விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்து வருகிறார். அட்லி தயாரித்து வரும் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரிந்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை பேட்டியொன்றில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
Author: admin
இந்நிலையில், இந்த குழுமத்துக்கு ரூ.97 கோடியில் அண்ணா நகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இக்கட்டிடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 19,008 சதுர அடி கொண்ட இடத்தில் ரூ.77.60 கோடி செலவில், 56 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டது. மேலும், ரூ.19.49 கோடி செலவில் இக்கட்டிடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.நவ.1 தொடங்கி தங்கம் விலை நிலவரம்:
சருமத்தில் தோன்றும் சிறுநீரக நோய் அறிகுறிகளின் பட்டியலில் வறண்ட சருமம் முதலிடத்தில் உள்ளது. சிகேடி நோயாளிகளில், 72% பேர் ஜெரோசிஸை எதிர்கொள்கிறார்கள், இதனால் சருமம் கடினமானதாகவும், செதில்களாகவும், இறுக்கமாகவும் இருக்கும். சிறுநீரகங்கள் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகளைக் கட்டுப்படுத்துவதால்; மோசமான செயல்பாடு அவற்றை உலர்த்துகிறது. இது நோயின் நிலையுடன் மோசமடைகிறது, ஆரம்ப நிலைகளை விட டயாலிஸ் செய்யப்பட்ட குழந்தைகளை கடுமையாக தாக்குகிறது.வறட்சியினால் ஏற்படும் நமைச்சல் வெடிப்புகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது. 100 சி.கே.டி நோயாளிகளின் ஒரு ஆய்வில், வெளிறிய அல்லது அரிப்புக்கு முன்னால், ஜெரோசிஸ் மிகவும் பொதுவானதாகக் கண்டறியப்பட்டது. இதைச் சமாளிக்க, அதை எளிதாக்குவதற்கு தினமும் ஈரப்பதமாக்குங்கள், ஆனால் சிறுநீரக பரிசோதனைகளுக்கு மருத்துவரைப் பார்க்கவும். மீன் மற்றும் விரிசல் போன்ற உலர் தோல் செதில்கள் பொதுவாக மேம்பட்ட CKD இல் காணப்படுகின்றன என்று மற்றொரு மதிப்பாய்வு குறிப்பிடுகிறது. ஆரம்பகால சோதனைகள் தோல் மோசமடைவதற்கு முன்பு அதைப் பிடிக்கின்றன – இதை எதிர்கொள்ள,…
படம்: Nationalcrimeagency.uk 4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்றதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் அவரது கூட்டாளியும் இங்கிலாந்தில் தேசிய குற்றவியல் முகமை (NCA) விசாரணையைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.ஸ்காட்லாந்தில் உள்ள கிழக்கு லோத்தியனைச் சேர்ந்த 57 வயதான ராஜேஷ் பக்ஷி, சதி செய்ததை ஒப்புக்கொண்ட பிறகு வியாழனன்று 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார், அதே நேரத்தில் இணை சதிகாரரான ஜான்-பால் கிளார்க், 44, பக்ஷியின் ஸ்வெட்டரை அணிந்ததால் மட்டுமே போதைப்பொருளில் அவரது டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி ஒன்பது ஆண்டுகள் பெற்றார்.40 கிலோ ஹெராயின் அடங்கிய சரக்கு, ஜூன் 2022 இல் டோவர் துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.”எனது அதிகாரிகள் கிளார்க்கிற்கு எதிராக ஒரு உறுதியான வழக்கை உருவாக்கினர், அவர் தெளிவாக ஜூரியின் கண்களுக்கு மேல் கம்பளியை இழுக்க முயன்றார்” என்று NCA இன் மூத்த புலனாய்வு அதிகாரி ஜூல்ஸ் ஹாரிமேன் கூறினார், PTI மேற்கோள் காட்டியது.…
புதுடெல்லி: இண்டியா கூட்டணியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்டும் என்று அக்கட்சி எம்எல்ஏ ரவிதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியின் மத்திய லக்னோ தொகுதி எம்எல்ஏ ரவிதாஸ் மல்ஹோத்ரா கூறும்போது, ‘‘பிஹாரில் வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடந்திருந்தால் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலத்தில் (உ.பி.யில்) தனித்து ஆட்சி அமைக்கும் திறனுள்ள கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. இண்டியா கூட்டணியை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிநடத்த வேண்டும்” என்றார்.நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. தேர்தலுக்கு முன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்காளர் அதிகார யாத்திரை உரிய பலனை அளிக்கவில்லை.
சென்னை: உயர் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எந்தெந்த பட்டம், என்னென்ன படிப்புக்கு இணையானது என்பது தொடர்பாக உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: பி.காம் பட்டம் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.காம் இ-காமர்ஸ், பி.காம் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பி.காம் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நோக்கில் பி.காம் படிப்புக்கு சமமானது.
அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் வசம் சிஎஸ்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 11 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன், 4027 ரன்கள் எடுத்துள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். அவர் சிஎஸ்கே அணிக்குள் வந்துள்ளது தோனிக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அணியில் இருந்து ஜடேஜா வெளியேறி உள்ளது சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சு பிரிவுக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. தரமான…
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி. 22 வயதான இவர் ரஷ்யாவின் உபா நகரத்தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இவர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். அதன் பின் விடுதிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் நேற்று மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான நேற்றுநடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பாடாகி சண்முக விலாசத்திலும், பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலும் எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு அபிஷேகம், அலங் காரம் நடைபெற்றது.
