புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டின் நிலைமைகள் உடன் கூடிய முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரும் பதிவாளர் ஜெனரலுமான மிருத்யுஞ்செய் குமார் நாராயண் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீட்டின் நிலைமை, சொத்துகள் மற்றும் வசதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். 2027 பிப்ரவரி 1 முதல் திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக-பொருளாதார, கலாச்சார மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’ நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறி உள்ளது. அமெரிக்காவில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 29) இரவு 9.30 மணிக்கு இன்டர் மியாமி மற்றும் பிஎஸ்ஜி அணி இடையிலான ‘ரவுண்ட் ஆப் 16’ போட்டி தொடங்கியது. இந்த ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி கோல் பதிவு செய்தது பிஎஸ்ஜி. தொடர்ந்து ஆட்டத்தில் பிஎஸ்ஜி ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமியின் டிபென்ஸ் படு வீக்காக இருந்தது. அதை பயன்படுத்திக் கொண்ட பிஎஸ்ஜி பந்தை பாஸ் செய்வதில் துல்லியமாக செயல்பட்டது. அவர்களை தடுக்க மியாமி அணியினர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வி அடைந்தன. ஆட்ட நேரத்தில் சுமார் 67 சதவீதம் பந்தை தங்கள்…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’. கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரித்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருந்தார். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசும் போது, “இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்த போது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, அஸ்வத்துக்குத் திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம்…
சென்னை: விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளைபோல நாம் அனைவரும் பெண் கல்வி, ஏழை மகளிர் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி கூறினார். விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை சார்பில், பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்தபதி தேவ.ராதா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா சென்னை பெரியார் நகரில் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன் தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி,ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணனை கவுரவித்தார். தொடர்ந்து, அறக்கட்டளை சார்பில் ஏராளமான பெண் பயனாளிகளுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை, கண் கண்ணாடி, தையல் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் நீதிபதி பேசியதாவது:விராட் விஸ்வகர்ம சேவாலயா அறக்கட்டளை, பெண் குழந்தைகள் கல்விக்காகவும், ஏழை மகளிர் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் ஆண்டுதோறும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளைபோல நாமும் ஏழை பெண்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாட்டுக்காக முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஸ்தபதி தேவ.ராதாகிருஷ்ணன் வடிவமைத்த…
அமர்ந்த முதுகெலும்பு திருப்பம் என்றும் அழைக்கப்படும் இந்த முறுக்கு, இதயம் உட்பட உள் உறுப்புகளை மசாஜ் செய்து, புழக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலை நச்சுத்தன்மையடையச் செய்ய உதவுகிறது மற்றும் முதுகெலும்பில் பதற்றத்தை நீக்குகிறது. திருப்பங்கள் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன, இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், இதயத் துடிப்பைக் குறைக்கவும் உதவும், இதனால் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.அதை எப்படி செய்வதுகால்கள் நீட்டிக்கப்பட்ட தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.உங்கள் வலது முழங்காலை வளைத்து, உங்கள் வலது பாதத்தை உங்கள் இடது தொடையின் வெளிப்புறத்தில் வைக்கவும்.உங்கள் இடது முழங்காலை வளைத்து, உங்கள் இடது பாதத்தை உங்கள் வலது இடுப்புக்கு அருகில் வையுங்கள்.ஆதரவுக்காக உங்கள் வலது கையை உங்கள் பின்னால் வைக்கவும்.உங்கள் முதுகெலும்பை உள்ளிழுத்து நீட்டவும்.உங்கள் இடது முழங்கையை உங்கள் வலது முழங்காலுக்கு வெளியே வைக்கவும், உங்கள் உடற்பகுதியை வலதுபுறமாக சுவாசிக்கவும், திருப்பவும்.30 விநாடிகள் பிடி, பின்னர் விடுவித்து மறுபுறம் மீண்டும் செய்யவும்.நன்மைகள்இதயம் மற்றும் நுரையீரலுக்கு…
புரி: உலகம் புகழ்பெற்ற ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை 2 நாட்களுக்கு முன் தொடங்கியது. புரியில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பங்கேற்கும் இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, காவல்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, விஐபிக்களின் தரிசனத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது. ரூ.25 லட்சம் உதவித் தொகை: இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.25…
சென்னை: சென்னையில் இன்று முதல்(ஜூன் 30) ஜூலை 6-ம் தேதி வரை 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டியை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஜவஹர்லால் நேரு மைதானத்திலும், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திலும் நடத்தவுள்ளது. ஆடவர் பிரிவில் 24 அணிகளும், மகளிர் பிரிவில் 38 அணிகளும் பங்கேற்கவுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். போட்டி தொடக்க விழா இன்று மாலை 5 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும். போட்டிக்கு எஸ்என்ஜே குரூப்ஸ், ஜாஸ் பெர்ப்யூம்ஸ், டிவோசா, ரேடியன்ஸ் ரியால்டி, காவேரி டிஎம்டி பார்ஸ் அன்ட் ஸ்டிரக்ச்சுரல், பிவெல் ஹாஸ்பிட்டல்ஸ், காஸ்கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்கின்றன. சாம்பியன் பட்டம் பெறும் ஆடவர், மகளிர் அணிகளுக்கு எஸ்என்ஜே கோப்பை வழங்கப்படும். ஆடவர் பிரிவில் 2-ம் இடம்பெறும் அணிக்கு டிவோசா கோப்பையும்,…
எழுபதுகளில் முன்னணி நடிகர்களாக இருந்த பலர், ஒரு ஆக்ஷன், சமூகப் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது, காமெடி படங்களுக்கும் தங்கள் கால்ஷீட்களை ஒதுக்கி வந்தனர். அதில் முத்துராமன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் நடித்து பல காமெடி படங்கள் அப்போது வெளிவந்தன. அப்படி ‘தென்னாட்டு ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர் நடித்து வெளியான காமெடி படங்களில் ஒன்று, ‘அவசரக் கல்யாணம்’. நண்பர்களான சேகரும் ரகுவும் வேலை தேடி சென்னை வருகிறார்கள். வந்ததுமே பணத்தைப் பறி கொடுத்து விடுகிறார்கள். பின்னர், பிச்சைக்காரி வேடத்தில் அலையும் பணக்காரியான கமலாவை யார் என தெரிந்துகொண்டு, பொய்ச்சொல்லி ஏமாற்றி மணந்து கொள்கிறார் ரகு. அவன் சொன்னது பொய் என்று சேகர் போட்டுக் கொடுக்க, முதலிரவு அன்றே வெளியேற்றப்படுகிறான், ரகு. இதனால் சேகர் மீது ரகுவுக்கு கோபம். இதற்கிடையே வழக்கறிஞரான வசந்தியை காதலிக்கிறான், சேகர். அவரைப் பழிவாங்க நினைக்கும் ரகு, சேகருக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக வசந்தியிடம் சொல்கிறான். வசந்தி,…
சென்னை: வட சென்னை வியாசர்பாடி பகுதியில் கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி 40 சதவீதம் மட்டுமே நிறைவடைந் திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதில் அளித்துள்ளது. வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப் பணி நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சண்முகம், சென்னை மாநகராட்சி மேயரிடம் அண்மையில் மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், டி.கே.சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கணேசபுரம் மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி முடிவுற்று. தற்போது வடக்கு பகுதியில் ஆழ்துளைக் கடைக்கால்கள் அமைக்கும் பணி, சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களை மாற்றியமைக்கும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. வடக்கு பகுதியில்…
ஒவ்வொரு குடும்பமும் அன்பு, பொறுமை மற்றும் அன்றாட குழப்பம் ஆகியவற்றின் கலவையில் இயங்குகிறது. ஒரு குடும்ப அமைப்பில் பின்பற்ற முறையான விதிகள் எதுவும் இல்லை என்றாலும், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை அமைதியாக வழிநடத்தும் சில சொல்லப்படாத எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பேசப்படாத சொற்கள் ஒழுக்கத்தைப் பற்றியது அல்ல, ஆனால் இணைப்பு பற்றியது. அவை எங்கள் வீடுகளில் பாதுகாப்பு, மரியாதை மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் நாங்கள் பின்பற்றாத ஒப்பந்தங்கள்.பேசப்படாத குடும்ப விதிகள் என்பது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு நாம் கடந்து செல்லும் விஷயங்கள் கூட உணராமல். கருத்து வேறுபாடுகளை நாங்கள் எவ்வாறு தீர்க்கிறோம், இரவு உணவு மேஜையில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்கிறோம், அல்லது யாராவது நமக்குத் தேவைப்படும்போது நம்மை எவ்வாறு கிடைக்கச் செய்கிறோம். இந்த பழக்கவழக்கங்கள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அவை நம் வளர்ச்சியை அமைதியாக பாதிக்கின்றன மற்றும் குடும்ப உறவுகளை வலுவாக வைத்திருக்கின்றன.இன்று, உலகம் அணு குடும்ப இயக்கவியலை…