Author: admin

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

Read More

கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30). கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.

Read More

கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பிய​னான தென் ஆப்​பிரிக்க அணி, இந்​தி​யா​வுக்கு எதி​ராக கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கடந்த 15 ஆண்​டு​களில் இந்​திய மண்​ணில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் முதல் வெற்​றி​யாக இது அமைந்​தது. இந்த போட்​டி​யில் 124 ரன்​களையே இலக்​காக நிர்​ண​யித்த போதி​லும் சைமன் ஹார்​மரின் சுழற்​பந்து வீச்​சால் தென் ஆப்​பிரிக்க அணி வெற்​றியை வசப்​படுத்தி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. கொல்​கத்தா போட்​டி​யில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான காகிசோ ரபாடா விலா எலும்பு காயம் காரண​மாக விளை​யாட​வில்​லை. எனினும் மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணி​யின் வெற்​றிக்கு தங்​களது பங்​களிப்பை வழங்​கினர்.

Read More

மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். மெக்சிகோவில் கடந்த அக்டோபர் 2024 முதக் க்ளாடியா ஷீன்பாம் என்பவர் அதிபராக இருக்கிறார். மெக்சிகோவில் ஊழலும், வன்முறையும் ஷீன்பாம் ஆட்சியில் பெருகிவிட்டது என்பது இளைஞர்களின் குற்றச்சாட்டு.

Read More

இதுகுறித்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் கூறிய​தாவது: பம்​பை​யில் புதி​தாக 10 கொட்​டகைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இங்கு 10 ஆயிரம் பக்​தர்​கள் தங்கி ஓய்​வெடுக்​கலாம். பம்பை ஹில்​டாப், சக்கு பாலத்​தில் சிறிய வாக​னங்​களுக்​கான நிறுத்​தம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. பம்​பை​யில் இருந்து சந்​நி​தானம் வரை 56 இடங்​களில் பக்​தர்​களுக்கு சுக்கு நீர் விநி​யோகிக்​கப்​படும்.மொத்​தம் 41 நாட்​கள் மண்டல கால வழி​பாடு​கள் நடை​பெறும். தரிசன வரிசை​யில் நிற்​கும் பக்​தர்​களுக்கு பிஸ்​கெட், மூலிகை குடிநீர் வழங்​க​வும், அன்​ன​தானத்​துக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. பாத​யாத்​திரை பக்​தர்​களின் உடல்​வலி உபாதையை சரி செய்ய 24 மணி நேர பிசி​யோதெரபி மையங்​களும் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அனைத்து ஏற்​பாடு​களும் முழுமை அடைந்​துள்​ளன. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Read More

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தினை முடித்துவிட்டு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்‌ஷித் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ். அவர் இயக்குநராக அறிமுகமாகும் கதையினைக் கேட்டுவிட்டு, உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்தச் செய்தி திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் பிரபாஸுக்காக கதையுடன் இருக்கும் போது, அறிமுக இயக்குநர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார், பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

ரிமோட்டை டிவி மீது வீசி​விட்டு திமுக கூட்​ட​ணி​யில் இணைந்​தது ஏன் என மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன் புது விளக்​கம் ஒன்றை அளித்​துள்​ளார்.தஞ்​சாவூர் அருகே உள்ள செங்​கிப்​பட்​டியை அடுத்த புதுக்​கரியப்​பட்​டி​யில் கவிஞர் சினேக​னின் முயற்​சி​யால் நம்​மவர் நூல​கம், படிப்​பகம், கலைக்​கூடம் ஆகிய​வற்​றுக்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரும், எம்​.பி-​யு​மான கமல்​ஹாசன் பேசி​ய​தாவது: அன்பு கட்​சியை தாண்​டியது. அண்​ணா​வின் மேல் எனக்கு இருக்​கும் அன்​பும் அப்​படிப்பட்​டது​தான். அவர்​களிடம் கற்ற பிள்​ளை​கள் அனை​வ​ருக்​கும், அவர்​களிடம் கற்​றவர்​களுக்​கும், இதே குணா​திசயம் இருப்​பதை நான் பார்த்​திருக்​கிறேன். பதவி வரும்​போது, பணி​வும், துணி​வும் வர வேண்​டும். பணிவுக்​காக, துணிவை இழக்​கும் சுயமரி​யாதை அற்​றவர்​கள் அல்ல எங்​கள் கூட்​டம்.

Read More

கருத்​தரங்​கில் பங்​கேற்ற கெவின்​கேர் நிறு​வனர் சி.கே.ரங்​க​நாதன் பேசும்​போது “இன்​றைய கால​கட்​டத்​தில் தொடங்​கப்​படும் ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் 95 சதவீதம் தோல்​வியை சந்​திக்​கின்​றன. இது இயற்​கை. நமது பிள்​ளை​கள் தொழிலில் ஈடு​படும்​போது சந்​திக்​கும் ஆரம்​பகட்ட தோல்வி​களை பெற்​றோர்​கள் பெரிதுபடுத்​தி, அவர்​களது தன்​னம்​பிக்​கையை இழக்​கச் செய்​யக்​கூ​டாது.தொழில் செய்​வதற்கு வழி இல்​லை​யென்​றால்வேலைக்​குச் செல்​லலாம். ஆனால், நாட்​டுக்கு கடமை​யாற்ற வேண்​டும் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் தொழில் தொடங்க வேண்​டும். அதன் மூலம் நிறைய பேருக்கு வேலை​ வாய்ப்பு வழங்க வேண்​டும். அதுவே தேச சேவை” என்​றார். ஜோஹோ நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் குமார் வேம்பு பேசும்​போது, “தொழில் தொடங்​கு​வது என்​பது திட்​ட​மிட்ட, பகுத்​தறிவு சார்ந்த முடிவல்ல.

Read More

ஒரு வைரஸ் ஆப்டிகல் மாயை பயனர்களுக்கு 15 வினாடிகளுக்குள் மறைக்கப்பட்ட எலியைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது, பலமுறை முயற்சித்தாலும் பெரும்பாலானவை தோல்வியடைகின்றன. இந்த மூளையின் டீஸர், காட்சி ஒழுங்கீனம் மற்றும் உருமறைப்பு எவ்வாறு புலனுணர்வுகளை ஏமாற்றலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது, இது ஆன்லைன் விவாதத்தைத் தூண்டுகிறது. உளவியலாளர்கள் இத்தகைய புதிர்கள் கவனம் மற்றும் காட்சி செயலாக்கத்தை கவனிக்கிறார்கள், இது பெரும்பாலும் விரைவான IQ மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆப்டிகல் மாயை புதிர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால் பயனர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் விரக்தியடைந்தனர். வைரலாகி வரும் சமீபத்திய மூளை டீஸரில் எளிமையான படம் உள்ளது, ஆனால் பெரும்பாலான மக்கள் அதில் புத்திசாலித்தனமாக மறைந்திருக்கும் எலியைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். சவால்: 15 வினாடிகளுக்குள் எலியைக் கண்டுபிடி.முதல் பார்வையில், படம் சாதாரணமானது. ஆனால் நுணுக்கமாகப் பார்த்தால், சிறிய எலி மிகவும் நன்றாக உருமறைக்கப்பட்டுள்ளது, கூர்மையான கண்களைக் கொண்ட பார்வையாளர்கள் கூட அதைக் கண்டறிய சிரமப்படுகிறார்கள்.…

Read More

செவ்வாய் கிரகத்தின் புவியியல் வரைபடத்தில் இந்தியா ஏழு புதிய குறிப்புகளைப் பெற்றுள்ளது, இது நாட்டின் அறிவியல் பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லைக் குறிக்கிறது. அதன் மிகப்பெரிய நதி, ஒரு பெரிய கோட்டை, பிரபலமான கடற்கரை மற்றும் இந்தியாவின் விண்வெளி வரலாற்றுடன் இணைக்கப்பட்ட இரண்டு நகரங்கள் உட்பட பல முக்கிய கேரளா அடையாளங்கள், இப்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள பள்ளங்கள், சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு அவற்றின் பெயர்களை வழங்குகின்றன. இந்த அம்சங்கள் ஏறக்குறைய 225 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்த பெயர்கள் கிரக அறிவியலில் இந்தியாவின் பங்கின் உலகளாவிய அங்கீகாரத்தை பிரதிபலிக்கின்றன. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இருப்பை மேலும் வலுப்படுத்தி, செவ்வாய்க் கிரக ஆய்வு மற்றும் புவியியல் ஆய்வுகளில் நாட்டின் விரிவாக்க பங்களிப்பை உயர்த்தி, புதிய பெயர்களை நவம்பர் 24 அன்று சர்வதேச வானியல் ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.கேரளாவின் புவியியல் செவ்வாய் கிரகத்தில் இடம் பெறுகிறதுபுதுப்பிக்கப்பட்ட பெயர் பட்டியலில் பெரியார்,…

Read More