Author: admin

அவரது நோயறிதலுக்குப் பிறகு, சமந்தா பல மாதங்கள் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்தார். பல நேர்காணல்களில், “சில நாட்கள் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருந்தது” என்று பகிர்ந்து கொண்டார். செயல்பாட்டு மருத்துவத்தைத் தவிர, அவரது சிகிச்சையில் தனிப்பயனாக்கப்பட்ட பிசியோதெரபியும் அடங்கும். வீக்கம் மற்றும் தசை பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு தன்னுடல் தாக்க நிலையைக் கையாளும் போதிலும், அவர் தனது வலிமையை சீராக மீண்டும் உருவாக்கியுள்ளார். ஊட்டச்சத்து பயிற்சியாளர் ரியான் பெர்னாண்டோவுடன் நடந்த உரையாடலில், எடை பயிற்சி தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதை சமந்தா பகிர்ந்து கொண்டார். போட்காஸ்டில் அவர் வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வரை தனது உடற்பயிற்சிகளைப் பகிர்ந்து கொண்டார், மேலும் காலை நேரங்கள் அவருக்கு தனிப்பட்ட விருப்பமானவை, ஏனெனில் அது “அன்றைய மனநிலையை அமைக்கிறது”. சமூக ஊடகங்களில், சமந்தாவின் ஃபிட்னஸ் வழக்கமான ஒரு எளிதான பயணம் என்ற படத்தை விட்டுவிடவில்லை. பார்பெல் குந்துகள் முதல் டெட்லிஃப்ட்…

Read More

ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 18 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிக்கோலஸ் சிங், கனடாவின் “மோஸ்ட் வான்டட் லிஸ்டில்” இருந்ததாக கூறப்படுகிறது.”மே 31, 2024 அன்று “சட்டவிரோதமாக பெரிய அளவில்” சென்ற ஃபெடரல் குற்றவாளியான 23 வயதான சிங், ஆகஸ்ட் மாதம் ஒரு OPP மேல்முறையீட்டின் மையமாக இருந்தார், அவர் தனது சட்டப்பூர்வ விடுதலையை மீறியதற்காக கனடா முழுவதும் வாரண்டில் தேடப்பட்டவர் என்று காவல்துறை கூறியது.சனிக்கிழமை வெளியிடப்பட்ட OPP அறிக்கையின்படி, சிங் தற்போது ஐந்து ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் 10 நாள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், இது டொராண்டோ சன் மேற்கோள் காட்டியது.இரவு 11.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) Bathurst மற்றும் Dupont தெருக்களுக்கு அருகே வாகனத்தில் சிங்கைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடைசெய்து முன் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை இரவு…

Read More

பிஹாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருந்த ஜேடியு செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா நேற்று நிதிஷ் குமாரைச் சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர், “சில நாட்களில், புதிய அரசாங்கம் அமைக்கப்படும். சரியான நேரத்தில் நீங்கள் விவரங்களை அறிந்து கொள்வீர்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அறிக்கையில் நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என்று கூறினார்.2020 தேர்தலில் 50-க்கும் குறைவான எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்ததால் குறைவான அமைச்சர்களை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இம்முறை அமைச்சரவையில் அதிக இடங்களை கேட்டுள்ளது. இதற்கிடையில், எல்ஜேபி கட்சி புதிய அரசாங்கத்தில் சேர ஆவலுடன் இருப்பதாக சிராக் பாஸ்வான் கூறினார். அதே நேரத்தில் எல்ஜேபி துணை முதல்வர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சிகளும் அமைச்சரவையில் இடம் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.

Read More

டாக்கா: ஆசிய வில்​வித்தை சாம்​பியன்​ஷிப் போட்டி டாக்கா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் காம்​பவுண்ட் அணி​கள் பிரி​வில் ஜோதி சுரே​கா, தீப்​ஷி​கா, பிரித்​திகா பிரதீப் ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 236 – 234 என்ற புள்​ளி​கள் கணக்​கில் கொரியா அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.காம்​பவுண்ட் கலப்பு அணி​கள் பிரி​வில் அபிஷேக் வர்​மா, தீப்​ஷிகா ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 153 – 151 என்ற கணக்​கில் வங்​கதேச அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது.

Read More

பெய்ஜிங்: சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம் உள்ள பிரி​வில் பால், சிவப்பு பேரீச்​சம்​பழம், பெர்ரி பழங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன.

Read More

தொடர்ந்து வரும் அக்.27-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகார்ச்சனை, காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் உற்சவரிடம் சண்முகார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதலும், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும், மாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சண்முகார்ச்சனை ஆகியவையும், அக்.28ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது.விழாவையொட்டி வரும் அக்.27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read More

ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இதில் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதில் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். அவருடன் இதில் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜும், மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவும் நடிக்கின்றனர். இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

Read More

சென்னை: எழும்​பூரில் உள்ள ஆவணக் காப்​பகத்​தின் அரிய ஆவணங்​கள் உதவி​யுடன் தமிழக வரலாறு குறித்து ஆய்​வுசெய்ய மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும் என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை எழும்​பூரில் இயங்கி வரும் பழமை​யான தமிழ்நாடு ஆவணக் காப்​பகத்​தில் 1633-ம் ஆண்டு முதலான புத்​தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமை​யான ஆவணங்​களும் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Read More

இந்தியாவின் 1% பெரும் பணக்காரர்களின் செல்வம் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டுக்குள் 62% அதிகரித்துள்ளதாக தென்னாப்பிரிக்க தலைமையால் நியமிக்கப்பட்ட ஜி20 குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.சர்வதேச சமத்துவமின்மையின் நிலை குறித்து ஆராய ஜி20 அமைப்பு சார்பில் நிபணர் குழு அமைக்கப்பட்டது. 2001-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில், ஜெயதி கோஷ், வின்னி பியானிமா, இம்ரான் வலோடியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவில் சமத்துவமின்மை என்பது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய அளவுக்கு (emergency levels) அதிகரித்துள்ளது. இது ஜனநாயக நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை, காலநிலை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

Read More