Author: admin

இந்த நிகழ்வில் ராஜமவுலி பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அவர் பேசியதாவது: “இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா – இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, ​​எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.‘வாரணாசி’ நிகழ்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் குறிப்பிட்டு ராஜமவுலியின் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “ராஜமவுலியின் பேச்சு நியாயமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்,…

Read More

சென்னை: ‘பெரு​மழை அச்​சத்​தில் இருந்து சென்னை மக்​களைப் பாது​காக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தமிழக அரசு விரைந்து மேற்​கொள்ள வேண்​டும்’ என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலி​யுறுத்தி உள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சில ஆண்​டு​களாகவே நவம்​பர், டிசம்​பர் மாதம் வந்​தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்​வொரு நாளை​யும் அச்​சத்​துடன் கடக்க வேண்​டிய அவலநிலை ஏற்​பட்​டுள்​ளது. கோடை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை​யும், மழைக்​காலத்​தில் வெள்​ள​மும் சென்​னை​யில் வழக்​க​மாகி​விட்​டது.

Read More

அதே​நேரத்​தில் இந்த ஆண்டு இது​வரை சுமார் 7 லட்​சம் டன் உப்பு மட்​டுமே விற்​பனை​யாகி​யுள்​ளது. 12 லட்​சம் டன் உப்​பு, உப்​பளங்​களில் இருப்​பில் உள்​ளது. குஜ​ராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்​த​தால், தூத்​துக்​குடி உப்பு அதி​கள​வில் தேங்​கி​யுள்​ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமத​மாக மார்ச் மாதம் தொடங்​கி​னால், கையிருப்​பில் இருக்​கும் உப்பு காலி​யாக வாய்ப்பு உள்​ளது.விலையை பொறுத்​தவரை கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் மிக​வும் குறைந்​துள்​ளது. கடந்த ஆண்டு இதே கால​கட்​டத்​தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்​பனை​யான நிலை​யில், தற்​போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயரு​வதற்கு வாய்ப்பு உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Read More

‘தி ஃபேமிலி மேன்’ திரைப்படத்தின் நட்சத்திரமான மனோஜ் பாஜ்பாய், 15 வருடங்களுக்கும் மேலாக தனது சொந்த திருமணம் பெரும்பாலும் மோதல்களற்றதாக இருந்ததை வெளிப்படுத்துகிறார், இது அவரது திரையில் கதாபாத்திரத்தின் போராட்டங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. நீடித்த அன்புக்கு ஈகோ மற்றும் ஆணவத்தை அகற்றுவது அவசியம் என்று அவர் பகிர்ந்து கொண்டார், நீடித்த உறவுகளுக்கு பணிவு மற்றும் பொறுமையை வலியுறுத்தினார். இந்தியாவின் மிகவும் பல்துறை நடிகர்களில் ஒருவரான மனோஜ் பாஜ்பாய், அதிரடி, நாடகம் மற்றும் கூர்மையான சமூக வர்ணனை ஆகியவற்றிற்காக தடையின்றிக் கொண்டாடப்படுகிறார். அவர் சமீபத்தில் தனது பிரபலமான OTT தொடரான ​​தி ஃபேமிலி மேன் மூலம் மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்கினார், இது உளவு மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே உள்ள சிக்கலான சமநிலையை ஆராய்கிறது. சமீபத்திய சீசனில், பாஜ்பாயின் திரையில் மீண்டும் ஒருமுறை எஃப்”காதல் எளிதானது அல்ல” – புதுமணத் தம்பதிகளுக்கு மனோஜ் பாஜ்பாயின் செய்தி #love #bollywood #shortsஏசஸ் உறவு…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலியின் 24 வயது மகன் நளின் ஹேலி, ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மற்றும் தென் கரோலினா கவர்னர், முன்னாள் டாக் முன்னணி மற்றும் சக இந்திய வம்சாவளி பழமைவாதி விவேக் ராமசாமி மீது கடுமையான ஆன்லைன் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் மீண்டும் கவனத்தை ஈர்த்தார். ராமசாமி தனது 2026 ஓஹியோ கவர்னர் முயற்சிக்கான தனது கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளை வெளியிட்ட பிறகு மோதல் வெடித்தது.குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க, பள்ளி நேரத்தை நீட்டிக்கவும், ஆண்டு முழுவதும் பள்ளிகளைத் திறந்திருக்கவும் வேண்டும் என்ற ராமசாமியின் ஆடுகளத்தை ஹேலி விமர்சித்தார், X இல் இடுகையிட்டார்: “இந்த க்ரீப் எந்த குழந்தைக்கும் அருகில் இருக்கக்கூடாது, மேலும் அவரது மூன்றாம் உலகப் பெற்றோருக்குரிய பாணியை அமெரிக்கக் குழந்தைகள் மீது திணிக்க முடியாது.”ஜனநாயகக் கட்சியின் ஆமி ஆக்டனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ராமசாமி, பரந்த…

Read More

காங்கிரஸ் அதன் உச்சத்தை மரபுரிமையாகப் பெற்றது. பாஜக, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், போராட்டத்தின் மூலமூம், வளர்ச்சிப் பணிகளின் மூலமும் பாஜக தனது எம்எல்ஏக்களைப் பெற்று வருகிறது. எதிர்காலம் என்பது உழைக்கும் ஒரு கட்சிக்கே உரியதாகும். மரபில் வாழும் ஒரு கட்சிக்கே அல்ல.2014-ம் ஆண்டு முதல் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்வு பெற்று வருகிறது. 2014-ல் நாடு முழுவதும் 1,035 எம்எல்ஏக்கள் இருந்தனர். இது 2015-ல் 997-ஆகவும், 2016-ல் 1,053-ஆகவும், 2017-ல் 1,365-ஆகவும், 2018-ல் 1,184-ஆகவும், 2019-ல் 1,160 ஆகவும், 2020-ல் 1,207-ஆகவும், 2021-ல் 1,278-ஆகவும், 2022-ல் 1,289-ஆகவும், 2023-ல் 1,441-ஆகவும், 2024-ல் 1,588-ஆகவும் இறுதியாக 2025-ல் 1,654-ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

Read More

இருப்பினும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இன்று காலை தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு உள்ளே செல்லாமல், பள்ளி நுழைவுவாயில் முன் குழந்தைகளுடன் அமர்ந்து, கல்வித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்த கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி உறுதியளித்தார். இதனையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

Read More

டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஐரோப்​பிய தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் இரவு அயர்​லாந்​தின் டப்​ளின் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘எஃப்’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள போர்ச்சுகல் – அயர்​லாந்து அணி​கள் மோதின.

Read More

காசா: இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​துள்ளது. அந்த உடல்​கள் இஸ்​ரேலுக்கு அனுப்​பி வைக்​கப்பட உள்ளன.

Read More

அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர். பின்னர், கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சந்தோஷ மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பூஞ்சப்பரத்தில் சுவாமி கிரிபிரகாரம் உலா வந்து கோயில் சேர்ந்தார். இரவில், 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கடம்பூர் ராஜு எம்எல்ஏ, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார், புகழேந்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More