சூரிய கிரகணங்கள் எப்போதுமே உலகளாவிய ஆர்வத்தை ஈர்த்துள்ளன, அவை உண்மையில் எவ்வளவு ஒளியைத் தடுக்கின்றன மற்றும் முழு கிரகத்தையும் இருட்டாக்க முடியுமா என்ற கேள்விகளை அடிக்கடி அழைக்கின்றன. ஆகஸ்ட் 2, 2027 அன்று முழு சூரிய கிரகணத்தை உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் தாக்கத்தைப் பற்றிய ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த குறிப்பிட்ட கிரகணம் இந்த தசாப்தத்தில் மிகவும் பரவலாக பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பாதை ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளை கடக்கிறது. இன்னும் பெரும்பாலான பகுதிகள் ஒரு பகுதி கிரகணத்தை மட்டுமே காணும், அதே நேரத்தில் பல பகுதிகள் எந்த மாற்றத்தையும் கவனிக்காது. என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, கிரகணங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றின் கருமையாக்கும் விளைவு ஏன் மிகவும் உள்ளூர்மயமாக்கப்பட்டுள்ளது மற்றும் 2027 ஆம் ஆண்டு உட்பட எந்த சூரிய கிரகணமும் ஒரே நேரத்தில் முழு உலகத்தையும்…
Author: admin
நவம்பர் 28, 2025 வெள்ளியன்று நியூயார்க்கில் உள்ள Macy’s ஃபிளாக்ஷிப் ஸ்டோரில் கருப்பு வெள்ளி விற்பனை மற்றும் ஒப்பந்தங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (AP Photo/Angelina Katsanis) நீங்கள் எங்கே இருந்தீர்கள் உண்மையான கருப்பு வெள்ளியா? 2000 களின் முற்பகுதியில், பெஸ்ட் பைக்கு வெளியே குளிரில் முகாமிட்டு, தெர்மோஸைப் பிடித்துக் கொண்டு, யாரேனும் ஒருவர் உங்களை ஒரு தள்ளுபடி பிளாட் ஸ்கிரீனுக்காக மிதித்து விடக் கூடாது என்று பிரார்த்தனை செய்ததால், இந்த நீரேற்றப்பட்ட பதிப்பு அல்ல. அப்போது, கருப்பு வெள்ளி இருந்தது வரம்பு. அதில் வன்முறை இருந்தது. அதில் பேரார்வம் இருந்தது. டைட்டானிக் கப்பலின் கடைசி லைஃப் படகு போல பிளெண்டரில் சண்டை போடும் அத்தைகள் அதில் இருந்தனர். இன்று? ஆவி… வேறு. இப்போது கருப்பு வெள்ளி ஒரு தேசிய விளையாட்டை விட லேசான ஆலோசனையாக உணர்கிறது. நாங்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க மாட்டோம், ரீபூட் செய்யவும், உருட்டவும், மொபைலைத் திறக்கவும்,…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கு ரூ.10,000 கொடுக்காமல் இருந்திருந்தால் ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது என்று ஜன சுராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேர்தலுக்கு முன்னதாக, ஜேடியு 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என பிரசாந்த கிஷோர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தேர்தலுக்கு முன்பாக முதல்வரின் பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 60,000 பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட்டது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்காக 1.5 கோடி பெண்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டது. மேலும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் ஜேடியு அதிக இடங்களில் வெற்றி…
சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் குறிப்பிட்ட தூரம் விரைவாக ஓடி அதன் பின்னரே மேலே எழும்பும். அதேபோல, வானில் இருந்து தரையிறங்கும்போதும் ஓடுதளத்தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்னரே குறிப்பிட்ட இடத்தை வந்தடையும். இந்த நிலையில், விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் புதிய தொழில்நுட்பத்தை (Vertical Take-off & Landing – VTOL) சென்னை ஐஐடி விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் பி.ஏ.ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனதரா, ஆராய்ச்சியாளர் அனந்து பத்ரன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை: பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க. அ்ண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி: ஜப்பானின் டோக்கியோ நகரில் டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனுயா பிரசாத் 241.1 புள்ளிகளுடன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பிரஞ்சலி பிரசாந்த் துமல் 236.8 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஈரானின் மஹ்லா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம், போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ 8 சிவிங்கிப் புலிகளை ஒப்படைத்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு திரவுபதி முர்மு, அதிபர் துமா கிடியான் ஆகியோர் சென்றனர். தேசியப் பூங்கா பகுதியில் இருவரும், பாதுகாப்பு வாகனத்தில் வலம் வந்தனர்.
திருப்பதி: ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் வரை, அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி வரை பத்மாவதி தாயார் தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதனையொட்டி, நேற்று வைகானச ஆகம விதிகளின்படி, கோயில் முழுவதும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம், பன்னீர் போன்றவற்றால் கருவறை உட்பட உப சன்னதிகள், கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம் என அனைத்து இடங்களிலும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம வல்லுனர்கள் கோயிலை சுத்தம் செய்தனர். அதன் பின்னர் நைவேத்தியம் படைத்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் மதியம் 12 மணிக்கு மேல் தாயாரை தரிசனம் செய்ய அனுமதித்தனர்.
ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’. ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.அதன்பின், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-வே வென்றது. ஆனால், இந்த முறை நிச்சயம் அதிமுக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்டும். அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உதவித் தொகை பெற கட்சியினர் உதவ வேண்டும்” என்று மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
