புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார். இதற்கு பிரதிபலனாக குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேராவுக்கு ஓபிபிஎல் நிறுவனம் வழங்கியது. ஆனால் இதை ரூ.7.5 கோடிக்கு வாங்கியதாக ராபர்ட் வதேரா கூறுகிறார். இது பொய் என கூறிய அமலாக்கத்துறை, ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் (எஸ்எல்எச்பிஎல்) வங்கி கணக்கில் அப்போது ரூ.7.5 கோடி பணம் இல்லை எனவும், அவர்கள் தெரிவித்த காசோலை எண், வங்கியில் பணமாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலத்தை ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட்…
Author: admin
சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில், என்யூஎல்எம் முறையில் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது ஆகிய 3 கோரிக்கையை வலியுறுத்தினர். இதை அரசுத் தரப்பு ஏற்காததால், 9-வது நாளாக போராட்டத்தை தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரு மண்டலங்களிலும் நேற்று தூய்மைப் பணி மீண்டும்…
புதுடெல்லி: உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களில் குரங்குகள் தொல்லை என்பது சாதாரணமாக உள்ளது. பிலிபித்தின் பில்சந்தா காவல் நிலையத்திலும் குரங்குகளின் இதுபோன்ற தொல்லை அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க பில்சந்தா போலீஸார் ஒரு புதிய உத்தியை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள் லங்கூர் எனப்படும் கருங்குரங்கை காவல் நிலையத்தில் கட்டி வைத்துள்ளனர். லங்கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்குகள் அச்சப்படும் என்பதால் இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் குரங்கு சிலசமயம் காவல் நிலைய ஆய்வாளரின் மேசையிலும் சொகுசாக அமர்ந்து பழங்களை உண்கிறது. இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பில்சந்தா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சித்தாந்த் சர்மா கூறும்போது, ‘‘இந்த குரங்குகளால் காவலர்களின் தொப்பிகள், முக்கிய கோப்புகளை இழந்துள்ளோம். சிலசமயம் நாங்கள் சீருடைகளை மாற்றவதற்காக கழட்டி வைத்தால் அதையும் குரங்குகள் வெளியே எடுத்துச்சென்று வீசி விடுகின்றன. வேறிவழியின்றி குரங்குகள் பார்த்து அச்சப்படும் லங்கூர் குரங்கை பாதுகாப்புக்கு வைத்துள்ளோம். இரண்டு…
தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பிரதான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்கும் எனச் சொல்லப்படும் நிலையில், திமுக-வுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தமிழறிஞரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணையாழி ம.இராசேந்திரனிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்தி வளர்ந்திருக்கிறதா இல்லையா? இந்தி எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக இந்தித் திணிப்பு அல்லது இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்லலாம். இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழியாக இருப்பதை எப்போதும் யாரும் எதிர்க்கவில்லை. இந்தியோடு அரசியல் ஆதிக்கம் சேரும் போதுதான் எதிர்ப்புக்கு உள்ளாகிறது. இந்தியை வளர்க்கும் ஒன்றிய அரசின் அரசியல் முன்னெடுப்புகள் கூடிக்கொண்டே வந்தாலும் கூட இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் குறைந்துகொண்டேதான் வருகிறது.…
கடந்த ஜூன் மாதம் ஜார்ஜியா வீட்டின் கூரை வழியாக கிழிந்த ஒரு விண்கல் துண்டு பூமியை விட பழையது என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.புவியியலாளர் ஸ்காட் ஹாரிஸ் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலுக்கு ஜூன் 26 அன்று அட்லாண்டா அருகே வீழ்ந்த தி ராக் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையிலான சிறுகோள் பெல்ட்டிலிருந்து தோன்றியது என்று கூறினார். பகுப்பாய்வு 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதைக் காட்டுகிறது – பூமியின் பிறப்புக்கு சற்று முன்னதாக, 4.54 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஒரு உமிழும் வம்சாவளிஅந்த நாளில் வானம் முழுவதும் ஒரு பிரகாசமான ஃபயர்பால் கோடுகளைப் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். வீட்டை விசாரிக்க ஹாரிஸ் விரைவாக அழைக்கப்பட்டார், அங்கு அவர் விண்கல்லின் வியத்தகு பாதையை கண்டுபிடித்தார்: கூரை வழியாக ஒரு சுத்தமான துளை மற்றும் ஒரு காற்று குழாய்காப்பு மற்றும் உச்சவரம்பு மூலம் ஊடுருவல் தரையில் தாக்கம்,…
புதுடெல்லி: நாட்டின் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயிலானது 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது. நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள இதற்கு ருத்ராஸ்த்ரா என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது: ருத்ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 354 வேகன்களைக் கொண்ட இந்த ரயில் நாட்டின் மிக நீளமான சரக்கு ரயிலாக இருக்கும். 4.5 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டதாகவும், மிகச்சிறப்பாகவும் இந்த ரயில் உள்ளது. உத்தர பிரதேசத்தின் கஞ்ச்கவாஜா ரயில் நிலையத்தில் இருந்து இது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த ரயில் 7 இன்ஜின்களைக் கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது உலகின் மீக நீளமான 2-வது சரக்கு ரயிலாக உள்ளது. உலகின் மிக நீளமான சரக்கு ரயில்…
சிவதாணுபுரம் என்கிற கிராமத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாகவும் பட்டியலின மக்கள் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். பொதுத் தொகுதியாக இருக்கும் அதன் ஊராட்சிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த வகையிலும் முன்னேறவில்லை. ஆனால், சாதிப்பற்று, சாதி வெறியில் முன்னேறியிருக்கும் அந்த ஊர், பட்டியலின வேட்பாளருக்கான தனித் தொகுதியாக மாறுகிறது. கொதித்தெழும் ஆதிக்க சாதியினர், பட்டியலின வேட்பாளரைக் கொலை செய்கிறார்கள். அதன் விளைவாகப் பழையபடி பொதுத் தொகுதியாகி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித் தொகுதியாகிறது. இம்முறை, ஏதும் செய்ய முடியாமல் ஒரு பொம்மை வேட்பாளரை ஆதிக்க வர்க்கம் நிறுத்த, அவருக்குப் போட்டியாகக் களமிறங்குகிறார், முன்பு கொலை செய்யப்பட்டவரின் பேத்தியான அமுதா. இதை எதிர்பார்க்காத வர்கள், அமுதாவைத் தோற்கடிக்க என்ன செய்கிறார்கள், அதை அமுதா எப்படி எதிர்கொண்டார் என்பது கதை. அமுதா என்கிற சாமானியப் பெண், தன் குடும்பத்தின் பேரிழப்பு உருவாக்கிய வலி, தன்னுடைய மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து எழுச்சிபெற்று முன்னேறும் பெண் போராளியாகப் படைத்திருக்கிறார்,…
சென்னை: அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணிநியமனங்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பஇஎஸ்சி) மூலமாகவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாகவும், காவல், தீயணைப்பு, சிறைத் துறைப் பணியாளர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும் தேர்வுசெய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் எம்ஆர்பி எனப்படும் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்படுகின்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும், அரசுப் பள்ளிகளிலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசுப் பணியில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அரசு…
மூலவர்: திரிவிக்கிரம நாராயணர் அம்பாள்: லோகநாயகி தல வரலாறு: பல யுகங்கள் வாழும்படி சாகா வரம் பெற்றிருந்தார் பிரம்மா. இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகி, தனது படைக்கும் தொழிலை அவர் சரிவர செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு. இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக இடதுகாலைத் தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு விருப்பம் எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு மகாவிஷ்ணு, திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெறுவீர். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்” என்று கூறினார். சூட்சுமமாக மகாவிஷ்ணு, தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா…
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு டீன்களும், சுகாதாரத் துறைகளுக்கு புதிய இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை (டிஎம்எஸ்) இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். அதேபோல, குடும்ப நலத்துறை இயக்குநர் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பு அடிப்படையில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலனைக்கு பிறகு, அதற்கான நியமன ஆணைகளை சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி, பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.சோமசுந்தரம், துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மருத்துவம் மற்றும்…