சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை, ‘றெக்க’, ‘ஜகமே தந்திரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சவுந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்ற சமூகநல அறக்கட்டளையைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடிகர் சவுந்தர ராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை வளர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Author: admin
சென்னை: அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது…
ஒரு முழு நூற்றாண்டைக் காண சிலரை வாழ என்ன செய்கிறது? கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் ஆராய்ச்சியாளர்களால் ஜெர் விஞ்ஞானத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஸ்வீடிஷ் ஆய்வின்படி, வியக்கத்தக்க எளிய துப்பு உடலுக்குள் இருக்கலாம், எதிர்கால நூற்றாண்டு மக்களை மற்ற மக்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஆராய்ச்சியாளர்கள் பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான வயதானவர்களைக் கண்காணித்தனர், பங்கேற்பாளர்கள் 100 ஐ அடைவதற்கு முன்பே விதிவிலக்கான நீண்ட ஆயுளைக் குறிக்கும் வடிவங்களைக் கவனித்தனர். மரபியல், உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் தொடர்ந்து ஆயுட்காலம் பாதிக்கின்றன, இந்த ஆய்வு சில இரத்தக் குறிப்பான்களில் ஒரு நிலையான வடிவத்தைக் கண்டறிந்தது, இது ஒரு நூற்றாண்டில் வாழ்வதோடு வலுவாக தொடர்புடையது. இந்த கண்டுபிடிப்புகள் அசாதாரண நீண்ட ஆயுளுக்குப் பின்னால் உள்ள உயிரியல் ரகசியங்களைப் பற்றிய ஒரு புதிரான பார்வையை வழங்குகின்றன, மேலும் ஆரோக்கியமான வயதானது குறித்த எதிர்கால ஆராய்ச்சியை வழிநடத்த உதவும்.100 கடந்த 100 உடன் இணைக்கப்பட்ட முக்கிய பயோமார்க்ஸ் வளர்சிதை மாற்றம்,…
புதுடெல்லி: பிஹார் மாநிலம் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மின்டா தேவி. வாக்காளர் பட்டியலில் இவர் 124 வயது மூதாட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு ஆதாரமாக மின்டா தேவியின் வாக்காளர் அட்டையையும் வெளியிட்டு பேசினார். இந்நிலையில், வாக்கு திருட்டு குற்றச்சாட்டை மீண்டும் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்டா தேவியின் புகைப்படம், பெயர் அச்சிடப்பட்ட ‘டி ஷர்ட்’டை அணிந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கவுரவ் கோகய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தனியார் செய்தி சேனலிடம் மின்டா தேவி கூறியதாவது: என் புகைப்படம், பெயரை டி ஷர்ட்டில் பயன்படுத்த அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? அவர்கள் யார்? எனக்கு ராகுல் காந்தியும் பிரியங்காவும் எனக்கு என்ன உறவு? என்னுடைய வாக்காளர் அட்டையில் முரண்பாடுகள் உள்ளது. அதை சரி…
சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று 7-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தியை சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி 71-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார். உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய ஆட்டம் 35-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் மோதினார். கருப்பு காய்களுடன் விளையாடிய வின்சென்ட் கீமர் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். முதல் 3 சுற்றுகளில் வெற்றிகளை குவித்திருந்த வின்சென்ட் கீமர் அடுத்த 3 சுற்றுகளையும் டிரா செய்திருந்தார். தற்போது 7-வது சுற்றில் அவர், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார். இன்னும் 2…
ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு ‘நெல்லை பாய்ஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ‘அருவா சண்ட’ படத்தைத் தயாரித்த வி.ராஜா தயாரிக்கிறார். கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். மற்றும் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. “சாதி மறுப்பு திருமணங்களை அங்கீகரிக்காத ஆணவக் கொலைகள் சமூகத்தில் நடந்து வருகின்றன. இதில் தென் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதைத் தோலுரித்துக் காட்டும் விதமாகவும், காதலுக்கு மட்டுமல்ல, நட்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது இந்த நெல்லை சீமை என்பதையும் காட்டும் படமாக இது இருக்கும்” என்றது படக்குழு.
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர், திருமங்கையாழ்வார் நகர், தாங்கல் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள 102 குடும்பங்கள், திருநீர்மலை 31-வது வார்டு திருமங்கையாழ்வார்புரம், சர்வே எண் 234/2, 272 ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகள், பொழிச்சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்யப்பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: ஒருபுறம் அரசு பட்டா கொடுத்து வருகிறது. மறுபுறம், தமிழகம் முழுவதும் பட்டா கேட்டு மீண்டும் மீண்டும் மக்கள் மனு கொடுத்து வருகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம், வருவாய்த் துறை ஆவணங்களில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யாததே இதற்கு காரணம். வருவாய்த் துறை…
ஒரு சமீபத்திய ஆய்வு, தயவின் செயல்களில் ஈடுபடுவது அறிவாற்றல் வீழ்ச்சியை கணிசமாக மெதுவாக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாசசூசெட்ஸ் போஸ்டன் பல்கலைக்கழகம் வழக்கமான தன்னார்வத் தொண்டு அல்லது மற்றவர்களுக்கு உதவுவது அறிவாற்றல் வயதானதை 15-20%குறைக்கிறது என்று கண்டறிந்தனர். உங்கள் வயதில், உங்கள் மூளை மெதுவாக இருக்கும். இது சிக்கல் தீர்க்கும், கவனம் மற்றும் நினைவகம் போன்ற எளிய அன்றாட பணிகளை ஒரு சவால் செய்கிறது. எனவே, அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க முடியுமா? அல்லது அதை மெதுவாக்குகிறீர்களா? சரி, அறிவியலின் படி, ஆம், அது சாத்தியம். அறிவாற்றல் வீழ்ச்சியை நீங்கள் மெதுவாக்கலாம். இல்லை, அதை அடைய விலையுயர்ந்த கூடுதல் அல்லது சிகிச்சைகளுக்கு நீங்கள் செலவிட வேண்டியதில்லை. உண்மையில், இதற்கு கிட்டத்தட்ட பணம் தேவையில்லை. ஒரு எளிய தினசரி செயல் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஆஸ்டின் மற்றும் மாசசூசெட்ஸ் போஸ்டன் பல்கலைக்கழகத்தில்…
புதுடெல்லி: வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வீடுதோறும் மூவர்ணக்கொடி பிரச்சாரத்தின் கீழ் எனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினேன். பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் இன்று தேசத்தை ஒற்றுமையின் இழையில் பிணைத்து, தேசபக்தியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் தியாகம், தவம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பெற்ற சுதந்திர இந்தியாவை மேம்படுத்த நாட்டின் 140 கோடி மக்களும் உறுதியாக உள்ளனர் என்பதை இந்தப் பிரச்சாரம் நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அந்நகலை இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்று) பிற்பகல் முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தின் இரு நகல்கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக…