Author: admin

பிரயாக்ராஜ்: உ.பி.​யின் பிர​யாக்​ராஜ் மாவட்​டம், பாரா அனல் மின் நிலை​யத்​தில் பணி​யாற்றி வந்​தவர் ரோகித் (35). இவர் லாலாப்​பூர் என்ற கிராமத்​தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்​டில் வசித்து வந்​தார்.இந்​நிலை​யில் சுஷ்மா கடந்த வெள்​ளிக்​கிழமை பிற்​பகல் கழுத்​தில் காயத்​துடன் ரத்த வெள்​ளத்​தில் வீட்​டில் இறந்து கிடந்​தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீ​ஸார், வீட்​டின் தரை​யில், ‘‘நான் மனநிலை சரி​யில்​லா​தவள், எனது கணவர் அப்​பா​வி’’ என ரத்​தத்​தால் எழு​தி​யிருந்​ததை பார்த்​தனர்.

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி06 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

Read More

தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் ஜெய்க்கா நிதி நிறுவனத்தின் 85 சதவீத நிதி உதவியும், 15 சதவீதம் மத்திய அரசும் நிதி ஒதுக்கியது. 2019 ஜனவரி 27-ல் பிரதமர், அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.பி தேர்தலை மனதில் வைத்து அடிக்கல் நாட்டினர். 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி வரை எதுவுமே செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான 222 ஏக்கர் நிலத்தை ஆதாரபூர்வமாக வழங்கியது. தொடர்ந்து தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். இதற்கிடையில் 2022-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் சேர்ந்தனர்.தமிழக முதல்வர் மறுத்திருந்தால் எய்ம்ஸ் வராமல் போயிருக்கும். எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்கள் படிக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கினார். தற்போது வரை 4 ஆண்டுகளில் 200 எய்ம்ஸ் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், இன்னும் எய்ம்ஸ் கட்டி முடிக்கவில்லை. இன்னும் ஓராண்டு முடிந்தால் எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரியை பார்க்காமலே…

Read More

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ஷுப்​மன் கில் விளை​யாடிக் கொண்​டிருந்​த ​போது கழுத்​தில் சுளுக்கு ஏற்​பட்டு பெவிலியன் திரும்​பி​னார். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ஓய்​வு எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தினர். இதனால் அவர் 2-வது இன்​னிங்​ஸிலும் விளை​யாடவில்​லை.

Read More

மாஸ்கோ: நடப்பு 2025-ம் ஆண்​டின் முதல் 6 மாத காலத்​தில் ரஷ்யாவின் மாஸ்​கோ நகருக்கு சுற்​றுலா சென்ற இந்​தியப் பயணி​களின் எண்​ணிக்கை 40 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. அதன்​படி, 2025 முதல் அரை​யாண்​டில் 40,800 பயணி​கள் இந்​தி​யா​விலிருந்து மாஸ்​கோவுக்கு சுற்​றுலா சென்​றுள்​ளனர். காமன்​வெல்த் அமைப்பை (சிஐஎஸ்) சாராத நாடு​களின் பயணி​கள் மாஸ்​கோவுக்கு சுற்​றுலா செல்​வ​தில் இந்​தியா இரண்​டாவது இடத்​தில் உள்​ளது.

Read More

ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் சடையாண்டி கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம்.

Read More

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின் விளை​யாடு​வதற்​காக மீண்​டும் ஸ்கூல் மைதானத்​துக்கு வந்​தோம். இவன் அங்கு நின்​றிருந்​தான்! “என்​னடா இங்க நிற்​கிற? என்று கேட்​டோம். “இல்​ல​டா, நயி​னார் வாத்​யார் என் தலை​யில அடிச்​சிட்​டார். அதனால ஹெட்​மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்ண போறேன், அதுக்​குத்​தான் நிற்​கிறேன். என் தலை​யில ரத்​தம் வருதா பாரு?” என்று கேட்​டான். நான் பார்த்த போது ஒரு துளி ரத்​தமில்​லை! அவனை பயமுறுத்​து​வதற்​காக ‘என்​னடா இவ்​வளவு ரத்​தம்” என்று சொன்​னேன். அதை நிஜம் என்று நம்​பி, ‘ஹெட் மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்​ணி, இனி அவர் யாரை​யும் அடிக்க விடாம பண்​றேன்” என்று காத்​திருந்​தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்​னேன். அவன், “இரு​டா… கொஞ்​சம் அழுதுக்​கிறேன்” என்று ரிகர்​சல் பார்த்​தான். பிறகு கண்​ணீரோடு அவர் அறைக்​குள் நுழைந்​தான். அங்கு அவர் இல்​லை. பின் கதவு…

Read More

சாதனை படைத்த குறுவை பருவ நெல் உற்பத்தி: தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீஃப் (குறுவை) பருவத்தில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி எய்தப்பட்டுள்ளது. 16.11.2025 நிலவரப்படி நெல் கொள்முதல் கடந்த 2024-2025-ஆம் ஆண்டினுடைய 4.81 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து நடப்பாண்டில் 14.11 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்றும் இது தமிழ்நாட்டின் வரலாற்றில் குறுவை (கரீஃப்) பருவத்தில் நெல் கொள்முதலில் புதிய சாதனையாகும்.மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 16.11.2025 நிலவரப்படி 1,932 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, 1,86,674 விவசாயிகளிடமிருந்து 14.11 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை ரூ. 3,559 கோடி வழங்கி கொள்முதல் செய்துள்ளது. ஒப்பீட்டளவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (16.11.2024 வரை) 1,095 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 4.83 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற மத்​திய அமைச்​சரவை கூட்​டத்​தில், ஏற்​றும​தி​யாளர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ரூ.45 ஆயிரம் கோடி மதிப்​பிலான 2 திட்​டங்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இதன்​படி, ரூ.25,060 கோடி மதிப்​பிலான ஏற்​றுமதி வளர்ச்சி திட்​டம் செயல்​படுத்​தப்​படும். 2025-26 முதல் 2030-31 வரையி​லான காலத்​துக்கு சர்​வ​தேச வர்த்​தகத்​தில் இந்​தி​யா​வின் போட்​டித் தன்​மையை அதி​கரிக்க இந்த திட்​டம் வகை செய்​கிறது.

Read More

குளிர்காலம் வந்துவிட்டது. குளிர்காலம் வரும்போது காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் வரும். அப்படியானால் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது? சரியான உணவை உட்கொள்வதன் மூலம். ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். இந்த உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தேவையான ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன. அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன, உங்கள் ஆற்றலை நிலையாக வைத்திருக்கின்றன மற்றும் பொதுவான குளிர்கால நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கின்றன, எனவே அவை ஒவ்வொரு நாளும் உங்கள் தட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பண்டிகைகள், காய்ச்சல், எல்லாவற்றின் சீசன். வெப்பநிலை குறைந்து விடுமுறை காலம் தொடங்கும் போது, ​​இருட்டில் பதுங்கியிருக்கும் கிருமிகளும் வலுவடைகின்றன. பெரும்பாலான மக்கள் மூக்கடைப்பு, ஜலதோஷம் மற்றும் நோய்வாய்ப்படுவதில் இருந்து ஒரு படி தொலைவில் இருப்பது போன்ற நிலையான உணர்வை அனுபவிக்கலாம். இந்தக் குளிர்காலத்தில் நோய்களைத் தடுப்பது எப்படி? சரியான…

Read More