சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,826 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், விற்பனை மேற்பார்வையாளர் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடை பணியாளர்களை கடைகளின் நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அளவில் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிரவல் செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக மாநில அளவில் இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் தினமும் நடக்கும் விற்பனையின் அளவை கொண்டுகடை பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரை விற்பனை நடைபெறும் கடைகளில் ஒரு மேற்பார்வையாளர், 3…
Author: admin
நாம் குழந்தைகளாக இருக்கும்போது, நாங்கள் வெல்லமுடியாதவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலகில் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் இந்த பிரமிப்பு உணர்வு உருவாகிறது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, உலகை மாற்றுவதற்கான சாத்தியத்தை நாம் கற்பனை செய்கிறோம், ஆனால் நாம் வளரும்போது, விஷயங்கள் ஒரு திருப்பத்தை எடுக்கும். நாங்கள் பணம், செல்வம் மற்றும் புகழுக்குப் பின் ஓடத் தொடங்குகிறோம், சிறிது நேரத்திற்கும் மேலாக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களால் நுகரப்படுகிறது, ஆனால் ஒரு குழந்தையின் கண்களைப் பார்க்கும்போது, எதுவும் சாத்தியம் என்று செய்தியில் நம்புவதற்கும் நம்பிக்கை வைத்திருப்பதற்கும் ஏதாவது சிறப்பு இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம், ஏனென்றால் அது!
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் முரளி கார்த்திகேயன், அமெரிக்காவின் ரே ராப்சன் மோதிய ஆட்டம் 123-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இந்தியாவின் நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இதில் ஜோர்டன் வான் பாரஸ்ட் 51-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்திய கிராண்ட்மாஸ்டரான வி.பிரணவ், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அவாண்டர் லியாங் 61-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விதித் குஜராத்தி மோதிய ஆட்டம் 109-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. சேலஞ்சர்ஸ் பிரிவு…
அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம், ‘அதர்ஸ்’. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான இதில், கவுரி ஜி கிஷண், மருத்துவராக நடித்துள்ளார். அஞ்சு குரியன், முனிஷ் காந்த், ஹரீஷ் பெரேடி, மாலா பார்வதி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அபின் ஹரிஹரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரிக்கும் இந்தப் படத்தை கார்த்திக் ஜி இணைத் தயாரிப்பு செய்கிறார். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை: தவறான கணக்கீடு செய்யும் கணக்கீட்டாளர் மீது துணை நிதி கட்டுபாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து துணை நிதி கட்டுபாட்டாளர்களுக்கு நிதி இயக்குநர் எழுதிய கடிதம்: துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் வட்டங்களில் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த தலைமை பிரிவு அலுவலங்களுக்கு தெரிவிக்க வேண்டும். இருப்பினும் அவ்வப்போது மின்கணக்கீட்டு பணியாளர்கள் தவறாக மின்கணக்கீடு செய்வதால் வாரியத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. துணை நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கணக்கீட்டு ஆய்வாளர் தங்கள் வட்டத்துக்குள் உள்ள தாழ்வழுத்த பிரிவில் அசாதாரணமாக வரும் கணக்கீட்டு அறிக்கைகளை ஆய்வு செய்தால் இந்த தவறுகள் நடப்பதை தவிர்த்திருக்கலாம். இதேபோல தவறான கணக்கீடுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் பணியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கணக்கீட்டில் ஏதாவது அசாதாரணமான நடவடிக்கை இருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதை தொடர்ந்து அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இனி வரும்…
“நீங்கள் மிகவும் வலிமையானவர், தைரியமானவர், நான் உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன்”ஒருவரின் குழந்தை எவ்வளவு வலிமையானது மற்றும் தைரியமாக இருக்கிறது என்பதை ஊக்குவிப்பது, குறிப்பாக அவர்கள் பாதுகாப்பற்றதாக உணரும் சூழ்நிலைகளில், சவால் விடுத்துள்ளனர், இந்த கூற்று நிபந்தனையற்ற ஆதரவையும் வழிகாட்டலையும் வெளிப்படுத்துகிறது. குழந்தைக்கு அவர்களின் துணிச்சல் மதிப்பிடப்படுகிறது என்று சொல்வது, அது வாழ்க்கையில் இன்னும் நல்லது செய்ய அவர்களை ஊக்குவிக்கிறது.
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் பெரம்பூர் டான் போஸ்கோ 25-20, 25-18 என்ற செட் கணக்கில் பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி அணியையும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் 33-35, 25-10, 25-10 என்ற செட் கணக்கில் ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம் அணியையும் வீழ்த்தின. செயின்ட் பீட்ஸ் 28-18, 26-28, 25-22 என்ற கணக்கில் ஆலந்தூர் மான்போர்ட் அணியையும், முகப்பேர் வேலம்மாள் அணி 25-14, 25-8 என்ற கணக்கில் அம்பத்தூர் சேது பாஸ்கரா அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின. சிறுமியர் பிரிவு அரை இறுதியில் டி.இ.எல்.சி.மெக்டலின் 25-13, 25-13 என்ற செட் கணக்கில் ஜெசி மோசஸ் அணியையும், வித்யோதயா மெட்ரிக் 25-19, 25-22 என்ற கணக்கில் சென்னை மேல்நிலைப்…
சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார். அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடுதேடிச் சென்று வழங்கும் தமிழக அரசின் உயரிய நோக்கத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 ரேசன் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளிகள், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத் தினாளிகள் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள…
உரத்த குறட்டை, பெரும்பாலும் வெறும் எரிச்சலூட்டுவதாக நிராகரிக்கப்படுகிறது, ஸ்லீப் அப்னியா போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை சமிக்ஞை செய்யலாம், டாக்டர் ஷெர்லி கோஹ் எச்சரிக்கிறார். தூக்கத்தின் போது தொடர்ச்சியான குறட்டை, பகல்நேர சோர்வு மற்றும் சுவாச இடைநிறுத்தங்கள் சிவப்புக் கொடிகள். தூக்கத்தை சீர்குலைப்பதைத் தாண்டி, இது மூளை மற்றும் இதய ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு ஓய்வுக்கு எடை மேலாண்மை மற்றும் காற்றுப்பாதை பிரச்சினைகள் உள்ளிட்ட மூல காரணத்தை நிவர்த்தி செய்வது முக்கியமானது. நீங்கள் குறட்டை விடுகிறீர்களா? உங்கள் கூட்டாளர் எப்படி? பெற்றோரா? குழந்தைகள்? குறட்டை உண்மையில் ஒரு கவர்ச்சிகரமான பண்பு அல்ல என்றாலும், நீங்கள் குறட்டை வைக்கும் அதே அறையில் நீங்கள் தூங்குகிறீர்கள் என்றால், அது ஒரு சத்தமில்லாத தொல்லை விட அதிகம். குறட்டை, குறிப்பாக சத்தமாக, ஒரு தீவிரமான உடல்நலக் கவலையாகும். மலேசியாவின் கோலாலம்பூரை தளமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டு மருத்துவ மருத்துவர் டாக்டர் ஷெர்லி…
விழுப்புரம்: மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழுக் கூட்டம் சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்துக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். சென்னையில் கடந்த 9-ம் தேதி அன்புமணி கூட்டிய பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவராக அவர் ஓராண்டுக்கு நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தை, அவரது தனிச் செயலாளர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த மே 30-ம் தேதி முதல் கட்சித் தலைவராக உள்ளார். செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், எந்த அங்கீகாரமும் இல்லாமல், எம்எல்ஏ மற்றும் கட்சியின் முன்னணித் தலைவர்களை பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிவித்து வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட செயல் தலைவர் பதவியை ஏற்காமல், போட்டியாக செயல்படுகிறார். கட்சியின் விதிகளை மீறி செயல்படும் அவரை சஸ்பெண்ட் செய்வது…