புதுடெல்லி: நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுசீலா கார்கியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது, சமீபத்தில் நடந்த வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன். மேலும் அந்நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அவர் எடுத்து வரும் முயற்சிக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளேன். மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய தினம் கொண்டாட உள்ள நேபாள மக்களுக்கும் பிரதமருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என பதிவிட்டுள்ளார்.
Author: admin
செக்கர்ஸ்: இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ஸ்டார்மருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், “ நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க நான் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். எங்களுக்கு இடையே நல்ல உறவு உள்ளது. நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு, அவர் ஒரு அழகான பதில் அறிக்கையையும் வெளியிட்டார். ஆனால் நான் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன். உக்ரைனுடனான தற்போதைய மோதலில் புதின் எனக்கு ‘மிகப்பெரிய ஏமாற்றம்’ தந்துள்ளார். மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தால், புதின் போரை விட்டு…
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 செப்டம்பர் 18,19 தேதிகளில் கோவில்பட்டியில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்திய குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே. பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வு கால பலன்கள் வழங்கப்படுவதில்லை. இப்போதைய நிலையில் 16 மாத காலம் ஓய்வு கால பலன்கள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி…
இரத்த சர்க்கரை, உடலுக்கு ஒரு முக்கியமான ஆற்றல் மூலமாகும், ஆனால் ஆரோக்கியமான அளவைப் பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சமமாக அவசியம். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை நிர்வாகத்திற்கு மிகவும் தேவையான கவனம் செலுத்தப்பட்டாலும், நிலையான இரத்த குளுக்கோஸ் அளவு அனைவருக்கும் பயனளிக்கிறது என்பதை ஆராய்ச்சி பெருகிய முறையில் காட்டுகிறது. ஏற்ற இறக்கங்கள் இயல்பானவை, அன்றாடம் இது ஒரே மாதிரியாக இருக்க முடியாது, ஆனால் அன்றாட ஏற்ற இறக்கங்கள் அல்லது இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு உணவு பசி, சோர்வு மற்றும் நாள்பட்ட நோய்கள், வகை 2 நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் காலப்போக்கில் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.ரோஹன் செகல் இன்ஸ்டாகிராமில் ரோஹன்செஹ்கல் என்று அறியப்பட்டார். குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தைப் பயன்படுத்தி அவர் இந்திய மற்றும் உலகளாவிய உணவுப் பொருட்களை ஒப்பிட்டு, உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் வெவ்வேறு உணவு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.குளுக்கோமீட்டர் என்றால் என்னஇரத்தத்தில் சர்க்கரையின்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சாஜத் லோன் உட்பட பலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஹுரியத் மாநாட்டு கட்சியின் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட் உடல்நிலை பாதிப்பு காரணமாக சோப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது இறுதிச் சடங்கில் பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிலர் நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சாஜத் லோன், ஹுரியத் மாநாட்டு கட்சியின் தற்போதைய தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மெகபூபா முப்தி வெளியிட்டுள்ள…
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ), ஓராண்டு தொழிற்பிரிவுகளான உற்பத்தி செயல்முறை மற்றும் ஆட்டோமேஷன், இன் பிளாண்ட் லாஜிஸ்டிக்ஸ், இரண்டாண்டு தொழிற்பிரிவான இயந்திரவியல் டெக்னீஷியன் ஆகிய பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவைகளுடன் திருவொற்றியூர் ஐடிஐக்கு நேரடியாக சென்று சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சியில் சேர பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. கூடுதல் விவரங்களை 95668 91187, 99403 72875 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்நிலையில், சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாட உள்ள ஆட்டங்களில் முழு அட்டவணை விவரம். நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேச அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன. ‘சூப்பர் 4’ மோதல் அட்டவணை விவரம்: …
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் ரயில் தண்டவாளத்தை அத்துமீறி கடக்க முயன்றது தொடர்பாக, 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் பெரிய கோட்டமாக, சென்னை ரயில்வே கோட்டம் விளங்குகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா வரை ரயில்வே எல்லையாகவும், மொத்தம் 697.92 கி.மீ. நீளம் வரை இதன் பாதையாகவும் உள்ளது. சென்னையில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி ஆகிய பிரதான வழித் தடங்களில், தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை இயக்கப்படுகின்றது. இதுதவிர, 150-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்து அதிகம் உள்ள இவ்வழித் தடங்களில், தண்டவாளத்தை கடக்கும் நபர்கள் சிலர் அவ்வப்போது ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் நடைபெறுகிறது. ரயில்…
காபி என்பது உலகளவில் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும், இது பெரும்பாலும் அதன் ஆற்றல் அதிகரிக்கும் விளைவுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. இருப்பினும், அதிக கொழுப்பு அல்லது இதய ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டவர்கள் காபி கொழுப்பின் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்று ஆச்சரியப்படலாம். காபியில் கொலஸ்ட்ரால் இல்லை என்றாலும், சில காய்ச்சும் முறைகள் மற்றும் சேர்க்கப்பட்ட பொருட்கள் எல்.டி.எல் (“மோசமான”) கொழுப்பை பாதிக்கும். உங்கள் அன்றாட காபி பழக்கவழக்கங்களைப் பற்றி தகவலறிந்த தேர்வுகளைச் செய்வதற்கு இந்த விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். சரியான காய்ச்சும் முறைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், சில சேர்க்கைகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், காபி இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான பகுதியாக இருக்கும்.காபி, கஃபெஸ்டால் மற்றும் கஹ்வியோலில் இயற்கையான எண்ணெய்கள் எப்படி, காலை எல்.டி.எல் கொழுப்பை பாதிக்கின்றனகாபியில் இயற்கை எண்ணெய்கள் உள்ளன, குறிப்பாக கஃபெஸ்டால் மற்றும் கஹ்வியோல், இது பெரிய அளவில் உட்கொள்ளும்போது எல்.டி.எல்…
புதுடெல்லி: கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள இந்திய தொழில்நுட்ப முகமது நிஜாமுதீனின் மரணம் வலுவான எதிர்வினைகளை ஈர்த்துள்ளது, பொலிசார் அவரை ஒரு ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பாளர் என்று வர்ணித்தனர், அவரது குடும்பத்தினர் அவசர மற்றும் அதிகப்படியான பதிலைக் குற்றம் சாட்டினர், அண்டை நாடுகள் கொடியதாக மாறிய ஒரு உள்நாட்டு சண்டையை நினைவு கூர்ந்தனர்.செப்டம்பர் 3 ம் தேதி அவர்கள் ஒரு குடியிருப்புக்கு அழைக்கப்பட்டதாக சாண்டா கிளாரா போலீசார் தெரிவித்தனர், அங்கு நிஜாமுதீன் தனது ரூம்மேட்டைத் தாக்கிய பின்னர் கத்தியால் ஆயுதம் ஏந்தியதாகக் கண்டறிந்தனர். அவர் கட்டளைகளை புறக்கணித்ததாக அதிகாரிகள் கூறினர், மீண்டும் வேலைநிறுத்தம் செய்யத் தயாராக இருந்தனர், அவர்களைத் திறக்கத் தூண்டினர், அவரை காயப்படுத்தினர், அதே நேரத்தில் காயமடைந்த ரூம்மேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு கத்திகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.நிஜாமுதீனின் குடும்பத்தினர் துப்பாக்கிச் சூடு “இவ்வளவு விரைவாக நடந்தது” என்று குற்றம் சாட்டினர். செப்டம்பர் 3 சம்பவத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு மட்டுமே…