சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை சுதந்திர தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பல்வேறு சுகாதார குறியீடுகளில் தமிழக சுகாதாரத் துறை முன்னணியில் உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 8-வது முறையாக சிறந்த மாநிலம் என்ற விருதை பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் வழங்கப்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக நீண்டகாலமாக போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது. வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த அரசாணை 354-ஐ அமல்படுத்தி, அதன் அடிப்படையில் அரசு மருத்துவர் களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை…
Author: admin
கே-பாப்பில் அடுத்த பெரிய விஷயத்தில் நீங்கள் கண் இருப்பதாக நீங்கள் நினைத்திருந்தால், மீண்டும் சிந்தியுங்கள், ஏனெனில் ஹைபியின் புதிய பாய் குழும கார்டிஸின் கியோன்ஹோ பிளேபுக்கை மீண்டும் எழுதுகிறார். அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இந்த இளம் ஸ்டார்லெட் இணையத்தை இணைத்துள்ளது. அவரது இளமை வசீகரம், தாடை-கைவிடுதல் காட்சிகள் மற்றும் மறுக்கமுடியாத மேடை இருப்பு ஆகியவற்றின் கலவையானது எல்லா இடங்களிலும் ரசிகர்களை ஸ்க்ரோலிங் செய்வதை நிறுத்திவிட்டு கவனிக்கத் தொடங்குகிறது. ஆனால் கியோன்ஹோ யார், மற்றும் சலசலப்பு என்ன? உள்ளே நுழைவோம்.கார்டிஸ் அவர்களின் அதிர்ச்சியூட்டும் இசை வீடியோவைக் குறைக்கிறது!ஆகஸ்ட் 11. போ! அன்றிலிருந்து சமூக ஊட்டங்களை ஒளிரச் செய்யும் பார்வைக்கு வேலைநிறுத்தம் செய்யும் இசை வீடியோவுடன். குழுவின் பாணிக்கு இந்த பாடல் சரியான டீஸர்: ஆற்றல்மிக்க, புதிய மற்றும் இளமை நம்பிக்கையுடன் வெடிக்கும். இந்த வெளியீடு ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கான அவர்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, அவர்கள் முதல் முழு மினி-ஆல்பத்தை…
புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 891 சிங்கங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெண் சிங்கங்கள் எண்ணிக்கை 260-லிருந்து 330 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய சிங்கங்கள் எண்ணிக்கை 674 ஆக இருந்தது. ஐந்து ஆண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோல பத்து ஆண்டுகளில் 70.36% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக இருந்தது.
சென்னை: “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு திருட்டுக்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதி. வாக்கு திருட்டுப் பற்றி எனது சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்த ஆதாரங்கள் இந்த மோசடியின் வீச்சை காட்டுகிறது. இன்று இண்டியா கூட்டணி எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொள்கிறார். இந்தச் சூழலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் கணினி மூலம் சரிபார்க்கக் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது அரசியல்…
இந்த காய்கறிகள் பல்வேறு வகையான சேர்மங்கள் மூலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளன.காய்கறிகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஆபத்தான இலவச தீவிரவாதிகளை அகற்றுகின்றன, அவை புற்றுநோய் உருவாவதற்கு வழிவகுக்கும் டி.என்.ஏ சேதத்தைத் தொடங்கலாம்.சிலுவை காய்கறிகளில் குளுக்கோசினோலேட்டுகள் உள்ளன, அவை செயலில் உள்ள சேர்மங்களை உருவாக்குகின்றன, இவை இரண்டும் உடலில் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் முகவர்களை அகற்றுகின்றன, மேலும் புற்றுநோய் உயிரணு அழிவைத் தூண்டுகின்றன.வைட்டமின்கள் சி, ஈ மற்றும் ஃபோலேட் ஆகியவை நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியம் மற்றும் சேதமடைந்த உயிரணுக்களின் பழுதுபார்ப்பு ஆகிய இரண்டையும் ஆதரிக்கின்றன.காய்கறிகளில் காணப்படும் உணவு நார்ச்சத்து செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, மேலும் புற்றுநோய் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது.வெவ்வேறு காய்கறிகளின் வழக்கமான நுகர்வு உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்புகளைப் பாதுகாக்கிறது, இது உங்கள் வாழ்நாள் முழுவதும் புற்றுநோய் அபாயங்களைக் குறைக்கிறது.ஆதாரங்கள்:Pvhommed – 5 புற்றுநோய் சண்டையிடும் காய்கறிகளை நீங்கள் சாப்பிட வேண்டும்தேசிய புற்றுநோய்…
பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயிலின் மஞ்சள் பாதையையும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஐடி ஊழியர்களும் ஓசூர் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு வந்தார். அங்கிருந்து பெங்களூரு கெம்பேகவுடா ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், பெங்களூரு-பெலகாவி, அமிர்தசரஸ்-ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, அஜ்னி (நாக்பூர்)-புனே ஆகிய 3 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து, பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் ரூ.7160 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 19.1 கிமீ தொலைவை கொண்ட மஞ்சள் பாதையில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவையை ராகிகுட்டா மெட்ரோ நிலையத்தில் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் க்யூ ஆர் கோடு அடிப்படையில் செயல்படக்கூடிய டிக்கெட்…
மாமல்லபுரம்: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரமேஷ் புதிஹால் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஓபன் கால் இறுதி சுற்று ஹீட் 1-ல் இந்தியாவின் ரமேஷ் புதிஹால் 14.84 புள்ளிகளை குவித்து முதலிடம் பெற்றார். இதையடுத்து நடைபெற்ற அரை இறுதியில் ரமேஷ் புதிஹால் ஹீட் 1-ல் 11.43 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய சர்ஃபர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் நேற்று காலை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ரமேஷ் புதிஹால் 12.60 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் முதல் 2 இடங்களை முறையே தென்…
சென்னை: டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் சீனிவாசா சாலை வரை இன்றுமுதல் (11-ம் தேதி) மழைநீர் வடிகால் பணி நடைபெற இருப்பதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச் சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், டிடிகே சாலையில் மியூசிக் அகாடமி நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முர்ரேஸ் கேட் சாலை வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாகச் சென்று இலக்கை அடையலாம். டிடிகே சாலையில் மயிலாப்பூர் நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி ஆழ்வார்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ்.சிவசாமிசாலை வழியாக இலக்கை அடையலாம். போக்குவரத்து காவல் துறை இவ்வாறு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2-வது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள். அதிகபட்சமாக பஞ்சாபைச் சேர்ந்த 620 பேரும், ஹரியானாவைச் சேர்ந்த 604 பேரும், குஜராத்தைச் சேர்ந்த 245 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரும் விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை 15,564 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சில கெடுபிடிகளை அமெரிக்கா பின்பற்றியது. இதனால் இந்திய மாணவர்கள் விசா பெறுவதில் தாமதம்…
புதுடெல்லி: உலக விளையாட்டு போட்டியின் வில்வித்தைப் பிரிவில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். உலக விளையாட்டு போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வில்வித்தை பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் யாதவ் 145-147 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க வீரர் கர்டிஸ் லீ பிராட்னாக்சிடம் தோல்வி கண்டார். இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிஷப் யாதவ், சக நாட்டவரான அபிஷேக் வர்மாவுடன் மோதினார். இதில் ரிஷப் 149-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தைக் கைப்பற்றினார். ஆசிய குத்துச்சண்டை இந்தியாவுக்கு 2 தங்கம்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 2 தங்கப் பதக்கங்களை வென்றனர்.ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை…