ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், “சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘கூலி’ படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின” என்று தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினி – சிம்ரன் இணைந்து நடித்தனர். அதுவே இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிறிய கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடித்திருப்பார்.
Author: admin
சென்னை: தேங்கிய மழைத் தண்ணீரில் மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடியுடன் கூடிய திடீர் மழை கொட்டியது. அதேபோல், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்திலும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவில் வசித்து வந்த கொத்தனார் சாமுவேல் (57) என்பவர், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெரு வழியாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழையினால் மின்சார கம்பி அறுந்து, அங்கு தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்து கிடந்தது. இதை கவனிக்காத சாமுவேல் மழைத் தண்ணீரில் கால் வைத்தார். அடுத்த நொடியே மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் சாமுவேல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக…
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) சமீபத்தில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதை நினைவுகூருவதாக அறிவித்துள்ளது. 7UP பூஜ்ஜிய சர்க்கரை வெப்பமண்டல சோடாவின் 2,000 வழக்குகள் சந்தையில் இருந்து பின்வாங்கப்பட்டுள்ளன. ஏன்? ஏனெனில் இந்த கேன்கள், “பூஜ்ஜிய சர்க்கரை” என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உண்மையில் வழக்கமான, முழு சர்க்கரை சோடாவால் நிரப்பப்பட்டன.இது ஒரு லேபிளிங் பிழை அல்ல, இது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தவறு, குறிப்பாக நீரிழிவு, எடை பிரச்சினைகள் அல்லது பிற சர்க்கரை உணர்திறன் நிலைமைகளை நிர்வகிப்பவர்கள். அலபாமா, புளோரிடா மற்றும் ஜார்ஜியா முழுவதும் 12-பேக் அட்டைப்பெட்டிகளில் விற்கப்படும் 12-அவுன்ஸ் கேன்களை இந்த நினைவுகூரல் பாதிக்கிறது.இந்த நினைவுகூரலுடன் சரியாக என்ன நடந்தது?FDA இன் அமலாக்க அறிக்கை, சோடா பொதிகள் யுபிசி 078000037975 (கேன்களில்) மற்றும் யுபிசி 078000037982 (அட்டைப்பெட்டிகளில்) கொண்டு சென்றன. மார்ச் 23, 2026 தேதியுடன் XXXXBR062156 மற்றும் XXXXBR062256 ஆகியவை சம்பந்தப்பட்ட எண்கள்.மொத்தத்தில், 1,954 வழக்குகள் பாதிக்கப்படுகின்றன. நாடு…
சனிக்கிழமை பாரத் மண்டபத்தில் சுபன்ஷு சுக்லா (ஸ்கிரீன் கிராப் அனி) குழு கேப்டனும் விண்வெளி வீரருமான சுபன்ஷு சுக்லா சனிக்கிழமை, இந்தியா விண்வெளி ஆய்வின் “பொற்காலத்தில்” உள்ளது என்று கூறினார்.பாரத் மண்டபத்தில் பேசுகிறார் தேசிய விண்வெளி நாள் இஸ்ரோ ஏற்பாடு செய்த கொண்டாட்டங்கள், இந்த கொண்டாட்டமே இந்தியா எவ்வளவு தூரம் வந்துள்ளது என்பதை பிரதிபலிக்கிறது என்றார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இந்த நாள் இல்லை. ஒரு வருடத்திற்குள், நாங்கள் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார். முன்னோக்கிப் பார்த்தால், அவர் இந்தியாவின் வரவிருக்கும் விண்வெளி அபிலாஷைகள், காகன்யான் மிஷன், பாரதிய அன்டாரிக்ஷ் நிலையம் மற்றும் இறுதியில் சந்திரனில் இறங்குவதை சுட்டிக்காட்டினார்.இந்தியாவின் வருங்கால விண்வெளி முயற்சிகள் குறித்து தான் உற்சாகமாக இருப்பதாகவும், உற்சாகம் இந்தியாவுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும், ஆனால் ஜப்பான் மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏஜென்சிகளும் இந்தியாவின் திட்டங்களை நெருக்கமாகப் பின்பற்றுவதாகவும், இந்திய மண்ணிலிருந்து தொடங்கப்பட்ட எதிர்கால பயணங்களில் சேர…
புது டெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை செப்டம்பர் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்கள், ராணுவ விமானங்கள் உட்பட சொந்த அல்லது குத்தகைக்கு எடுத்த விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பலமுறை இந்த தடை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா மீண்டும் பாகிஸ்தான் விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. அதேபோல, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்கான வான்வெளி மூடலை செப்டம்பர் 24 வரை நீட்டித்துள்ளது. வான்வெளி மூடல்களை நீட்டித்து இரு நாடுகளும் விமானப்படை வீரர்களுக்கு (NOTAM) தனித்தனி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. நோட்டாம் (NOTAM) என்பது விமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவசியமான தகவல்களைக் கொண்ட ஒரு…
அக்ஷய் குமார் – சைஃப் அலி கான் நடிக்கும் ‘ஒப்பம்’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலிகான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ’ஹைவான்’ என்ற தலைப்பில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ’ஹைவான்’ படத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சைஃப் அலி கான் ஒரே படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தினை கே.வி.என் நிறுவனமும், தெஸ்பியன் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் படப்பிடிப்பும் ஒரே கட்டமாக முடித்து, அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஒப்பம்’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தினை தான்…
காஞ்சிபுரம்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஏழை மீனவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் க.பழனிசாமி நேற்று செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். செய்யூர் பேருந்து நிலையம் அருகே மக்கள் மத்தியில் அவர் பேசியது: இந்தப் பகுதி விவசாயிகள் அதிகம் நிறைந்த பகுதி. ஆனால், திமுக அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருமுறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம், ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. வறட்சி உள்ளிட்ட பேரிடரின் போது பயிர்க் காப்பீடு திட்டத்தில்…
அதிக அளவு என்பது சிறந்த முடிவுகள் என்று பொருள். அதிகப்படியான மெக்னீசியம் வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலான பெரியவர்களுக்கு, தி பரிந்துரைக்கப்பட்ட தினசரி கொடுப்பனவு (ஆர்.டி.ஏ) வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து (ஆதாரம்: தேசிய சுகாதார நிறுவனங்கள்) 310-420 மி.கி எலிமெண்டல் மெக்னீசியம் ஆகும்.சப்ளிமெண்ட்ஸ் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்ப வேண்டும், அமைப்பில் வெள்ளம் இல்லை. உணவில் ஏற்கனவே மெக்னீசியம் நிறைந்த உணவுகள் (கீரை, பாதாம் அல்லது பூசணி விதைகள் போன்றவை) இருந்தால், ஒரு சிறிய துணை டோஸ் போதுமானதாக இருக்கலாம்.மறுப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. எந்தவொரு புதிய யையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரை அணுகவும், குறிப்பாக தற்போதுள்ள சுகாதார நிலைமைகள் அல்லது மருந்துகள் இருந்தால்.
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார், மேலும் ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் தாராலியில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால், அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. வீடுகள், எஸ்டிஎம் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்கள் வழியாக அதிக அளவு சகதி வெள்ளம் அடித்துச் சென்றதில், தாராலி சந்தை, கோட்தீப் மற்றும் தாராலி வளாகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. தாராலி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன. தாராலி அருகிலுள்ள சாக்வாரா கிராமத்தில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி ஓர் இளம் பெண் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். செப்டான் சந்தையில் சில கடைகளும் இடிபாடுகளால் சேதமடைந்தன, மேலும் அப்பகுதியில் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து உத்தராகண்ட் முதல்வர்…
‘மெட்ராஸ் மேட்னி’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஜூன் 6-ம் தேதி வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். சிவகார்த்திகேயனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் உடன் இருக்கும் புகைப்படங்கள் ‘மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். மேலும், சிவகார்த்திகேயன் பாராட்டுக்கு நன்றி எனவும் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். ”சிவகார்த்திகேயன் அவர்கள் மெட்ராஸ் மேட்னி படக்குழுவினருடன் கலந்துரையாடி பாராட்டியதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார் காளி வெங்கட். மிடில் க்ளாஸ் குடும்பத்தினரின் வாழ்க்கை முறையினை தத்ரூபமாக காட்டிய படம் தான் ‘மெட்ராஸ் மேட்னி’ என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படத்தினை தமிழகமெங்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…