யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயார்க் மேயராக பதவியேற்பார்.
Author: admin
பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இவர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்தபின் தேன், சர்க்கரை கலந்த தினை மாவும், மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவு பால் இலவசமாக வழங்கப்பட்டது.தினமும் இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து அருள் பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11, மாலை 5 மணியளவில் சண்முகார்ச்சனையும் நடைபெறும்.
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்தவர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ். சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. முன்னதாக, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் பல நாடகங்களில் நடித்திருக்கும் இவர், சர்வாதிகாரி, பூமாலை, ஆரவல்லி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’.தனது இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடித்து வந்த அவர் பெயரில் ‘எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக்கூடம்’ மற்றும் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் இளவரசு, எழுத்தாளர் பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் எஸ்.எஸ்.சிவசூரியன் மகனும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து…
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில் கோயில் சொத்துகளை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டு முறையாகப் பராமரிக்கவும், மீனாட்சியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, விரைவில் குடமுழுக்கு நடத்தக் கோரியும், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மும்பை: ஊழியர்கள் உள்ளூர் மொழியில் பேசுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மும்பையில் நடைபெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 12வது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:
இது நம்பமுடியாத பசுமையானது மற்றும் ராஜஸ்தான் போல் இல்லை. அழகாக வெட்டப்பட்ட மரங்கள், அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள், ராஜஸ்தானி பாணி மினாரட்களைச் சுற்றியுள்ள அழகான சிறிய குளங்கள், அவற்றைச் சுற்றி வளரும் கொடிகள் மற்றும் தாமரை இலைகள் அவ்வப்போது பூக்களுடன் மிதக்கும் வண்ணம் சேர்க்கிறது, ஜெய்ப்பூரில் உள்ள ஓபராய் ராஜ்விலாஸ் ஒரு அற்புதமான உணர்வைத் தருகிறது.PS: இது ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் அல்ல, கட்டுரையில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் உண்மை மற்றும் உண்மையானவை. காலப்போக்கில் பொதிந்த கோயில்பின்னர் குளத்தின் ஓரத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. கூப்பிய கைகளுடன் அங்கு நிற்கும் போது, ஒரு வித்தியாசமான அமைதி மற்றும் அமைதியான உணர்வை உணர்கிறார், சில நேரம் இங்கே கைப்பற்றப்பட்டது போல். இங்கு எதுவும் மாறாதது போல் மௌனமும் எளிமையும் இருக்கிறது. கோவில் காலை ஒன்பது மணிக்கு மூடப்பட்டு மாலை ஆறு மணிக்கு மீண்டும் திறக்கப்படும், எனவே விருந்தினர்கள் சில ஆன்மீக…
ரோஹ்தக்: ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, கடந்த வாரம் வொர்செஸ்டரில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் இறந்த 29 வயது இந்திய மாணவர் விஜய் குமார் ஷியோரானின் உடலைத் தாயகம் கொண்டுவர உதவுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் (MEA) வேண்டுகோள் விடுத்துள்ளது.நவம்பர் 26 அன்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், விஜயின் மூத்த சகோதரர் ரவிக்குமார் சார்க்கி தாத்ரியின் பத்ரா தாலுகாவில் உள்ள ஜாக்ரம்பாஸ் கிராமத்தில் வசிக்கும் தனது தம்பியின் உடலை வீட்டிற்கு கொண்டு வர அவசர உதவி கோரினார். திருப்பி அனுப்பும் செயல்பாட்டில் “உடனடி உதவி” மற்றும் “முழு ஆதரவு” ஆகியவற்றிற்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குமாறு குடும்பத்தினர் கோரியுள்ளனர்.இங்கிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலில் இந்திய இளைஞர் பலி; ஆறு சந்தேக நபர்களுக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட பிறகு குடும்பம் நீதி கோருகிறதுபிரிஸ்டலில் உள்ள வெஸ்ட் ஆஃப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் (UWE) மேலாண்மைப் படிப்பைத்…
முன்னதாக, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது. இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை இந்தியா வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்.மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக்கூடியது. எனவே, இந்த இரண்டு குற்றவாளிகளையும் உடனடியாக வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளதால், அதன்படி இருவரையும் வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாய கடமை இந்தியாவுக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தாண்டு முதல் பிளஸ் 2 கணக்குப் பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இரு முறை தேர்வுகள் நடத்துவது போன்ற திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை. வினாத்தாள், விடைத்தாளை பாதுகாப்பதில் தேர்வுத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் நேர்மையாக இருப்பதால்தான், தரமான மாணவர்கள் உயர்க் கல்வியில் சேருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியின் போது பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சளாரான காகிசோ ரபாடா விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கார்பின் போஷ் சேர்க்கப்பட்டார்.
