ந்து, மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் காருண்யாராஜா, தேனி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கவிதா தலைமையிலான குழுவினர், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். கேரளத்தில்…
புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய சந்தைக்கான தனது நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டைப் பற்றி அவர் விவாதித்தார். இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க உள்ளதாகவும் உறுதி அளித்தார். பெப்சிகோ நிறுவனம் லிங்டுஇன் தளத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளதாவது: பெப்சிகோ தலைவர் லகுவார்ட்டாவுடன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக குழு உறுப்பினர்கள் சென்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, பெப்சிகோவின் இந்தியாவுக்கான நீண்டகால உறுதிப்பாட்டை வலுப்படுத்துவது, உற்பத்தி, நிலைத்தன்மை, புதுமை மற்றும் சமூக மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பெப்சிகோவின் வாரியத்திற்கு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக லகுவார்ட்டா தலைமை தாங்கி வந்தாலும், பிரதமருடனான அவரின் சந்திப்பு இது முதல் முறையாகும். பெப்சிகோ இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக்ருத் கோடேச்சாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில் 75 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை (15 நாள்) நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் 17 திட்டங்களை தொடங்கி வைத்தார். அடுத்தபடியாக, டெல்லியின் சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் 75 நாடுகளின் தூதரக அதிகாரிகள் நேற்று மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் மாட வீதிகளில் அமர்ந்து வாகன சேவைகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாதம் என்பதால் இவ்விழாவுக்கு அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவத்திற்கு திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆக்டோபஸ் கமாண்டோக்கள், ஆயுதப்படையினர் என சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பிரம்மோற்சவ ஏற்பாடுகள் திருமலை மற்றும் திருப்பதியில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று…
குன்னூர்: வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி 1905-ல் குவெட்டாவில் நிறுவப்பட்டது. பின்னர் 1947-ல் அது வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கான முன்னணி பயிற்சி நிறுவனமாகும். இங்கு, ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கும், நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் தலைமைத்துவம், கூட்டாக செயல்படும் திறன், வியூகங்கள் வகுத்தல், பணியாளர் நிர்வாகம் ஆகியவற்றின் உயர் நுணுக்கங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். டிசம்பர் 1988-ல்…
உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் பகல்நேர பிரச்சினையாகக் கருதப்படுகிறது, ஆனால் பலர் அதை உணராமல் இரவில் கூர்முனை அனுபவிக்கிறார்கள். இரவு நேர உயர் இரத்த அழுத்தம் என அழைக்கப்படும் இந்த நிலை, பகல்நேர உயர் இரத்த அழுத்தத்தை விட மிகவும் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது அடிக்கடி கண்டறியப்படாது. பொதுவாக, இரத்த அழுத்தம் ஒரு இயற்கையான தாளத்தைப் பின்பற்றுகிறது மற்றும் தூக்கத்தின் போது நீராடுகிறது, இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு ஓய்வெடுக்க நேரம் கொடுக்கிறது. இருப்பினும், சில நபர்களில், இது அதிகமாக இருக்கும் அல்லது உயர்கிறது, இருதய அமைப்பு, சிறுநீரகங்கள் மற்றும் மூளை ஆகியவற்றில் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. காரணங்களை உணர்ந்து கொள்வது, இரவு நேர கூர்முனைகளை எவ்வாறு கண்டறிவது என்பதைக் கற்றுக்கொள்வது மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு சரியான சிகிச்சையைத் தேடுவது அவசியம்.என்ன காரணம் இரவு நேர இரத்த அழுத்த கூர்முனைகள்: இரவு நேர உயர் இரத்த அழுத்தத்தைப் புரிந்துகொள்வதுஇரவு…
அமராவதி: ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திராவில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வுக் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக இதுவரை 29 பேரை குற்றவாளியாகவும், 19 நிறுவனங்களுக்கு இதில் தொடர்புடையதாகவும் சிறப்புக் குழு குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளது. இதில், ராஜம்பேட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி, முன்னாள் சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்து விசாரித்தது. இதில் 4 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனையின் கீழ் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. மீதமுள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று டெல்லி, சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி,…
கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டம் 2018-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம். இவ்வாண்டு ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதனை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாத இறுதியில் இந்நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்பவும், 2027 மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ‘ககன்யான்’ திட்டத்தில் 85 சதவீத சோதனைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மனிதர்களை அனுப்புவதற்கு பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டால் மனிதர்களை பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இஸ்ரோ மட்டுமின்றி கடற்படை, வானியல் துறை உள்ளிட்ட பல்வேறு…
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கர்நாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்நிலையில், 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது கடந்த 2023ல் தாய்லாந்து சென்றோம். அப்போது 17 வயது சிறுமியாக இருந்த என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர்.