Author: admin

புதுடெல்லி: மக்​களவை தேர்​தலின்போது வாக்​காளர் பட்​டியலில் முறை​கேடு செய்​யப்​பட்​டு, வாக்​குத் திருட்டு நடை​பெற்​ற​தாக குற்​றம்​சாட்​டி​யுள்ள ராகுல் காந்​தி, கடந்த வாரம் அதற்​கான ஆதா​ரங்​களை வெளி​யிட்​டார். ஆனால், இந்த குற்​றச்​சாட்​டு​களை தலைமைத் தேர்​தல் ஆணை​யம் மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்​து, தேர்​தல் ஆணை​யத்​துக்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில், டெல்லி நாடாளு​மன்​றத்​தில் இருந்து தேர்​தல் ஆணைய அலு​வல​கம் வரை எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 300-க்​கும் அதி​க​மான எம்​.பி.க்​கள் பேரணி​யாகச் சென்​றனர். அப்​போது ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை டெல்லி போலீ​ஸார், கைது செய்​து, பின்​னர் விடு​வித்​தனர். இந்​நிலை​யில், நேற்று நாடாளு​மன்ற வளாகத்​தில் ராகுல் காந்​தி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நாங்​கள் அரசி​யலமைப்பை பாது​காக்​கிறோம். ஒரு​வருக்கு ஒரு வாக்கு என்​பது நமது அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படை​யாகும். இதனை அமல்​படுத்​து​வது இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் கடமை. ஆனால், அவர்​கள் தங்​களின் கடமை​யைச் செய்ய தவறி​விட்​டனர். பெங்​களூரு, மட்​டுமல்ல நாடு முழு​வதும் பல்​வேறு பகு​தி​களில் இது​போன்று முறை​கேடு நடை​பெற்​றுள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​துக்​கும்…

Read More

வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும். இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார் மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும்…

Read More

சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: தேர்தல் நடைமுறைக்கு அடிப்படை ஆவணமே வாக்காளர் பட்டியல்தான் என்ற நிலையில் அந்த வாக்காளர் பட்டியலைத் துல்லியமாகவும், தவறுகள் இல்லாமலும் தயாரிப்பது சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு மிக முக்கியமானது என்பதை இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. தேர்தல் ஜனநாயகத்தைச் சிதைக்கும் பிஹார் சிறப்புத் தீவிரத் திருத்தத்தினை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்த…

Read More

இஞ்சி தேநீர் உலகளவில் ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது, அதன் ஆறுதலான, வெப்பமயமாதல் சுவைக்காக மட்டுமல்லாமல், அதன் ஏராளமான சுகாதார நன்மைகளுக்காகவும் மதிக்கப்படுகிறது. செரிமானத்தைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவோ, குமட்டலை எளிதாக்கவோ அல்லது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவோ பலரும் அதை தங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்கிறார்கள். அதன் இயற்கையான சேர்மங்கள் ஜிங்கரால் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை தீர்வாக அமைகின்றன. இருப்பினும், எந்தவொரு சுகாதார சப்ளிமெண்டையும் போலவே, ஒவ்வொரு நாளும் மிதமான இல்லாமல் இஞ்சி தேயிலை உட்கொள்வது சில நேரங்களில் எதிர்பாராத பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியான உட்கொள்ளல் நெஞ்செரிச்சல், செரிமான அச om கரியம் அல்லது சில மருந்துகளுடனான தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இஞ்சி தேநீரை நீங்கள் தவறாமல் பருகுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால், எந்தவொரு குறைபாடுகளும் இல்லாமல் நீங்கள் சிறந்த நன்மைகளைப் பெறுகிறீர்கள்…

Read More

பெங்களூரு: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பெங்​களூரு​வில் உள்ள மகாதேவப்​புரா சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் திருடப்​பட்​ட​தாக குற்​றம் சாட்டினார். இதுகுறித்து கர்​நாடக கூட்​டுறவுத் துறை அமைச்​ச​ராக இருந்த‌ கே.என்​.​ராஜண்​ணா, ‘‘கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சி​யில் இருந்தபோதே வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பட்​டது. அதனை ஏன் காங்​கிரஸார் தடுக்​க‌​வில்​லை?” என விமர்​சித்​தார். இந்த கருத்து காங்​கிரஸ் மேலிடத்​துக்கு கோபத்தை ஏற்​படுத்​தி​ய​தால் அவர் அமைச்​சர​வை​யில் இருந்து நீக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் அவரது ஆதர​வாளர்​கள் நேற்று கர்​நாடக மாநிலம் மதுகிரி​யில் காங்​கிரஸ் மேலிடத்தை கண்​டித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். மதுகிரி நகர கவுன்​சிலர் கிரிஜா மஞ்​சு​நாத் தலை​மை​யில் நடந்த போராட்​டத்​தில் 300-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர். அப்​போது காங்​கிரஸ் மேலிடத்​துக்கு எதி​ராக முழக்​கங்​களை எழுப்​பினர். இதுகுறித்து ராஜண்ணா கூறுகை​யில், ‘‘எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. டெல்லி சென்று மேலிடத் தலை​வர்​களை சந்தித்து எனது தரப்பு விளக்​கத்தை தெரி​விப்​பேன்’ என்​றார்​

Read More

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடியிலும், பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் கிராமத்தில் ரூ.58 கோடியிலும் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26.85 கோடியில் நிரந்தரமாக முகத்துவாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கிராமத்தில் ரூ.8 கோடியிலும், அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில் ரூ. 6.81 கோடியிலும் கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8.50 கோடியிலும் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், கோமுகி அணையில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன்விதைப் பண்ணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணையில் ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.177.16 கோடியில் 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு பால்…

Read More

இருதய நோய்கள் உலகளவில் நோய் மற்றும் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது விவரிக்கப்படாத சோர்வு போன்ற இதயம் தொடர்பான அறிகுறிகள் எழும்போது, மருத்துவ வல்லுநர்கள் பெரும்பாலும் நிலையை மதிப்பிடுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் கண்டறியும் மற்றும் சிகிச்சை முறைகளின் கலவையை நம்பியிருக்கிறார்கள். பொதுவாக நிகழ்த்தப்படும் இரண்டு நடைமுறைகள் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகும். பெரும்பாலும் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டாலும், இவை முற்றிலும் வேறுபட்டவை. இதயம் தொடர்பான விசாரணைகள் அல்லது சிகிச்சைக்குத் தயாராகும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியமானது. ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதுஆஞ்சியோகிராம் என்றால் என்னஆஞ்சியோகிராபி என்றும் அழைக்கப்படும் ஒரு ஆஞ்சியோகிராம், உடலில் உள்ள இரத்த நாளங்களை காட்சிப்படுத்த பயன்படும் ஒரு கண்டறியும் இமேஜிங் சோதனையாகும், குறிப்பாக இதய தசையை வழங்கும் கரோனரி தமனிகள்.முக்கிய புள்ளிகள்:ஒரு வடிகுழாய் (ஒரு மெல்லிய, நெகிழ்வான குழாய்) ஒரு இரத்த நாளத்தில்,…

Read More

புதுடெல்லி: உத்​தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்​கா​பாத்​தி​லும் தர்​கா​வா? கோயி​லா? என்ற சர்ச்சை கிளம்​பி​யுள்​ளது. இரு தரப்​பினர் நடத்​திய போராட்​டம் தொடர்​பாக 145 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. உ.பி.​யின் பரூக்​கா​பாத்​தில் கைம்​கஞ்ச் பகு​தி​யில் ஷிவ்​ராய் மத் எனும் கிராமம் உள்​ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்​யத் என்​பவரின் சமா​தி​யுடன் ஒரு தர்கா உள்​ளது. இங்கு வெள்​ளிக்​கிழமை​களில் முஸ்​லிம்​களு​டன் இந்​துக்​களும் வந்து பாபா சைய்​யத்​தின் சமா​தியை வழிபடு​வது வழக்​கம். இங்கு வருடந்​தோறும் நடை​பெறும் சந்​தனக்​கூடு விழா​விலும் இந்​துக்​கள் கலந்​து​கொண்டு மதநல்​லிணக்​கம் பேணி வந்​தனர்.இந்​நிலை​யில் இந்த தர்கா அங்​கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்​து​விட்​டு, கட்​டப்​பட்​ட​தாக சமீபத்​தில் ஒரு புகார் கிளம்​பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்​சிங் என்ற கிராம​வாசி தர்​கா​வினுள் நுழைந்து அங்​கிருக்​கும் சமா​தியை சேதப்​படுத்​தி​னார். இது தொடர்​பான புகாரின் பேரில் கடக்​சிங் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டாலும் அவர் இன்​னும் கைது செய்​யப்​பட​வில்​லை. எனினும் தர்கா…

Read More

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்களில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் வென்றது. தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்றது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷாய்…

Read More

சென்னை: சென்​னை​யில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின்​கீழ் 3 வழித்​தடங்​களில் ரூ.63,246 கோடி​யில், 116.1 கி.மீ. தொலை​வுக்கு பணி​கள் வேக​மாக நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, பூந்​தமல்லி – பரந்​தூர், கோயம்​பேடு – ஆவடி என அடுத்​தடுத்​து, மெட்ரோ ரயில் திட்​டங்​களைச் செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கிடையே, சென்​னை​யின் பிர​தான பகு​தி​யாக இருக்​கும் தாம்​பரம் – கிண்டி – வேளச்​சேரி மற்​றும் கலங்​கரை விளக்​கம் – உயர் நீதி​மன்​றம் வரை மெட்ரோ ரயில் திட்​டம் நீட்​டிப்பு குறித்து தயாரிக்​கப்​பட்ட சாத்​தி​யக்​கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்​புதல் அளித்​த​தால், அடுத்​தகட்​ட​மாக விரி​வான திட்ட அறிக்​கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் முடிவு செய்​துள்​ளது. அதன்​படி, தாம்​பரம் – கிண்டி – வேளச்​சேரி மெட்ரோ ரயில் தடத்​தில் மேட​வாக்​கம், பள்​ளிக்​கரணை, வேளச்​சேரி ஆகிய புறநகர் பகுதி​கள் கிண்டி மெட்​ரோவுடன் 21 கி.மீ. தூரத்​தில் இணைக்​கப்பட உள்​ளன. இதே​போல, கலங்​கரை விளக்​கத்​தில் இருந்து மெரினா கடற்​கரை,…

Read More