சென்னை/விழுப்புரம்: ராமதாஸுடன் சமாதான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அவருடன் இருக்கும் தீயசக்திகள், குள்ளநரி கூட்டம் தடுக்கிறது என பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார். பாமக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள்அடுத்த ஓராண்டுக்கு அந்த பொறுப்புகளில் அப்படியே தொடர்வார்கள். மீண்டும் பாமகவின் உட்கட்சி தேர்தல் 2026 ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அரங்கில் கூடியிருந்த 2,500 பொதுக்குழு உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர். அதேபோல், வன்னியர்களுக்கு விரைவில் இடஒதுக்கீடு வழங்காவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வரும் ஆக. 15-ம் தேதி தமிழக அரசு வெளியிட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய ஆட்சியில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்க…
Author: admin
சென்னை: நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால்தான் மாசு ஏற்படுமா, கழிவு நீர், ரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியவில்லையா, என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வந்தால்தான் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருப்பது வெளியில் தெரிகிறது. பொங்கலின்போது புகையில்லாத பண்டிகை என விளம்பரம் செய்வது போல, பக்ரீத்தின்போது ரத்தமில்லாத பண்டிகை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பேசுவதில்லை. வீடுகளில், பொது இடங்களில் ஆடு மாடுகளை பலியிடுவது நுண்ணுயிர் தொற்று உருவாக வாய்ப்பு உண்டு என்பதை என்றாவது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முணுமுணுத்தது உண்டா, கிறிஸ்துமஸின்போது மெழுகுவர்த்தி ஏற்றுவதால் அதன் புகை புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையது, எனவே அதனை தவிருங்கள் என விளம்பரப்படுத்தியது உண்டா? இன்று சிறு கிராமங்களில்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தும் நிலை…
சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 22 கட்சிகள், தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை முதல் கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இந்த கட்சிகளின் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி, விளக்கம் கோர அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு, 24 கட்சிகள் பட்டியல் அனுப்பப்பட்டது. அதில், 22 கட்சிகள் நீக்கப்பட்டன. இதுபோல நாடு முழுவதும் 334 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
பல்லாவரம்: இந்திய நாடே தமிழகத்தின் வளர்ச்சியை திரும்பிப் பார்த்து வியப்படையும் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னையை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 20 ஆயிரத்து 21 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை முதல்வர் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகின்ற மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளேன். கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை என்பது, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதில், உணவும் உடையும் எளிதாக கிடைத்துவிடலாம்; ஆனால், இருக்கும் நிலம் எளிதாக கிடைத்துவிடாது. நிலம்தான் அதிகாரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும் – தலைக்கு மேல் ஒரு கூரையும் இன்னும் பலருக்கு கனவுதான். அதனால்தான், பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன். சொந்த வீடு இல்லாத நிலமற்ற ஏழைக் குடும்பங்களையும்,பெண்களையும் முன்னிலைப்படுத்தி…
ஒரு குழந்தையை தியானிக்கக் கற்பிப்பது ஒரு குழப்பமான கடலில் அவர்களுக்கு ஒரு மூச்சு நங்கூரத்தைக் கொடுப்பது போன்றது. அவர்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கை மிகவும் சத்தமாக அல்லது மிக வேகமாக உணரும்போதெல்லாம் அது இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். மகிழ்ச்சிக்காக வெளியில் பார்க்க அவர்களை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சாரத்தில், தியானம் அவர்களை ஆழமான ஒன்றை நோக்கி உள்நோக்கி மாற்றுகிறது. ஒரு குழந்தை அந்த அமைதியான மையத்தை உள்ளே அறிந்தவுடன், அவர்கள் அதை எல்லா இடங்களிலும் கொண்டு செல்கிறார்கள்: உரையாடல்கள், வகுப்பறைகள், குடும்ப தருணங்கள் மற்றும் எதிர்கால புயல்கள். இது அவர்களின் நங்கூரம் ஒரு தந்திரம் அல்ல, ஒரு பணி அல்ல, ஆனால் அவர்களின் மனதையும் இதயத்தையும் கவனிக்கும் ஒரு மென்மையான பழக்கமாக மாறும்.
சென்னை: புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது அவரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், அந்த சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் ஓபிஎஸ் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்பு, ஓபிஎஸ் தொடர்ந்து ஓரம்கட்டப்பட்டு வருவதாகவும், அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில்,கடந்த ஜூலை 31-ம் தேதி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அன்றையை தினமே முதல்வர் ஸ்டாலினை 2 முறை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ்-ஐ தொடர்பு கொண்ட பாஜகவினர், அவரசப்படவேண்டாம் என அவரை சமாதானம் செய்து மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தச் சூழ்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (10-ம் தேதி)நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவருகை…
வேலையில் நீண்ட நாள் கழித்து மன அழுத்தத்தையும் சோர்வையும் உணருவது முற்றிலும் இயல்பானது. ஆயினும்கூட, ஒருவர் ஓய்வெடுக்க முடியாமல் போகும்போது, அந்த “சோர்வான ஆனால் கம்பி” உணர்வு உங்கள் உடலில் கார்டிசோல் அளவின் அடையாளமாக இருக்கலாம். கார்டிசோல் என்பது உடலின் முக்கிய அழுத்த ஹார்மோன் ஆகும், நாள் முழுவதும் நமது ஆற்றல் அளவுகள், மனநிலை மற்றும் விழிப்புணர்வை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் இங்கே நல்ல பகுதி. சில உணவுகள், குறிப்பாக நீங்கள் இரவில் அவற்றை சாப்பிடும்போது, உண்மையில் ஓய்வெடுக்க உதவும். அவர்கள் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறார்கள், உங்கள் உடலை மெதுவாக்க உதவுகிறார்கள், மேலும் அந்த மன அழுத்த அளவைக் கட்டியெழுப்பவும் உதவுகிறார்கள், எனவே தூங்கிக்கொண்டிருப்பது ஒரு சண்டையாக உணரவில்லை.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 26 டிகிரி முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவில், 9-வது நாளான நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாரதியார் பாடலை பார்வையாளர்கள் மெய் மறந்து ரசித்தனர். இந்தியாவோடும், தமிழகத்தோடும் நெருங்கிய கலாச்சார தொடர்புகொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திருவிழாவை சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றன. கலை, கலாச்சாரம், நாடகம், பொருளாதாரம், உணவு என பல்சுவை நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த திருவிழா ஆகஸ்ட் 1-ம் தேதி அடையாறு பத்மநாப நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில் இந்திய – சிங்கப்பூர் ஓவிய – சிற்பக் கண்காட்சியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கிவைத்தார். ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்…
சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி இந்நாடகத்தை இயக்கினார். மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்திருந்தார். நடனத்தை மோகன பிரியன் தவராஜாவும், ஆடை, ஆபரணங்களை தமிழக கலைஞர்கள் அபிஷேக் ரகுராம், கவிதா நரசிம்மன் ஆகியோரும் வடிவமைத்திருந்தனர். கலாஷேத்ராவில் நடைபெற்ற `ராமாயணம்’ நாட்டிய நாடகத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி. படங்கள்: ம.பிரபு இந்தியா-இந்தோனேசியா நாடுகளின் ராமாயணத்தை தழுவி வடிவமைக்கப்பட்ட இந்தநாடகத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா ஆகிய…