இந்த நிகழ்வில் ராஜமவுலி பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன. அவர் பேசியதாவது: “இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான தருணம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா – இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது” இவ்வாறு ராஜமவுலி பேசினார்.‘வாரணாசி’ நிகழ்வின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் குறிப்பிட்டு ராஜமவுலியின் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர், “ராஜமவுலியின் பேச்சு நியாயமில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்,…
Author: admin
சென்னை: ‘பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மாநகர வாசிகள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.
அதேநேரத்தில் இந்த ஆண்டு இதுவரை சுமார் 7 லட்சம் டன் உப்பு மட்டுமே விற்பனையாகியுள்ளது. 12 லட்சம் டன் உப்பு, உப்பளங்களில் இருப்பில் உள்ளது. குஜராத் உப்பு குறைந்த விலைக்கு கிடைத்ததால், தூத்துக்குடி உப்பு அதிகளவில் தேங்கியுள்ளது. அடுத்த ஆண்டு சீசன் தாமதமாக மார்ச் மாதம் தொடங்கினால், கையிருப்பில் இருக்கும் உப்பு காலியாக வாய்ப்பு உள்ளது.விலையை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு டன் உப்பு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை விற்பனையான நிலையில், தற்போது தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.2,500 வரையே விலை போகிறது. இந்த விலை அடுத்த மாதம் சற்று உயருவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
‘தி ஃபேமிலி மேன்’ திரைப்படத்தின் நட்சத்திரமான மனோஜ் பாஜ்பாய், 15 வருடங்களுக்கும் மேலாக தனது சொந்த திருமணம் பெரும்பாலும் மோதல்களற்றதாக இருந்ததை வெளிப்படுத்துகிறார், இது அவரது திரையில் கதாபாத்திரத்தின் போராட்டங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது. நீடித்த அன்புக்கு ஈகோ மற்றும் ஆணவத்தை அகற்றுவது அவசியம் என்று அவர் பகிர்ந்து கொண்டார், நீடித்த உறவுகளுக்கு பணிவு மற்றும் பொறுமையை வலியுறுத்தினார். இந்தியாவின் மிகவும் பல்துறை நடிகர்களில் ஒருவரான மனோஜ் பாஜ்பாய், அதிரடி, நாடகம் மற்றும் கூர்மையான சமூக வர்ணனை ஆகியவற்றிற்காக தடையின்றிக் கொண்டாடப்படுகிறார். அவர் சமீபத்தில் தனது பிரபலமான OTT தொடரான தி ஃபேமிலி மேன் மூலம் மீண்டும் தலைப்புச் செய்திகளை உருவாக்கினார், இது உளவு மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே உள்ள சிக்கலான சமநிலையை ஆராய்கிறது. சமீபத்திய சீசனில், பாஜ்பாயின் திரையில் மீண்டும் ஒருமுறை எஃப்”காதல் எளிதானது அல்ல” – புதுமணத் தம்பதிகளுக்கு மனோஜ் பாஜ்பாயின் செய்தி #love #bollywood #shortsஏசஸ் உறவு…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலியின் 24 வயது மகன் நளின் ஹேலி, ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மற்றும் தென் கரோலினா கவர்னர், முன்னாள் டாக் முன்னணி மற்றும் சக இந்திய வம்சாவளி பழமைவாதி விவேக் ராமசாமி மீது கடுமையான ஆன்லைன் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் மீண்டும் கவனத்தை ஈர்த்தார். ராமசாமி தனது 2026 ஓஹியோ கவர்னர் முயற்சிக்கான தனது கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு நிகழ்ச்சி நிரலின் சில பகுதிகளை வெளியிட்ட பிறகு மோதல் வெடித்தது.குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க, பள்ளி நேரத்தை நீட்டிக்கவும், ஆண்டு முழுவதும் பள்ளிகளைத் திறந்திருக்கவும் வேண்டும் என்ற ராமசாமியின் ஆடுகளத்தை ஹேலி விமர்சித்தார், X இல் இடுகையிட்டார்: “இந்த க்ரீப் எந்த குழந்தைக்கும் அருகில் இருக்கக்கூடாது, மேலும் அவரது மூன்றாம் உலகப் பெற்றோருக்குரிய பாணியை அமெரிக்கக் குழந்தைகள் மீது திணிக்க முடியாது.”ஜனநாயகக் கட்சியின் ஆமி ஆக்டனை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் ராமசாமி, பரந்த…
காங்கிரஸ் அதன் உச்சத்தை மரபுரிமையாகப் பெற்றது. பாஜக, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், போராட்டத்தின் மூலமூம், வளர்ச்சிப் பணிகளின் மூலமும் பாஜக தனது எம்எல்ஏக்களைப் பெற்று வருகிறது. எதிர்காலம் என்பது உழைக்கும் ஒரு கட்சிக்கே உரியதாகும். மரபில் வாழும் ஒரு கட்சிக்கே அல்ல.2014-ம் ஆண்டு முதல் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்வு பெற்று வருகிறது. 2014-ல் நாடு முழுவதும் 1,035 எம்எல்ஏக்கள் இருந்தனர். இது 2015-ல் 997-ஆகவும், 2016-ல் 1,053-ஆகவும், 2017-ல் 1,365-ஆகவும், 2018-ல் 1,184-ஆகவும், 2019-ல் 1,160 ஆகவும், 2020-ல் 1,207-ஆகவும், 2021-ல் 1,278-ஆகவும், 2022-ல் 1,289-ஆகவும், 2023-ல் 1,441-ஆகவும், 2024-ல் 1,588-ஆகவும் இறுதியாக 2025-ல் 1,654-ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்
இருப்பினும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இன்று காலை தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு உள்ளே செல்லாமல், பள்ளி நுழைவுவாயில் முன் குழந்தைகளுடன் அமர்ந்து, கல்வித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்த கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி உறுதியளித்தார். இதனையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.
டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய தகுதி சுற்றில் நேற்று முன்தினம் இரவு அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் – அயர்லாந்து அணிகள் மோதின.
காசா: இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் அமைப்பினர் இறந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்த உடல்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் முழங்கி தரிசனம் செய்தனர். பின்னர், கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சந்தோஷ மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பூஞ்சப்பரத்தில் சுவாமி கிரிபிரகாரம் உலா வந்து கோயில் சேர்ந்தார். இரவில், 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, கடம்பூர் ராஜு எம்எல்ஏ, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார், புகழேந்தி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் க.ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
