புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லி குண்டுவெடிப்புக்காக நேபாளத்தில் இருந்து ஏழு பழைய செல்போன்களை சதிகாரர்கள் வாங்கியுள்ளனர். மேலும் 17 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 6 சிம் கார்டுகளை உ.பி.யின் கான்பூரில் வாங்கியுள்ளனர்.
Author: admin
கோவை மாவட்டத்தில் ‘ஸ்டார்ட் அப்’ துறையில் 1,592 நிறுவனங்கள் தொடங்கி, அதன் மூலம் 37 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ‘ஸ்டார்ட் அப்’ துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் வகையில் தமிழக அரசு 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ‘ஏஐ இன்னவேஷன் ஹப்’ தொடங்க திட்டமிட்டுள்ளது” என்றார்.மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் முதன்மை செயலாளர் பிரஜிந்திரா நவ்நீத், செயலாளர் கிருஷ்ணன், சென்னையில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் (எஸ்டிபிஐ) இயக்குநர் மாதேஷா, புதுமை தொழில்நுட்ப குழுமத்தின் (ஐடிஎன்டி) முதன்மை செயல் அதிகாரி வனிதா, சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், கருத்தரங்கு தலைவர் முருகவேல், சிஐஐ தென்னிந்திய துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
கல்வி என்பது மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம் பிக்கையுடன் வாழக் கற்றுக் கொள்ள வழிவகுப்பதே! தங்களது குழந்தைகளைச் சாதனையாளர்களாக மாற்ற பெற்றோர் எடுக்க வேண்டிய முதல் முயற்சி, சிறந்த கல்வியைக் கொடுப்பதே. கல்வி இல்லாமல் குழந்தைகள் ஒருபோதும் சவால்களை எதிர்கொள்ள இயலாது. கல்வியின் முக்கியத்துவத்தைத் தங்கள் பிள்ளைகளிடம் தொடர்ந்து கவனப்படுத்திக்கொண்டே இருப்பதுதான் பெற்றோர் செய்யும் மிகப் பெரிய நன்மை. உயர் கல்வியில் கவனம்: கல்வி ஒன்றுதான் மனிதர்களைப் புகழின் உச்சிக்கே கொண்டு போகும். ஓர் ஏழை மாணவரை உலகம் வியக்கும் பணக்காரராக மாற்றும் வல்லமை கல்விக்கே உண்டு. இப்படிப்பட்ட கல்வியோடு, ஒழுக்கமான, அமைதியான, துணிச்சலான, புத்திசாலியான, செயல் வேகம் கொண்ட மாணவர்களை உருவாக்குவதில் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. இவ்வாறு சிறந்த மாணவர்களை உருவாக்கினாலும், அவர்களை வெற்றி யாளர்களாக மாற்றுவது நம் அனைவரின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது.
புதுடெல்லி: டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கம் வென்றார். ஜப்பானின் டோக்கியோ நகரில் காது கேளாதோருக்கான டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இந்திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
வாஷிங்டன்: H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், திறமையானவர்களை நாம் நமது நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்.
அரியலூர் / தஞ்சாவூர்: கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட மூலவர் பெருவுடையாருக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து, அன்னாபி ஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை முதல் சாதம் சமைக்கப்பட்டு லிங்கத்தின் மீது சாற்றப்பட்டு, பலகாரங்கள், பழங்கள், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. லிங்கத்தின் மீது சாற்றப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறும் என்பதும், இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கங்களை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து, மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, மூலவர் மீது சாற்றப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ படத்தை இயக்கியவர் ஹனு ராகவபுடி. இவர், அடுத்து இயக்கும் ‘ஃபவுஸி’ என்ற படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, இயான்வி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸ் போர்வீரனாக நடிக்கிறார். இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் லுக் அக்டோபரில் வெளியானது.
சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பெண்கள் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
அசெஞ்சர் சொல்யூஷன்ஸ், ஆக்ஸா எக்ஸ்.எல், கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ், இஒய், கேபிஎம்ஜி, மாஸ்டர் கார்டு, ஆப்டம் குளோபல் சொல்யூஷன்ஸ், புராக்டர் அண்ட் கேம்பிள், டெக் மஹிந்திரா, விப்ரோ ஆகிய 10 நிறுவனங்களின் சார்பில் அவற்றில் பணிபுரியும் பெண்கள், அவதார் குழுமத்தின் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.இது குறித்து அவதார் குழுமத்தின் நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ் கூறியதாவது: இந்திய பணியிடங்களில் உள்ளடக்கத்தை யதார்த்தமாக்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு அவதார் தோற்றுவிக்கப்பட்டது. பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குவதன் மூலம் அவற்றை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
உங்கள் பொரியல்களை காலேக்காக மாற்றிக் கொண்டீர்கள். ஆனால் அது சரியான செயலா. எண்ணெய் அடிப்படையிலான டிரஸ்ஸிங் அல்லது சாஸ்களுடன் முட்டைக்கோஸை இணைப்பது கரோட்டினாய்டுகள் போன்ற அதன் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை உடலின் உறிஞ்சுதலை கணிசமாக மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பொதுவான தயாரிப்பு முறைகளை சவால் செய்கிறது, ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது, பச்சையாகவோ அல்லது சமைத்ததாகவோ, முட்டைக்கோசின் ஊட்டச்சத்து சக்தியை அதிகரிக்க முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் பொரியல்களை காலேக்காக மாற்றிக் கொண்டீர்கள். அவை உங்கள் இன்ஸ்டாகிராம் செய்யக்கூடிய ஸ்மூத்தி கிண்ணங்களில் தோன்றும். உணவைச் சுத்தம் செய்வதற்கான குறியீட்டை உடைத்துவிட்டீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்ன யூகிக்க? காலே பற்றி நீங்கள் தவறு செய்துள்ளீர்கள். ஆம், கேல் ஒரு சிறந்த சூப்பர்ஃபுட், ஆனால் நீங்கள் அதை தவறாக சாப்பிடலாம். கொலம்பியாவின் மிசோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முட்டைக்கோஸ் இலைகளில் இருந்து அதிக ஊட்டச்சத்தை பெறுவதற்கான…
