புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி போலீஸார், கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும். இதனை அமல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்களின் கடமையைச் செய்ய தவறிவிட்டனர். பெங்களூரு, மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும்…
Author: admin
வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார் மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும்…
சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பிஹார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த…
இஞ்சி தேநீர் உலகளவில் ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது, அதன் ஆறுதலான, வெப்பமயமாதல் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஏராளமான சுகாதார நன்மைகளுக்காகவும் மதிக்கப்படுகிறது. செரிமானத்தைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவோ, குமட்டலை எளிதாக்கவோ அல்லது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவோ பலரும் அதை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்கிறார்கள். அதன் இயற்கையான சேர்மங்கள் ஜிங்கரால் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை தீர்வாக அமைகின்றன. இருப்பினும், எந்தவொரு சுகாதார சப்ளிமெண்டையும் போலவே, ஒவ்வொரு நாளும் மிதமான இல்லாமல் இஞ்சி தேயிலை உட்கொள்வது சில நேரங்களில் எதிர்பாராத பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் நெஞ்செரிச்சல், செரிமான அச om கரியம் அல்லது சில மருந்துகளுடனான தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இஞ்சி தேநீரை நீங்கள் தவறாமல் பருகுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல் நீங்கள் சிறந்த நன்மைகளைப் பெறுகிறீர்கள்…
பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த கே.என்.ராஜண்ணா, ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் காங்கிரஸார் தடுக்கவில்லை?” என விமர்சித்தார். இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று கர்நாடக மாநிலம் மதுகிரியில் காங்கிரஸ் மேலிடத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுகிரி நகர கவுன்சிலர் கிரிஜா மஞ்சுநாத் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ராஜண்ணா கூறுகையில், ‘‘எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை தெரிவிப்பேன்’ என்றார்
சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடியிலும், பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் கிராமத்தில் ரூ.58 கோடியிலும் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26.85 கோடியில் நிரந்தரமாக முகத்துவாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கிராமத்தில் ரூ.8 கோடியிலும், அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில் ரூ. 6.81 கோடியிலும் கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8.50 கோடியிலும் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், கோமுகி அணையில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன்விதைப் பண்ணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணையில் ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.177.16 கோடியில் 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு பால்…
இருதய நோய்கள் உலகளவில் நோய் மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது விவரிக்கப்படாத சோர்வு போன்ற இதயம் தொடர்பான அறிகுறிகள் எழும்போது, மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் நிலையை மதிப்பிடுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் கண்டறியும் மற்றும் சிகிச்சை முறைகளின் கலவையை நம்பியிருக்கிறார்கள். பொதுவாக நிகழ்த்தப்படும் இரண்டு நடைமுறைகள் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகும். பெரும்பாலும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டாலும், இவை முற்றிலும் வேறுபட்டவை. இதயம் தொடர்பான விசாரணைகள் அல்லது சிகிச்சைக்குத் தயாராகும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியமானது. ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதுஆஞ்சியோகிராம் என்றால் என்னஆஞ்சியோகிராபி என்றும் அழைக்கப்படும் ஒரு ஆஞ்சியோகிராம், உடலில் உள்ள இரத்த நாளங்களை காட்சிப்படுத்த பயன்படும் ஒரு கண்டறியும் இமேஜிங் சோதனையாகும், குறிப்பாக இதய தசையை வழங்கும் கரோனரி தமனிகள்.முக்கிய புள்ளிகள்:ஒரு வடிகுழாய் (ஒரு மெல்லிய, நெகிழ்வான குழாய்) ஒரு இரத்த நாளத்தில்,…
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில் ஷிவ்ராய் மத் எனும் கிராமம் உள்ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்யத் என்பவரின் சமாதியுடன் ஒரு தர்கா உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுடன் இந்துக்களும் வந்து பாபா சைய்யத்தின் சமாதியை வழிபடுவது வழக்கம். இங்கு வருடந்தோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிலும் இந்துக்கள் கலந்துகொண்டு மதநல்லிணக்கம் பேணி வந்தனர்.இந்நிலையில் இந்த தர்கா அங்கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்துவிட்டு, கட்டப்பட்டதாக சமீபத்தில் ஒரு புகார் கிளம்பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்சிங் என்ற கிராமவாசி தர்காவினுள் நுழைந்து அங்கிருக்கும் சமாதியை சேதப்படுத்தினார். இது தொடர்பான புகாரின் பேரில் கடக்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் தர்கா…
டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்களில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாய்…
சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடியில், 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. தொடர்ந்து, பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மற்றும் கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர் பகுதிகள் கிண்டி மெட்ரோவுடன் 21 கி.மீ. தூரத்தில் இணைக்கப்பட உள்ளன. இதேபோல, கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை,…