Author: admin

சென்னை/விழுப்புரம்: ​ராம​தாஸுடன் சமா​தான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. ஆனால், அவருடன் இருக்​கும் தீயசக்​தி​கள், குள்​ளநரி கூட்​டம் தடுக்​கிறது என பாமக பொதுக்​குழு​வில் அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தெரி​வித்​தார். பாமக பொதுக்​குழு கூட்​டம், அக்​கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாமல்​லபுரத்​தில் நேற்று நடந்​தது. கூட்​டத்​தில் கட்​சி​யின் தலை​வர் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பாமா உள்​ளிட்ட நிர்​வாகி​கள்அடுத்த ஓராண்​டுக்கு அந்த பொறுப்​பு​களில் அப்​படியே தொடர்​வார்​கள். மீண்​டும் பாமக​வின் உட்​கட்சி தேர்​தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்​தப்​படும் என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த தீர்​மானத்தை அரங்​கில் கூடி​யிருந்த 2,500 பொதுக்​குழு உறுப்​பினர்​களும் கைதட்டி வரவேற்​றனர். அதே​போல், வன்​னியர்​களுக்கு விரை​வில் இடஒதுக்​கீடு வழங்​கா​விட்​டால், சிறை நிரப்​பும் போராட்​டம் நடத்​தப்​படும். தமிழகத்​தில் சாதி​வாரி மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு நடத்​து​வதற்​கான அறி​விப்பை வரும் ஆக. 15-ம் தேதி தமிழக அரசு வெளி​யிட வேண்​டும். சட்​டப்​பேரவை தேர்​தலுக்​குப் பிறகு அமை​யும் புதிய ஆட்​சி​யில் முழு மது​விலக்கு நடை​முறைப்​படுத்​து​வதை சாத்​தி​ய​மாக்க…

Read More

சென்னை: நீர்​நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்​ப​தால்​தான் மாசு ஏற்​படு​மா, கழிவு நீர், ரசாயனக் கழி​வு​கள் நீர்​நிலைகளில் கலப்​பது மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யத்​துக்கு தெரிய​வில்​லை​யா, என இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தீபாவளி, பொங்​கல், விநாயகர் சதுர்த்தி வந்​தால்​தான் தமிழகத்​தில் மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒன்று இருப்​பது வெளி​யில் தெரி​கிறது. பொங்​கலின்​போது புகை​யில்​லாத பண்​டிகை என விளம்​பரம் செய்​வது போல, பக்​ரீத்​தின்​போது ரத்​தமில்​லாத பண்​டிகை என மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் பேசுவ​தில்​லை. வீடு​களில், பொது இடங்​களில் ஆடு மாடு​களை பலி​யிடு​வது நுண்​ணு​யிர் தொற்று உரு​வாக வாய்ப்பு உண்டு என்​பதை என்​றாவது தமிழக மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் முணு​முணுத்​தது உண்​டா, கிறிஸ்​து​மஸின்​போது மெழுகு​வர்த்தி ஏற்​று​வ​தால் அதன் புகை புற்​று​நோயை உரு​வாக்​கும் தன்மை உடையது, எனவே அதனை தவிருங்​கள் என விளம்​பரப்​படுத்​தி​யது உண்​டா? இன்று சிறு கிராமங்​களில்​கூட சுத்​தி​கரிக்​கப்​பட்ட தண்​ணீர் பயன்​படுத்​தும் நிலை…

Read More

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 22 கட்​சிகள், தேர்​தல் ஆணைய பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் ஓர் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 345 பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளை முதல் கட்​ட​மாக பட்​டியலில் இருந்து நீக்​கும் நடை​முறையை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. இந்த கட்​சிகளின் பட்​டியலை மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களுக்கு அனுப்​பி, விளக்​கம் கோர அறி​வுறுத்​தி​யது. அந்த வகை​யில், தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​குக்​கு, 24 கட்​சிகள் பட்​டியல் அனுப்​பப்​பட்​டது. அதில், 22 கட்​சிகள் நீக்​கப்​பட்​டன. இது​போல நாடு முழு​வதும் 334 கட்​சிகள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

Read More

பல்லாவரம்: இந்​திய நாடே தமிழகத்​தின் வளர்ச்​சியை திரும்​பிப் பார்த்து வியப்​படை​யும் என்று முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார். சென்​னையை அடுத்த பல்​லா​வரத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்​டாக்​களை முதல்​வர் வழங்​கி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சிக்கு அடித்​தள​மாக இருக்​கப்​போகின்ற மாநில கல்விக் கொள்​கையை வெளி​யிட்​டுள்​ளேன். கல்​வி​யும் மருத்​து​வ​மும்​தான் திரா​விட மாடல் அரசின் இரு கண்​கள். ஒரு மனிதனுக்கு அடிப்​படைத் தேவை என்​பது, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதில், உணவும் உடை​யும் எளி​தாக கிடைத்​து​விடலாம்; ஆனால், இருக்​கும் நிலம் எளி​தாக கிடைத்​து​வி​டாது. நிலம்​தான் அதி​காரம். காலுக்கு கீழ் சிறிது நில​மும் – தலைக்கு மேல் ஒரு கூரை​யும் இன்​னும் பலருக்கு கனவு​தான். அதனால்​தான், பட்டா வழங்​கு​வ​தில் எப்​போதும் தனி கவனம் செலுத்​து​வேன். சொந்த வீடு இல்​லாத நிலமற்ற ஏழைக் குடும்​பங்​களை​யும்,பெண்​களை​யும் முன்​னிலைப்​படுத்தி…

Read More

ஒரு குழந்தையை தியானிக்கக் கற்பிப்பது ஒரு குழப்பமான கடலில் அவர்களுக்கு ஒரு மூச்சு நங்கூரத்தைக் கொடுப்பது போன்றது. அவர்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கை மிகவும் சத்தமாக அல்லது மிக வேகமாக உணரும்போதெல்லாம் அது இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். மகிழ்ச்சிக்காக வெளியில் பார்க்க அவர்களை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தில், தியானம் அவர்களை ஆழமான ஒன்றை நோக்கி உள்நோக்கி மாற்றுகிறது. ஒரு குழந்தை அந்த அமைதியான மையத்தை உள்ளே அறிந்தவுடன், அவர்கள் அதை எல்லா இடங்களிலும் கொண்டு செல்கிறார்கள்: உரையாடல்கள், வகுப்பறைகள், குடும்ப தருணங்கள் மற்றும் எதிர்கால புயல்கள். இது அவர்களின் நங்கூரம் ஒரு தந்திரம் அல்ல, ஒரு பணி அல்ல, ஆனால் அவர்களின் மனதையும் இதயத்தையும் கவனிக்கும் ஒரு மென்மையான பழக்கமாக மாறும்.

Read More

சென்னை: பு​திய நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்​சு​வார்த்தை நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. பிரதமர் மோடி அண்​மை​யில் தமிழகம் வந்​திருந்​த​போது அவரை சந்​திப்​ப​தற்​காக ஓ.பன்​னீர்செல்​வம் நேரம் கேட்​டிருந்​தார். ஆனால், அந்த சந்​திப்​புக்கு அனு​மதி கிடைக்​காத​தால் ஓபிஎஸ் தரப்​பினர் அதிருப்தி அடைந்​தனர். அதி​முக – பாஜக கூட்​டணி ஏற்​பட்ட பின்​பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்​கட்​டப்​பட்டு வரு​வ​தாக​வும், அவரது ஆதர​வாளர்​கள் தெரி​வித்து வந்​தனர். இந்​நிலை​யில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓ.பன்​னீர்​செல்​வம் அறி​வித்​தார். அன்​றையை தினமே முதல்​வர் ஸ்டா​லினை 2 முறை சந்​தித்​தார். இதையடுத்து ஓபிஎஸ்-ஐ தொடர்பு கொண்ட பாஜக​வினர், அவரசப்​பட​வேண்​டாம் என அவரை சமா​தானம் செய்து மீண்​டும் கூட்​ட​ணி​யில் சேர்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர். இந்​தச் சூழ்​நிலை​யில், புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பாஜக மாநில நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் இன்று (10-ம் தேதி)நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்கவருகை…

Read More

வேலையில் நீண்ட நாள் கழித்து மன அழுத்தத்தையும் சோர்வையும் உணருவது முற்றிலும் இயல்பானது. ஆயினும்கூட, ஒருவர் ஓய்வெடுக்க முடியாமல் போகும்போது, அந்த “சோர்வான ஆனால் கம்பி” உணர்வு உங்கள் உடலில் கார்டிசோல் அளவின் அடையாளமாக இருக்கலாம். கார்டிசோல் என்பது உடலின் முக்கிய அழுத்த ஹார்மோன் ஆகும், நாள் முழுவதும் நமது ஆற்றல் அளவுகள், மனநிலை மற்றும் விழிப்புணர்வை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் இங்கே நல்ல பகுதி. சில உணவுகள், குறிப்பாக நீங்கள் இரவில் அவற்றை சாப்பிடும்போது, உண்மையில் ஓய்வெடுக்க உதவும். அவர்கள் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறார்கள், உங்கள் உடலை மெதுவாக்க உதவுகிறார்கள், மேலும் அந்த மன அழுத்த அளவைக் கட்டியெழுப்பவும் உதவுகிறார்கள், எனவே தூங்கிக்கொண்டிருப்பது ஒரு சண்டையாக உணரவில்லை.

Read More

சென்னை: வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 26 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்…

Read More

சென்னை: சென்னை​யில் நடை​பெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா​வில், 9-வது நாளான நேற்று நடை​பெற்ற இசை நிகழ்ச்​சி​யில் பார​தி​யார் பாடலை பார்​வை​யாளர்​கள் மெய் மறந்து ரசித்​தனர். இந்​தி​யா​வோடும், தமிழகத்​தோடும் நெருங்​கிய கலாச்​சார தொடர்​பு​கொண்ட தென்​கிழக்கு ஆசிய நாடான சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை சென்​னை​யில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்​மாண்​ட​மாக நடத்தி வரு​கின்​றன. கலை, கலாச்​சா​ரம், நாடகம், பொருளா​தா​ரம், உணவு என பல்​சுவை நிகழ்ச்​சிகளை உள்​ளடக்​கிய இந்த திரு​விழா ஆகஸ்ட் 1-ம் தேதி அடை​யாறு பத்​ம​நாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் இந்​திய – சிங்​கப்​பூர் ஓவிய – சிற்​பக் கண்​காட்​சி​யுடன் தொடங்​கியது. இந்​நிகழ்ச்​சியை சிங்​கப்​பூர் துணை தூதர் எட்​கர் பாங்க் தொடங்​கி​வைத்​தார். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடை​பெறும்…

Read More

சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி இந்நாடகத்தை இயக்கினார். மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்திருந்தார். நடனத்தை மோகன பிரியன் தவராஜாவும், ஆடை, ஆபரணங்களை தமிழக கலைஞர்கள் அபிஷேக் ரகுராம், கவிதா நரசிம்மன் ஆகியோரும் வடிவமைத்திருந்தனர். கலாஷேத்​ரா​வில் நடைபெற்ற `ராமாயணம்’ நாட்டிய நாடகத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. படங்கள்: ம.பிரபு இந்தியா-இந்தோனேசியா நாடுகளின் ராமாயணத்தை தழுவி வடிவமைக்கப்பட்ட இந்தநாடகத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா ஆகிய…

Read More