Author: admin

புதுடெல்லி: உ.பி.​யின் 75 மாவட்​டங்​களி​லும் 20,324 மருத்​துவ முகாம்​கள் ஒரே சமயத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்​டோபர் 2 வரை இரண்டு வாரங்​களுக்கு இந்த முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இவற்​றில் உடல்​நலப் பரிசோதனை மட்​டுமின்​றி, ரத்​தப் பரிசோதனை உள்​ளிட்ட பிற பரிசோதனை​கள் மற்​றும் தீவிர நோய்​களுக்​கான சிகிச்​சை​யும் அளிக்​கப்பட உள்​ளது. இந்த முகாம்களில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க முதல்​வர் யோகி உத்​தர​விட்​டுள்​ளார். இந்த முகாமின் ஒரு பகு​தி​யாக 507 ரத்த தான முகாம்​களுக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தொடக்க விழா​வில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: இந்த முகாம்​களில் கர்ப்​பிணி​களுக்கு பிரசவத்​திற்கு முந்​தைய பராமரிப்​பு, குழந்​தைகளுக்கு தடுப்​பூசி மற்​றும் ஊட்​டச்​சத்து குறை​பாட்டை நீக்குதல் ஆகிய​வற்றில் கவனம் செலுத்த உத்​தர​விட்​டுள்​ளேன். பெண் குழந்​தைகளை காப்​போம் திட்​டம், பெண்​களுக்கு மகப்​பேறு சலுகைள் வழங்​கும் மாத்ரு வந்​தனா திட்​டம், பெண் சக்திவந்​தன் சட்​டம் போன்ற பிரதமர் மோடி​யின் முன்​முயற்​சிகள்…

Read More

அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு அபு​தாபி​யில் நடை​பெறும் கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – ஓமன் அணி​கள் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஐக்​கிய அரபு அமீரக அணியை தோற்​கடித்​திருந்​தது. தொடர்ந்து பாகிஸ்​தான் அணியை 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது. இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் இந்​திய அணி சூப்​பர் 4 சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​நிலை​யில் இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் இன்று ஓமன் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு அபு​தாபி​யில் உள்ள ஷேக் சயீத் மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூப்​பர் 4 சுற்​றுக்கு இந்​திய அணி முன்​னேறி​விட்​ட​தால் இன்​றைய ஆட்​டத்தை இந்​திய அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் சிறந்த முறை​யில்…

Read More

மேட்​டூர்: மேட்​டூர் அணையி​லிருந்து டெல்டா பாசனத்​துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 13,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 8,641 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று 8,342 கனஅடி​யாக குறைந்​தது. அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியி​லிருந்து 13,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. தண்​ணீர் வரத்​தை​விட நீர் திறப்பு அதி​க​மாக உள்​ள​தால் அணை நீர்​மட்​டம் குறை​யத் தொடங்​கி​யுள்​ளது. அணை நீர்​மட்​டம் 119.18 அடியி​லிருந்து 118.75 அடி​யாக​வும், நீர் இருப்பு 92.16 டிஎம்​சியி​லிருந்து 91.49 டிஎம்​சி​யாக​வும் குறைந்​துள்​ளது.

Read More

கால்சியம் என்பது குழந்தை பருவத்தில் வலுவான எலும்புகள் அல்லது பால் குடிக்கும் நாட்களைப் பற்றியது அல்ல. இது அமைதியாக நிகழ்ச்சியை இயக்குகிறது – உங்கள் தசைகள் நகர்த்த உதவுகிறது, உங்கள் நரம்புகள் மற்றும் உங்கள் இதய துடிப்பு சரியான நேரத்தில். சிக்கல் என்னவென்றால், நம்மில் பலர் அதை உணராமல் குறைகிறோம். அறிகுறிகள் வியத்தகு அல்ல, உங்கள் உடல் அனுப்பும் சிறியதாக இருக்கிறது. நல்ல செய்தி? உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றாமல் எளிய உணவு இடமாற்றங்கள் அவற்றை சரிசெய்ய முடியும். இங்கே என்ன பார்க்க வேண்டும், நன்றாக உணர என்ன சாப்பிட வேண்டும்.

Read More

புதுடெல்லி: ​நான் அனைத்து மதங்​களை​யும் நம்​பு​கிறேன். அனைத்து மதங்​களை​யும் மதிக்​கிறேன் என்று உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரி​வித்​துள்​ளார். மத்​திய பிரதேசத்​தின் சத்​தர்​பூர் மாவட்​டத்​தில் கஜு​ராஹோ கோயில்​கள் அமைந்​துள்​ளன. கடந்த 10, 11-ம் நூற்​றாண்​டில் சந்​தேல மன்​னர்​களால் இந்த கோயில்​கள் கட்​டப்​பட்​டன. கடந்த 12-ம் நூற்​றாண்​டின்​போது சுமார் 20 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 85-க்​கும் மேற்​பட்ட கோயில்​கள் இருந்​த​தாக வரலாற்று பதிவு​கள் குறிப்​பிடு​கின்​றன. முகலாயர் ஆட்​சிக் காலத்​தில் கஹு​ராஹோ கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. இதன்​காரண​மாக தற்​போது 6 சதுர கிலோ மீட்​டர் பரப்​பள​வில் 25 கோயில்​கள் மட்​டுமே எஞ்சி உள்​ளன. இந்த சூழலில் கஜு​ராஹோ கோயில் வளாகத்​தின் ஒரு பகு​தி​யான ஜவாரி கோயி​லில் சேதமடைந்த நிலை​யில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை சீரமைக்க கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ராகேஷ் தலால் என்​பவர் பொதுநல மனு தாக்​கல் செய்​தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிபதி அகஸ்​டின்…

Read More

ஷென்சென்: சீனா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் சீனா​வில் உள்ள ஷென்​சென் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் 6-வது இடத்​தில் உள்ள தாய்​லாந்​தின் சோச்​சு​வாங்கை எதிர்த்து விளை​யாடி​னார். 41 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் பி.​வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் இரட்​டையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி​யானது சீன தைபே​வின் ஹ்சி​யாங் சியே சியு, வாங் சி-லின் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. இதில் சாட்விக்​-ஷி​ராக் ஜோடி 21-13, 21-12 என்ற செட் கணக்​கில் எளி​தாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றில்​ கால்​ப​தித்​தது.

Read More

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரைப் பயணம் குறித்து பார்ப்போம். மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்தது. இதுபோன்ற மேடை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மட்டுமின்றி தற்போது மதுரை முத்து, சிவகார்த்திகேயன் போன்றோரும் பிரபலமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்துடன் சேர்ந்து ஜோடியாகத்தான் ரோபோ சங்கர் தோன்றுவார். ‘ஒரு கிளி உருகுது’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து 80-களின் நடனத்தை ரீ-கிரியேட்…

Read More

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி​யில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் ரெட்​டி. ரியல் எஸ்​டேட் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். சென்னை மற்​றும் புறநகரில் பிரம்​மாண்ட கட்​டிடங்​களை கட்​டிவரும் இவரது நிறு​வனம், அரசு சார்​பில் நடை​பெறும் பல்​வேறு கட்​டு​மானப் பணி​களி​லும் ஈடு​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், இவரது வீட்​டில் நேற்று காலை​முதல் துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎப் பாது​காப்​புடன் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் ராமகிருஷ்ணன் ரெட்​டி​யின் அலு​வல​கத்​தி​லும் சோதனை நடைபெற்றது. இவரது நிறு​வனம் பல்​வேறு இடங்​களில் முதலீடு செய்து சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​ட​தாக​வும், குறிப்​பாக, பண மதிப்​பிழப்பு காலத்​தில் கோடிக்​கணக்​கான ரூபாய் செல​வில் சென்னை ஈசிஆரில் நிலங்​களை வாங்​கி​யிருப்​ப​தாக​வும் எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடை​பெற்​ற​தாக கூறப்​படு​கிறது. அது​மட்​டுமில்​லாமல், பண மதிப்​பிழப்பு…

Read More

மைக்ரோபிளாஸ்டிக்ஸ், நமது சூழலில் பரவலாக, எலும்பு ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இந்த துகள்கள் எலும்பு திசுக்களில் ஊடுருவி, எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் செயல்பாட்டை சீர்குலைத்து, எலும்பு மறுஉருவாக்கத்தை ஊக்குவிப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது பலவீனமான எலும்புகள், குறைபாடுகள் மற்றும் அதிகரித்த எலும்பு முறிவு ஆபத்து ஆகியவற்றிற்கு வழிவகுக்கும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற வளர்சிதை மாற்ற எலும்பு நோய்களை அதிகரிக்கும், அவை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எல்லா இடங்களிலும் உள்ளது. நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கு தொடங்கி, இந்த சிறிய பிளாஸ்டிக் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நமது சூழலில் அதன் தாக்கத்தை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அவை கடற்கரைகள், ஆறுகள் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளை கூட மாசுபடுத்துகின்றன, 11,000 மீட்டர் வரை ஆழத்தை அடைகின்றன. இந்த புலப்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு…

Read More

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபு​தாபி​யில் நேற்று இந்​திய, யுஏஇ உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் பங்​கேற்​றார். அப்​போது அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் மிக நெருங்​கிய நட்பு நாடு​கள். இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக பேச்​சு​வார்த்தை சரியான திசை​யில் செல்கிறது. இந்​தி​யா​வின் நம்​பக​மான நட்பு நாடாக அமெரிக்கா விளங்​கு​கிறது. இரு நாடு​களுக்​கும் பலன் அளிக்​கும் வகை​யில் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும். இவ்​வாறு அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார். இந்​தி​யா, அமெரிக்கா இடையே இது​வரை 5 சுற்று பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று உள்​ளன. ஆகஸ்ட் 25-ம் தேதி 6-ம் சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக இருந்​தது. ஆனால் இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​த​தால் பேச்​சு​வார்த்தை தடைபட்​டது. இந்த சூழலில் அமெரிக்க வர்த்தக குழு​வினர் சில நாட்​களுக்கு டெல்லி வந்​தனர். அப்​போது…

Read More