தென்னிந்திய சினிமாவின் இதயத் துடிப்பான சமந்தா ரூத் பிரபு, 2022 அக்டோபரில் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், அரிய ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் நோயைக் கண்டறிந்து தனது ரசிகர்களை திகைக்க வைத்தார். ஒரு மருத்துவமனை படுக்கை புகைப்படக் கலைஞரைப் பகிர்ந்துகொண்டு, அவர் தனது தலைப்பில் எழுதினார்-“சில மாதங்களுக்கு முன்பு நான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் கண்டறியப்பட்டேன். நிவாரணம் வந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இன்னும் கொஞ்ச காலம் ஆகிறது.” இது அவரது தொழில் வாழ்க்கையின் உச்சம், இந்த பாதிப்பு அவரது பலத்தை எடுத்துக்காட்டியது, சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சமந்தாவின் போராட்டமும் வெளிப்படைத்தன்மையும் அவரைப் போன்ற மில்லியன் கணக்கான நோய்களுக்கு தனிப்பட்ட போராட்டத்தை உத்வேகமாக மாற்றியது. அவளுடைய துணிச்சலான பயணத்தைப் பார்ப்போம்.மயோசிடிஸ் மற்றும் அதன் உடல்நல சிக்கல்களைப் புரிந்துகொள்வதுமில்லியன் கணக்கான ஆட்டோ இம்யூன்…
Author: admin
புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிக்கும் பல இந்திய மாணவர்கள் டல்லாஹஸ்ஸி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாயினர். நவம்பர் 19 அன்று ஓகால சாலையில் உள்ள தி சோஷியல் செமினோலில் அடுக்குமாடி கட்டிடத்தை எரித்த பேரழிவுகரமான தீயில் இருந்து புளோரிடா மாநில பல்கலைக்கழகம் இன்னும் மீளவில்லை. பல பல்கலைக்கழக மாணவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர், மேலும் தீ விபத்து ஏற்பட்டபோது அவர்கள் உயிருக்கு ஓடிக்கொண்டிருந்தனர். இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் பலத்த தீக்காயங்களுடன் இருப்பதாகவும் தல்லாஹஸ்ஸியின் இந்திய மாணவர் சங்கம் கூறியுள்ளது. பல நிதி திரட்டல்கள் தொடங்கப்பட்டுள்ளன மற்றும் FSU பேராசிரியர்களும் தீயில் அனைத்தையும் இழந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். பலத்த காயமடைந்த மாணவர்களில் ஒருவர் சமீபத்தில் இந்தியாவில் இருந்து புளோரிடா வந்த 27 வயதான ப்ரீத் ஹர்சோடா என அடையாளம் காணப்பட்டுள்ளார். “ப்ரீத் அவரது…
லக்னோ: டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தனது கருத்தை அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீவிரவாதிகள் மீது மெஹபூபா முப்திக்கு எப்போதும் அனுதாபம் என உத்தர பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் மொஹ்சின் ராசா விமர்சித்துள்ளார். “தேசத்தில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறும் போதெல்லாம் அவர்களின் குடும்பம் முதல் ஆளாக வந்து நிற்கிறது. ஏனெனில், அவர்களுக்கும் தீவிரவாதிகளும் இடையிலான உறவு மிகவும் பழையது.
வடிவமைப்பு குழுவானது தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வுசெய்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைப் பெற்று பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வழங்கும்.அவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான 16 பேர் கொண்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக செயலரும், உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும் இருப்பார்கள். இதுதவிர இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கணிதவியல் நிபுணர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி, இசைக் கலைஞர் சவுமியா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்விரு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கக் கூடாது. ஏனென்றால் அங்கு நடைபெறும் விஷயங்கள் மிக மோசமானதாக உள்ளன. அதனால், நான் அங்கு செல்லவில்லை. ஜி20 அமைப்புக்கு அடுத்ததாக அமெரிக்கா தலைமை தாங்குகிறது. இந்த கூட்டத்தை மியாமியில் உள்ள எனது கோல்ப் கிளப்பில் நடத்த முன்பு திட்டமிட்டிருந்தேன்.போரை நிறுத்தினேன்: இந்தியாவும் – பாகிஸ்தானும் கடந்த மே மாதம் போரில் ஈடுபட்டபோது, 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்தை நிறுத்துவேன் என கூறினேன். மறுநாளே இரு நாடுகளும் போரை நிறுத்திக் கொண்டன. இதெற்கெல்லாம் காரணம் வரி தான். இல்லையென்றால் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்காது. 8 மாதங்களில் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறினார்.
திருப்போரூர்: கந்தசஷ்டியை முன்னிட்டு திருப்போரூர், வல்லக்கோட்டை மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதையொட்டி, தினமும் லட்சார்ச்சனை நடைபெறுவதால், பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில், கந்த சஷ்டியின் கடைசி நாளான இன்று (27-ம் தேதி) மாலை 5 மணிக்கு மேல் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சித்தார்த், ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ள காமெடி படத்துக்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்ஸி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். வம்சி வில்லனாக நடித்துள்ளார். இதை ‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரேவா இசை அமைத்துள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது.
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் விரைவில் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, 90,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்கப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.98,616 ஆக இருந்தது. அதேநேரத்தில்,வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.165 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1,65,000 ஆகவும் இருந்தது.
