Author: admin

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை கலைப்​ப​தற்​கான பரிந்​துரை கடிதத்தை வழங்​கி​னார். இதன்​படி, வரும் 19-ம் தேதி சட்​டப்​பேரவை முறைப்​படி கலைக்​கப்​படும்.

Read More

சென்னை: ‘ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்’ என்று கைத்​தறி துறை செயலர் வி.அ​முதவல்லி தெரி​வித்​தார். சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில் உள்ள திரு​வள்​ளுவர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக அரசின் கைத்​தறி, துணி நூல், கைவினைப் ​பொருள், ஜவுளி மற்​றும் காதி துறை​யின் செயலர் அமுதவல்லி கலந்​து​கொண்டு சிறப்​பிடம் பெற்ற மாணவ-​மாணவி​களுக்கு பதக்​கங்​கள், விருதுகள் மற்​றும் பட்​டங்​களை வழங்​கி​னார். பேஷன் டெக்​னாலஜி இளநிலை படிப்​பில் 250 பேர், முது​நிலை படிப்​பில் 34 பேர் என மொத்​தம் 284 பேர் பட்​டம் பெற்​றனர்.

Read More

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விலகியுள்ளார்.

Read More

இஸ்தான்புல்: காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.

Read More

சென்னை: சபரிமலை​யில் மண்டல மற்​றும் மகர​விளக்கு பூஜைக்கு சென்று திரும்​பும் பக்​தர்​கள் வசதிக்​காக, தமிழகத்​தில் சென்னை கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் உள்பட பல்​வேறு இடங்​களில் இருந்து பம்​பைக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட​வுள்​ளன. இதுகுறித்​து, அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் இரா.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கேரள மாநிலத்​தில் மிக​வும் பிரசித்​திபெற்ற சபரிமலை​யில் உள்ள ஐயப்​பன் ஆலயத்​துக்கு ஒவ்​வொரு ஆண்​டும் நடை​பெறும் மண்டல பூஜை மற்​றும் மகர விளக்கு ஆகிய திரு​விழாக்​களின்​போது, தமிழகத்​திலிருந்து பக்​தர்​கள் சென்று வர ஏது​வாக சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

Read More

இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.

Read More

சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவ.15-ம் தேதி முதல் நவ.21-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

Read More

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதன் பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வந்தது.சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ரூ.93 ஆயிரத்தை தாண்​டியது. பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்​து, ரூ.93,600-க்கு விற்​கப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.220 உயர்ந்​து, ரூ.11,700-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1,02,104 ஆக இருந்​தது. இது​போல,வெள்ளி கிரா​முக்கு ரூ.1 உயர்ந்​து, ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்​து, ரூ,1.70 லட்சமாகவும் இருந்தது.

Read More

மாநிலத்தில் சுமார் 500 குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை அடுத்து, மேகாலயா பொது சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எழுச்சி மேகாலயாவை இந்தியாவில் அதிகம் பரவும் மாநிலங்களில் ஒன்றாக இணைத்துள்ளது மற்றும் அவசர, சமூக அளவிலான நடவடிக்கைக்கான அழைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.நெருக்கடியின் அளவுமேகாலயா எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மற்றும் ஏஎன்ஐயின் கூற்றுப்படி, மாநிலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 10,000 ஐத் தாண்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் திட்ட இயக்குநர் டாக்டர் கேஎல் இவ்போர் நிலைமையை “ஆபத்தானது” என்று விவரித்தார், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள். கிழக்கு ஜெயின்டியா மலைகள் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் கிழக்கு காசி மலைகள் போன்ற பிற பகுதிகளிலும் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2015 முதல், புதிய நோய்த்தொற்றுகள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன, இது மாநிலத்திற்குள் 33,000 செயலில்…

Read More

ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது சீக்கிய மாணவர், விக்டோரியாவுக்கான ஆம்புலன்ஸ் சேவைக்கான மாநில ஏஜென்சியான ஆம்புலன்ஸ் விக்டோரியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவ மாணவர் பிரப்ஜீத் கில் கூறுகையில், சீக்கிய மக்கள் எலாஸ்டிக் பேண்ட் உதவியுடன் மருத்துவ முகமூடியை அணியும் ‘சிங் தத்தா’ முறையைப் பயன்படுத்துமாறு ஏஜென்சிக்கு முன்கூட்டியே கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். விக்டோரியா ஆம்புலன்ஸ் சிங் தத்தா முறையை அங்கீகரித்ததாக நம்பியதால் தான் மிகவும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்ததாக சிங் கூறினார்.”தலைப்பாகையைப் போலவே, தாடியும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்” என்று கில் ஏபிசியிடம் கூறினார். “நம் உடலில் இருந்து எந்த முடியையும் அகற்றக்கூடாது என்பது ஒரு நம்பிக்கை, கடவுள் நம்மைப் படைத்த விதத்தில் அதை விட்டுவிட வேண்டும்.”இந்தியா இப்போது ஒரு முன்னணி உலகளாவிய சக்தியாக உள்ளது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது, உலக இயக்கவியலை மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்அவரது…

Read More