Author: admin

“வரும் தேர்தலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ஓட ஓட விரட்ட வேண்டும். அவரை தோற்கடிப்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடமையாக இருக்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ பிரச்சார பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: கடந்த ஆட்சியின் போது இளம் விதவைகள் அதிகம் என கனிமொழி எம்.பி. கூறினார். ஆனால், இன்று அதை பற்றியே பேசுவதில்லை. ஏனென்றால், டாஸ்மாக் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மதுக்கடைகளை குறைப்போம் என ஆட்சிக்கு வந்தவர்கள், ஒரு கடையைக்கூட குறைக்காமல் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.

Read More

லண்டன்: இந்​தியா மட்​டுமல்​லாது இங்​கிலாந்​தி​லும் தொழில் துறை​யில் முத்​திரை பதித்து வரும் இந்​துஜா குழு​மத்​தின் தலை​வ​ராக இருந்த ஸ்ரீசந்த் இந்​துஜா கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கால​மா​னார். இதையடுத்து அவருடைய இளைய சகோ​தரர் கோபிசந்த் இந்​துஜா (85) தலை​வ​ரா​னார். இவரது தலை​மை​யில் இந்​துஜா குழு​மம் பல்​வேறு துறை​யில் கால் பதித்​தது. இங்​கிலாந்து மற்​றும் ஆசிய பணக்​காரர்​கள் பட்​டியலில் இவரும் இவரது சகோ​தரரும் அடிக்​கடி இடம்​பெற்​றனர். இந்​நிலை​யில் கடந்த சில வாரங்​களுக்கு முன்பு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டதை அடுத்​து, லண்​டனில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று கால​மா​னார்.

Read More

ஒற்றை சிறுநீரகத்துடன் பிறந்த குழந்தைகள், ஒருதலைப்பட்ச சிறுநீரக அஜெனிசிஸ் (URA) எனப்படும் ஒரு நிலை, பெரும்பாலும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நடத்தலாம். ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்திருந்தாலும், பெரும்பாலான குழந்தைகள் குழந்தை பருவம் மற்றும் முதிர்வயது வரை சாதாரண சிறுநீரக செயல்பாட்டை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மனித உடல் ஒரு சிறுநீரகம் இல்லாத நிலையில் மாற்றியமைக்கும் திறன் கொண்டது, மீதமுள்ள சிறுநீரகம் பொதுவாக பெரிதாக்குகிறது மற்றும் காணாமல் போன உறுப்புக்கு ஈடுசெய்கிறது.கழிவுகளை வடிகட்டுதல், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குதல் போன்ற அத்தியாவசிய சிறுநீரக செயல்பாடுகள் திறம்பட தொடர்வதை இந்த தழுவல் உறுதி செய்கிறது. யுஆர்ஏ உள்ள குழந்தைகளில் தீவிரமான நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் அரிதானவை என்பதை அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.ஒருதலைப்பட்ச சிறுநீரக ஏஜெனிசிஸ் எவ்வளவு பொதுவானது மற்றும் சிறுநீரகம் எவ்வாறு மாற்றியமைக்கிறதுஒருதலைப்பட்ச சிறுநீரக ஏஜெனிசிஸ் ஒரு அரிய பிறவி நிலையாகக் கருதப்படுகிறது. தேசிய…

Read More

லக்ஷ்மி மிட்டல் அதிக வரி செலுத்தியதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஃகுத் தொழில் அதிபர் லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார் என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, தொழிலாளர் அரசாங்கத்தின் பரம்பரை வரிதான் பணக்காரர்கள் பெருமளவில் வெளியேறியது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் தனது வரவிருக்கும் பட்ஜெட்டில் மற்றொரு வரி உயர்வை சுமத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏப்ரல் மாதத்தில் டோம் அல்லாத நிலையை நீக்கினார். இந்த அமைப்பு இங்கிலாந்தில் வசிக்கும் செல்வந்தர்கள் நாட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்த அனுமதித்தது — கடல் வருவாயிலிருந்து அல்ல. மிட்டலின் ஆலோசகர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி, இங்கிலாந்தில் வசிக்கும் பல செல்வந்தர்கள் உலகில் வேறு இடங்களில் உள்ள தங்கள் சொத்துக்களுக்கு ஏன் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பதில் ஒரு தீர்வில் இருப்பதாகக்…

Read More

கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்கு இத்திட்டம் தடையாக இருக்காது” என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவற்றின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. திட்ட வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட பாதிக்கப்பட்ட தரப்பினர் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசின் மனு முன்கூட்டிய நடவடிக்கை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.

Read More

சென்னை: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்​டத்​தில் நன்​கொடை வசூலிக்க ஆசிரியர்​கள், அலு வலர்​கள் நிர்​பந்​திக்​கப்​படு​வ​தாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்​டு​களை மறுத்து பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்​துள்​ளது. தமிழகத்​தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டத்​தின் வாயி​லாக நன்​கொடைகளை வசூலிக்க பள்​ளிக் கல்​வித்​துறை அதி​காரி​களும் ஆசிரியர்​களும் வற்​புறுத்​தப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதற்கு மறுப்பு தெரி​வித்து பள்​ளிக்​கல்​வித் துறை அளித்​த விளக்​கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டம், நிறு​வனங்கள் சட்​டம் பிரிவு 8-ன்​கீழ் தமிழக அரசால் பதிவு செய்​யப்​பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி வளர்ச்​சி​யில் அக்​கறை கொண்ட பங்​களிக்க விரும்​பும் தொழில் நிறு​வனங்​கள், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​கள், முன்​னாள் மாணவர்​கள் மற்​றும் தனி​நபர்​கள் ஆகியோரின் மீதே இத்​திட்​டத்​தின் முழு கவன​மும் பதிந்​துள்​ளது. முக்​கிய​மாக எந்த ஒரு அரசு அலு​வலரோ, ஆசிரியரோ எந்த நிதி​யை​யும் பெற நியமிக்​கப்​பட​வில்​லை. இந்த தளத்​தில் பெறப்​படும் பங்​களிப்​பு​கள் வெளிப்​படைத்​தன்மை கொண்​ட​தாகும்.

Read More

தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்​கில் ஹாங்காங்​கின் ஆன் யியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றார்.இதன் மூலம் 23 வயதான சென்​னையை சேர்ந்த அனுப​மா, ஐபிஎஸ்​எஃப் உலக ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார்​.

Read More

விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.

Read More

சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகி​ராமத்​தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெரு​வில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு சுயம்பு மூர்த்​தி​யாகத் தோன்​றிய அரசமர பிள்​ளை​யாருக்​கு, ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் ராகு​கால சமயத்​தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்​சனை நடை​பெறுகிறது. இதுகுறித்து இக்​கோ​யில் அரங்​காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலை​வரு​மான குருஜி ஸ்ரீ சுப்​பிரமணி​யம் கூறிய​தாவது: 1983-ம் ஆண்​டு, நானும் எனது நண்​பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்​பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்​சார்ச்​சனை தொடங்​கப்​பட்​டது.

Read More

பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் பேசும்போது, “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது” என்றார்.

Read More