பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், இப்போதைய அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக நிதிஷ் குமாருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் இப்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இதன்படி, வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை முறைப்படி கலைக்கப்படும்.
Author: admin
சென்னை: ‘ஆடை வடிவமைப்பில் ஜொலிக்க படைப்பாற்றலும் புதுமையும் வேண்டும்’ என்று கைத்தறி துறை செயலர் வி.அமுதவல்லி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 14-வது பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் கைத்தறி, துணி நூல், கைவினைப் பொருள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலர் அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பேஷன் டெக்னாலஜி இளநிலை படிப்பில் 250 பேர், முதுநிலை படிப்பில் 34 பேர் என மொத்தம் 284 பேர் பட்டம் பெற்றனர்.
இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விலகியுள்ளார்.
இஸ்தான்புல்: காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து, காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது வாரன்ட்களை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.
சென்னை: சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, தமிழகத்தில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.
சென்னை: பச்சிளம் குழந்தைகளுக்கு குரல் நன்றாக வரும் என்று கழுதைப் பால் கொடுக்கக் கூடாது என்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார். அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக குழந்தைகள் மருத்துவ நிலையத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார விழா நவ.15-ம் தேதி முதல் நவ.21-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்.17-ம் தேதி ரூ.97,600-ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன் பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.93 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து, ரூ.93,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.220 உயர்ந்து, ரூ.11,700-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.1,02,104 ஆக இருந்தது. இதுபோல,வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.170 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ,1.70 லட்சமாகவும் இருந்தது.
மாநிலத்தில் சுமார் 500 குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை அடுத்து, மேகாலயா பொது சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எழுச்சி மேகாலயாவை இந்தியாவில் அதிகம் பரவும் மாநிலங்களில் ஒன்றாக இணைத்துள்ளது மற்றும் அவசர, சமூக அளவிலான நடவடிக்கைக்கான அழைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.நெருக்கடியின் அளவுமேகாலயா எய்ட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மற்றும் ஏஎன்ஐயின் கூற்றுப்படி, மாநிலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 10,000 ஐத் தாண்டியுள்ளது, அதே நேரத்தில் அதன் திட்ட இயக்குநர் டாக்டர் கேஎல் இவ்போர் நிலைமையை “ஆபத்தானது” என்று விவரித்தார், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள். கிழக்கு ஜெயின்டியா மலைகள் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் கிழக்கு காசி மலைகள் போன்ற பிற பகுதிகளிலும் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2015 முதல், புதிய நோய்த்தொற்றுகள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன, இது மாநிலத்திற்குள் 33,000 செயலில்…
ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது சீக்கிய மாணவர், விக்டோரியாவுக்கான ஆம்புலன்ஸ் சேவைக்கான மாநில ஏஜென்சியான ஆம்புலன்ஸ் விக்டோரியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். மருத்துவ மாணவர் பிரப்ஜீத் கில் கூறுகையில், சீக்கிய மக்கள் எலாஸ்டிக் பேண்ட் உதவியுடன் மருத்துவ முகமூடியை அணியும் ‘சிங் தத்தா’ முறையைப் பயன்படுத்துமாறு ஏஜென்சிக்கு முன்கூட்டியே கோரிக்கை விடுத்ததாகக் கூறினார். விக்டோரியா ஆம்புலன்ஸ் சிங் தத்தா முறையை அங்கீகரித்ததாக நம்பியதால் தான் மிகவும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்ததாக சிங் கூறினார்.”தலைப்பாகையைப் போலவே, தாடியும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்” என்று கில் ஏபிசியிடம் கூறினார். “நம் உடலில் இருந்து எந்த முடியையும் அகற்றக்கூடாது என்பது ஒரு நம்பிக்கை, கடவுள் நம்மைப் படைத்த விதத்தில் அதை விட்டுவிட வேண்டும்.”இந்தியா இப்போது ஒரு முன்னணி உலகளாவிய சக்தியாக உள்ளது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது, உலக இயக்கவியலை மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்அவரது…
