Author: admin

பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல… தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது.

Read More

சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடியாகவும், 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து அங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.

Read More

லைமரன்ஸ் என்பது ஒரு தீவிரமான, தன்னிச்சையற்ற காதல் ஆவேசமாகும், இது வழக்கமான மோகத்திற்கு அப்பாற்பட்டது, ஊடுருவும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சி சார்பு கொண்ட நபர்களை உட்கொள்கிறது. மருத்துவ நோயறிதல் இல்லை என்றாலும், இந்த நிலை தினசரி வாழ்க்கையை சீர்குலைத்து, முழு உடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். மனித ஏக்கத்தின் வடிவத்தை சீர்குலைப்பதாக இருந்தாலும், இது முற்றிலும் நோயியலா அல்லது உருமாற்றம் உண்டா என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர். நாங்கள் அனைவரும் அங்கே இருந்தோம் – காதல் உறவு முடிந்த பிறகும், அந்த நபரைப் பற்றி நினைப்பதை நிறுத்த முடியாமல் எங்கள் இதயம் உடைந்தது. ஆனால் சில சமயங்களில் இந்த ஏக்கம் சாதாரண மனவேதனைக்கு அப்பாற்பட்டது. முன்னாள் எண்ணங்கள் உங்களை நுகர ஆரம்பிக்கும். நீங்கள் அதை உணரும் முன், நீங்கள் உரையாடல்களை மீண்டும் இயக்கி, சமரசங்களை கற்பனை செய்து, தப்பிக்க முடியாத ஒரு சுழற்சியில் நழுவுவீர்கள். அது லைமரன்ஸ்.லைமரன்ஸ் என்றால் என்ன லைமரன்ஸ் என்பது தன்னிச்சையான…

Read More

குளிர் நிலவு என்று பரவலாக அழைக்கப்படும் டிசம்பர் 2025 முழு நிலவு, ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க சந்திர காட்சிகளில் ஒன்றை உறுதியளிக்கிறது. இந்த சூப்பர் மூன் மற்ற முழு நிலவுகளை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும், வடக்கு அரைக்கோளத்தில் பார்வையாளர்களுக்கு வானில் வழக்கத்திற்கு மாறாக உயரமான புள்ளியை அடையும். பெரிஜியின் போது பூமிக்கு அதன் அருகாமை அதன் அளவை அதிகரிக்கிறது, இது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்திர உதயத்தில் குறிப்பாக ஈர்க்கக்கூடியதாக இருக்கும். வரலாற்று ரீதியாக, இந்த நிலவு லாங் நைட்ஸ் மூன் அல்லது யூலுக்கு முன் சந்திரன் என்றும் அழைக்கப்படுகிறது, இது பருவகால மரபுகளை பிரதிபலிக்கிறது. தெளிவான கிழக்கு அடிவானத்துடன் திறந்த, உயரமான இடங்களில் இருந்து ஸ்கைவாட்சர்கள் சிறந்த காட்சிகளை அனுபவிக்க முடியும். குளிர் நிலவு இயற்கை அழகு, வான அறிவியல் மற்றும் பருவகால முக்கியத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது, இது வானியலாளர்கள் மற்றும் சாதாரண பார்வையாளர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய…

Read More

கோரி புக்கர் இறுதியாக திருமணம் செய்து கொண்டார், மேலும் இணையம் சிறந்ததைச் செய்தது. இது ஒரு ஆரோக்கியமான திருமண அறிவிப்பை எடுத்தது மற்றும் உடனடியாக அதை அவரது பாலியல் பற்றிய வாக்கெடுப்பாக மாற்றியது. ஹேஷ்டேக்குகள் யூகிக்கக்கூடியவை; நகைச்சுவைகள் மறுசுழற்சி செய்யப்பட்டன; புக்கர் ஓரினச்சேர்க்கையாளர் என்ற பல வருட கிசுகிசுக்கள் திடீரென்று மீண்டும் பிரபலமடைந்தன, 2025 ஆம் ஆண்டு 2013 ஆம் ஆண்டு சிறந்த வடிப்பான்களுடன் இருந்தது.ஆனால் இந்த வதந்திகள் ஒரே இரவில் தோன்றவில்லை. அவை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பரவி வருகின்றன, ஒவ்வொரு தேர்தல் சுழற்சியிலும், ஒவ்வொரு தொலைக்காட்சி நேர்காணலிலும் உருவாகின்றன, மேலும் ஒவ்வொரு முறையும் புக்கர் அமெரிக்காவின் ஆண்மைக் காவல்துறையின் வசதிக்காக சற்றே கவிதையாகச் சொன்னார்.அந்தக் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள நீண்டகாலக் கதை இங்கே உள்ளது – திருமணத்திற்குப் பிறகும் அவை ஏன் தொடர்கின்றன.எங்கிருந்து வதந்தி தொடங்கியது“கோரி புக்கர் ஓரினச்சேர்க்கையாளரா?” என்பதன் முந்தைய பதிப்புகள் 2000 களின் முற்பகுதியில் அவர்…

Read More

மும்பை: பிஹாரில் எதிர்க்கட்சிகள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிட்டாலும் வாக்காளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை உறுதியாக ஆதரித்துள்ளனர் என்றும், பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார் என்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.இதுபற்றி பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “பிஹாரில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவும், தனித்தனியாகவும் தேர்தலில் போட்டியிட்டன, ஆனால் பொதுமக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடி பொதுமக்களின் இதயத்தில் வாழ்கிறார். ஒருவரின் குடும்பத்திலோ அல்லது கட்சியிலோ என்ன நடக்கிறது என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நாங்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.

Read More

சென்னை: திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் பல்​வேறு தொழில் பிரிவு​களுக்கு நவ.14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்​டிக்கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தமிழக அரசு வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்சித் துறை​யின் கீழ் இயங்​கும், திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தின் நேரடி சேர்க்கை நவ.14-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 4-வது சுற்​றில் டைபிரேக்​கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார். அதேவேளை​யில் மற்ற இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்​கரில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறினர்.

Read More

இஸ்லாமாபாத்: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், "ஆப்கனிஸ்தானை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பொம்மலாட்டத்தில் பொம்மைகளை பின்னால் இருப்பவர்கள் இயக்குவதுபோல, ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது. இந்தியா சொல்படி பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனிஸ்தான் மூலம் பினாமி போரை பாகிஸ்தான் மீது இந்தியா தொடுக்கிறது

Read More

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைந்தொடர்ந்து காலை பல்லக்கு உற்சவத்திலும், இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 23-ம் தேதி வியாழக்கிழமை இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு புருஷா மிருக வாகனம், 25-ம்தேதி சனிக்கிழமை இரவு பூத வாகனம், 26-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அன்ன வாகனத்திலும் தினம் ஒரு சூரபொம்மையுடன் மேளதாளம், வான வேடிக்கைகளுடன் வீதி உலா நடைபெறும்.

Read More