Author: admin

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 24 வயது சட்​டக் கல்​லூரி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்யப்பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மேங்​கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் (சைக்​கோ) பாதிக்கப்பட்​ட​வர் என அவரது முன்​னாள் வகுப்பு தோழர்​களும், ஜூனியர்​களும் குற்​றம்​சாட்​டி​ உள்​ளனர். இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: சட்​டக்​கல்​லூரி மாணவி பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள முக்​கிய குற்​ற​வாளி​யான மனோஜித் மிஸ்ரா நீண்ட கால​மாக மனநோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்​ததுடன், பாலியல் வன்​முறை​யில் ஈடு​படும் அளவுக்கு மோச​மான நடத்தை உடைய​வர். அதனால்​தான், கடந்த 2021-ம் ஆண்டு கல்​லூரி​யின் திரிண​மூல் பிரி​வில் இருந்து மிஸ்ரா வெளி​யேற்​றப்​பட்​டார். பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மாணவி உட்பட எந்த பெண்​களைப் பார்த்​தா​லும் என்னை திரு​மணம் செய்து கொள்​கிறா​யா? என்று பலமுறை தொல்லை கொடுத்​துள்​ளார். மேலும், பெண்​களின் புகைப்​படங்​களை மார்​பிங் செய்து நண்​பர்​களிடையே பரப்​பும் அளவுக்கு மனநோய் உடைய​வர் மிஸ்​ரா. மேலும், பெண்​களை உடல்​ரீ​தி​யாக​வும் அவமானப்​படுத்​து​வார். பாலியல்…

Read More

சென்னை: பிளஸ் 1 மறுகூட்​டல், மறும​திப்​பீடு முடிவு​கள் இன்று (ஜூன் 30) வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்பு விவரம்: தமிழகத்​தில் பிளஸ் 1 வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த மார்ச் மாதம் நடை​பெற்​றது. இந்த தேர்வு எழு​தி​ய​வர்​களில் மறுகூட்​டல், மறும​திப்​பீடு கோரி விண்​ணப்​பித்​தவர்​களில் மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​களின் பதிவெண் பட்​டியல் இன்​று (ஜூன் 30) மதி​யம் வெளி​யிடப்​படு​கிறது. அதன்​ விவரங்​களை மாணவர்​கள் தேர்​வுத்​ துறை​யின் www.dge.tn.gov.in எனும் இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். இந்த பட்​டியலில் இடம்​பெறாதவர்​களின் விடைத்​தாள்​களில் எவ்​வித மாற்​ற​மும் இல்லை என்​பது தெரிவிக்​கப்​படு​கிறது. மதிப்​பெண் மாற்​ற​முள்ள மாணவர்​கள் மட்​டுமே மேற்​கண்ட தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் இருந்து தங்​களுக்​கான திருத்​தப்​பட்ட மதிப்​பெண் பட்​டியலை பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். மேலும், அசல் மதிப்​பெண் சான்​றிதழ் வழங்​கப்​படும் தேதி விவரங்​கள் பின்​னர் வெளி​யிடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

பர்மிங்ஹாம்: விக்கெட்களை வீழ்த்துவதற்கே நான் முன்னுரிமை அளித்து வருகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரசித் கிருஷ்ணா. பயிற்​சி​யின் இடையே செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தென் ஆப்​பிரிக்கா​வுட​னான டெஸ்ட் தொடரில்​தான் நான் அறி​முக​மானேன். இது​வரை 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி 13 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளேன். இங்​கிலாந்து தொடர் சவாலான​தாக இருக்​கும் என்​பது எங்​களுக்குத் தெரி​யும். முதல் டெஸ்ட் போட்​டி​யில் வெற்றி பெறு​வதற்கு போதிய முயற்​சிகளை மேற்​கொண்​டோம். ஆனால், முடிவு வேறு வித​மாகி​விட்​டது. முதல் டெஸ்ட் போட்​டியில் சிறப்​பாகவே பந்​து​வீசினோம். ஆனால் 2-வது இன்​னிங்​ஸில் இங்​கிலாந்து வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடினர். முதல் இன்னிங்​ஸில் சரி​யான லென்த்​தில் என்​னால் பந்து வீச இயல​வில்​லை. ஆனால் 2-வது இன்​னிங்​ஸின்​போது சுதா​ரித்து பந்​து​வீசினேன். மேலும் ஆடுகளமும்…

Read More

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் படமான இதை, ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஜூலை 11-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா, செல்லா அய்யாவு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் கார்த்தி என பலர் கலந்துகொண்டனர். விஷ்ணு விஷால் பேசும்போது, “ருத்ரா, என்னுடைய சொந்த தம்பி இல்லை. பெரியப்பா மகன். அப்பா – பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு பெரியப்பாவுக்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர்…

Read More

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர். அதே​நேரம், அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் கடந்த முறை விண்​ணப்​பித்து நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம் என கூறப்​பட்​டது. இதற்​கிடையே, திருப்​பத்​தூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், “ஜூலை 15 முதல்…

Read More

நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) என்பது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலை நீண்ட கால சேதத்தால் குறிக்கப்பட்டுள்ளது, இது இறுதியில் சிறுநீரகங்களை பலவீனமாக மாற்றுகிறது, மேலும் அவர்களால் இரத்தத்தை வடிகட்ட முடியாது. இது உடலில் கழிவு மற்றும் கூடுதல் திரவத்தை உருவாக்க வழிவகுக்கிறது. சி.கே.டி -க்கு நேரடி சிகிச்சை இல்லை என்றாலும் (அது முற்போக்கானது), சிகிச்சைகள் அறிகுறிகளை நிர்வகிக்கவும் அதன் முன்னேற்றத்தை குறைக்கவும் உதவும், இதில் வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், டயாலிசிஸ் அல்லது மேம்பட்ட நிகழ்வுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும். இருப்பினும், வழக்கமான சிகிச்சைகள் தவிர, இப்போது சில நம்பிக்கை உள்ளது. தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியில் வெளியிடப்பட்ட ஒரு அண்மையில் ஏற்பட்ட மருத்துவ ஆய்வு நம்பிக்கைக்குரிய செய்திகளைக் கொண்டு வந்துள்ளது: சோடியம் பைகார்பனேட்டுடன் தினசரி கூடுதல், பேக்கிங் சோடா என்றும் அழைக்கப்படுகிறது, இது…

Read More

திருவனந்தபுரம்: கேரளா​வில் பள்ளி மாணவ, மாண​வியரின் உடல்​நலன், மனநலனை மேம்​படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்​படு​கிறது. இதற்கு மத அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. ஜும்பா என்​பது நடனத்தை உள்​ளடக்​கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்​டில் கொலம்​பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உரு​வாக்​கி​னார். தற்​போது உலகம் முழு​வதும் 180-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் இந்த நடனம் பிரபல​மாக இருக்​கிறது. கேரளா​வில் அரசு மற்​றும் தனி​யார் பள்ளி மாணவ, மாண​விருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்​கும் திட்​டம் நடப்பு கல்​வி​யாண்​டில் அறி​முகம் செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்​படும். போதை பொருள் பழக்​கத்​துக்கு மாணவர்​கள் அடிமை​யா​வது தடுக்​கப்​படும் என்று கேரள கல்​வித் துறை விளக்​கம் அளித்து உள்​ளது. ஆனால் பல்​வேறு மத அமைப்​பு​கள் ஜும்பா நடன பயிற்சி திட்​டத்​துக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. முஸ்​லிம் மாணவர்​கள் கூட்​டமைப்​பின் தலை​வர் நவாஸ் கூறும்​போது,…

Read More

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 லீக் கிரிக்கெட் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. சாய் கிஷோர் அதிரடியாக விளையாடி 55 ரன்கள் (34 பந்துகள். 8 பவுண்டரி. ஒரு சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய நெல்லை அணி 19.4 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. திருப்பூர் அணி சார்பில் டி.நடராஜன் 3, மோகன் பிரசாத் 2, சாய்கிஷோர், இசக்கிமுத்து, முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Read More

சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுச்​செய​லா​ளர் வைகோ சிறப்​புரை ஆற்​றி​னார். பொருளாளர் மு.செந்​தில​திபன், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் மல்லை சத்​யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராஜேந்​திரன், ரொஹையா மற்​றும் நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: தமிழகத்தை வளர்ச்​சிப் பாதை​யில் முன்​னெடுத்​துச் செல்​லும் திமுக அரசு தொடர​வும், இந்​துத்​துவ மதவாத சக்​தி​களை முறியடிக்​க​வும் கூட்​டணி என்ற மதி​முக எடுத்த முடிவை வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலிலும் கடைப்​பிடிப்​போம். அரசி​யலமைப்​பில் மதச்​சார்​பற்ற, சோசலிச எனும் வார்த்​தைகளை நீக்க வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் கூறி​யிருப்​பது கடும் கண்​டனத்​துக்​குரியது. முரு​கன் மாநாட்​டில் பெரி​யார், முன்​னாள் முதல்​வர் அண்​ணாதுரையை சிறுமைப்​படுத்தி வெளி​யான காணொலிக்கு கடும் கண்​டனம். திருச்​சி​யில் நடை​பெறவுள்ள முன்​னாள்…

Read More

புதுடெல்லி: கடந்த 2022-ம் ஆண்டில், 186 நாடுகளை உள்ளடக்கிய உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தொழில்முனைவில் பாலின இடைவெளி குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய பெண்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொழில்முனைவோராக உள்ளனர் என்றும் இது உலக சராசரியைவிட குறைவு என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ஆண்களில் (15-64 வயது) சுமார் 3% பேர் தொழில்முனைவோராக உள்ளனர். இது உலக சராசரியுடன் ஒத்துப் போகிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Read More