சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.
Author: admin
கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30). கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.
கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது. இந்த போட்டியில் 124 ரன்களையே இலக்காக நிர்ணயித்த போதிலும் சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை வசப்படுத்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தா போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா விலா எலும்பு காயம் காரணமாக விளையாடவில்லை. எனினும் மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். மெக்சிகோவில் கடந்த அக்டோபர் 2024 முதக் க்ளாடியா ஷீன்பாம் என்பவர் அதிபராக இருக்கிறார். மெக்சிகோவில் ஊழலும், வன்முறையும் ஷீன்பாம் ஆட்சியில் பெருகிவிட்டது என்பது இளைஞர்களின் குற்றச்சாட்டு.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது: பம்பையில் புதிதாக 10 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம். பம்பை ஹில்டாப், சக்கு பாலத்தில் சிறிய வாகனங்களுக்கான நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் வரை 56 இடங்களில் பக்தர்களுக்கு சுக்கு நீர் விநியோகிக்கப்படும்.மொத்தம் 41 நாட்கள் மண்டல கால வழிபாடுகள் நடைபெறும். தரிசன வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், மூலிகை குடிநீர் வழங்கவும், அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை பக்தர்களின் உடல்வலி உபாதையை சரி செய்ய 24 மணி நேர பிசியோதெரபி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் முழுமை அடைந்துள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தினை முடித்துவிட்டு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். அவர் இயக்குநராக அறிமுகமாகும் கதையினைக் கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்தச் செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் பிரபாஸுக்காக கதையுடன் இருக்கும் போது, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார், பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிமோட்டை டிவி மீது வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியை அடுத்த புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகனின் முயற்சியால் நம்மவர் நூலகம், படிப்பகம், கலைக்கூடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது: அன்பு கட்சியை தாண்டியது. அண்ணாவின் மேல் எனக்கு இருக்கும் அன்பும் அப்படிப்பட்டதுதான். அவர்களிடம் கற்ற பிள்ளைகள் அனைவருக்கும், அவர்களிடம் கற்றவர்களுக்கும், இதே குணாதிசயம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பதவி வரும்போது, பணிவும், துணிவும் வர வேண்டும். பணிவுக்காக, துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம்.
கருத்தரங்கில் பங்கேற்ற கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் பேசும்போது “இன்றைய காலகட்டத்தில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 95 சதவீதம் தோல்வியை சந்திக்கின்றன. இது இயற்கை. நமது பிள்ளைகள் தொழிலில் ஈடுபடும்போது சந்திக்கும் ஆரம்பகட்ட தோல்விகளை பெற்றோர்கள் பெரிதுபடுத்தி, அவர்களது தன்னம்பிக்கையை இழக்கச் செய்யக்கூடாது.தொழில் செய்வதற்கு வழி இல்லையென்றால்வேலைக்குச் செல்லலாம். ஆனால், நாட்டுக்கு கடமையாற்ற வேண்டும் என்று கருதினால், நிச்சயம் தொழில் தொடங்க வேண்டும். அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதுவே தேச சேவை” என்றார். ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு பேசும்போது, “தொழில் தொடங்குவது என்பது திட்டமிட்ட, பகுத்தறிவு சார்ந்த முடிவல்ல.
ஒரு வைரஸ் ஆப்டிகல் மாயை பயனர்களுக்கு 15 வினாடிகளுக்குள் மறைக்கப்பட்ட எலியைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது, பலமுறை முயற்சித்தாலும் பெரும்பாலானவை தோல்வியடைகின்றன. இந்த மூளையின் டீஸர், காட்சி ஒழுங்கீனம் மற்றும் உருமறைப்பு எவ்வாறு புலனுணர்வுகளை ஏமாற்றலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இது ஆன்லைன் விவாதத்தைத் தூண்டுகிறது. உளவியலாளர்கள் இத்தகைய புதிர்கள் கவனம் மற்றும் காட்சி செயலாக்கத்தை கவனிக்கிறார்கள், இது பெரும்பாலும் விரைவான IQ மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்டிகல் மாயை புதிர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால் பயனர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் விரக்தியடைந்தனர். வைரலாகி வரும் சமீபத்திய மூளை டீஸரில் எளிமையான படம் உள்ளது, ஆனால் பெரும்பாலான மக்கள் அதில் புத்திசாலித்தனமாக மறைந்திருக்கும் எலியைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். சவால்: 15 வினாடிகளுக்குள் எலியைக் கண்டுபிடி.முதல் பார்வையில், படம் சாதாரணமானது. ஆனால் நுணுக்கமாகப் பார்த்தால், சிறிய எலி மிகவும் நன்றாக உருமறைக்கப்பட்டுள்ளது, கூர்மையான கண்களைக் கொண்ட பார்வையாளர்கள் கூட அதைக் கண்டறிய சிரமப்படுகிறார்கள்.…
செவ்வாய் கிரகத்தின் புவியியல் வரைபடத்தில் இந்தியா ஏழு புதிய குறிப்புகளைப் பெற்றுள்ளது, இது நாட்டின் அறிவியல் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறிக்கிறது. அதன் மிகப்பெரிய நதி, ஒரு பெரிய கோட்டை, பிரபலமான கடற்கரை மற்றும் இந்தியாவின் விண்வெளி வரலாற்றுடன் இணைக்கப்பட்ட இரண்டு நகரங்கள் உட்பட பல முக்கிய கேரளா அடையாளங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்கள், சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அவற்றின் பெயர்களை வழங்குகின்றன. இந்த அம்சங்கள் ஏறக்குறைய 225 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்த பெயர்கள் கிரக அறிவியலில் இந்தியாவின் பங்கின் உலகளாவிய அங்கீகாரத்தை பிரதிபலிக்கின்றன. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இருப்பை மேலும் வலுப்படுத்தி, செவ்வாய்க் கிரக ஆய்வு மற்றும் புவியியல் ஆய்வுகளில் நாட்டின் விரிவாக்க பங்களிப்பை உயர்த்தி, புதிய பெயர்களை நவம்பர் 24 அன்று சர்வதேச வானியல் ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.கேரளாவின் புவியியல் செவ்வாய் கிரகத்தில் இடம் பெறுகிறதுபுதுப்பிக்கப்பட்ட பெயர் பட்டியலில் பெரியார்,…
