தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்துள்ள நிலையில், முதல்முறையாக இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீக்கிய மத குருவான குரு நானக்கின் பிறந்த இடமான நான்கானா சாஹிப் நகரும், அவர் உயிரிழந்த கர்தார்பூர் நகரும் பாகிஸ்தானுக்குள் உள்ளன. அதோடு, சீக்கியர்களுக்கு நெருக்கமான பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் பாகிஸ்தானில் உள்ளன. இவற்றுக்கு சீக்கியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.குருநானக் தொடர்பான 10 நாள் விழா நான்கானா சாஹிப் நகரில் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2,100-க்கும் மேற்பட்ட சீக்கிய பக்தர்களுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் விசா வழங்கி உள்ளது. இதையடுத்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் பூக்களைத் தூவியும் பாகிஸ்தான் அதிகாரிகள் வரவேற்றனர். நான்கானா சாஹிப் நகரில் குருநானக்கிற்கு கட்டப்பட்டுள்ள சீக்கிய மத வழிபாட்டுத் தளத்தில் இவர்கள் கூட உள்ளனர். அங்கு வழிபாடு மேற்கொள்ளும்…
Author: admin
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்கியது. அக்.27-ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை இன்று (அக்.22) பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது. இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி பிரவீன் சரவணன் கூறும்போது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரி செய்ய போராடும் போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும்” என்றார்.
சென்னை: கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கு டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9,126, நவோதயா பள்ளிகளில் 5,841 என மொத்தம் 14,967 ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 13,008 பணியிடங்கள் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர், முதல்வர், துணை முதல்வர், நூலகர் பதவிகளுக்கானவை. மீதமுள்ள 1,959 பணியிடங்கள் உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர், உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), நிர்வாகப் பணியாளர், நிதி அதிகாரி, பொறியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுருக்கெழுத்தாளர் என ஆசிரியர் அல்லாத பிரிவில் வருகின்றன.
புதுடெல்லி: இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் குறைந்துள்ளதாக மாதாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறியீடு செப்டம்பரில் 60.9-ஆக இருந்த நிலையில், அக்டோபரில் 58.9-ஆக குறைந்துள்ளது.
பெரிய நகரங்களில் அமைந்துள்ள ஒரு சில முக்கிய விமான நிலையங்களை மட்டுமே நாடுகள் சார்ந்து இருப்பது வழக்கம். எவ்வாறாயினும், பெருநகர எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மகத்தான விமான வலையமைப்பைப் பராமரிப்பதன் மூலம் அமெரிக்கா உலகிலிருந்து தனித்து நிற்கிறது. 16,000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பல்வேறு நிலப்பரப்புகளில் பரவியுள்ள நிலையில், பெரிய நகரங்களை சிறிய கிராமப்புற நகரங்களுடன் இணைக்கும் அசாதாரண அளவிலான இணைப்பை நாடு உருவாக்கியுள்ளது. இந்த அளவிலான உள்கட்டமைப்பு மக்கள் எவ்வாறு பயணிக்கிறது, பொருட்கள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் கடினமான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சமூகங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை கணிசமாக வடிவமைக்கிறது. இணைப்பு மற்றும் பிராந்திய மேம்பாட்டை மேம்படுத்துவதில் பிராந்திய விமான நிலையங்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அடர்த்தியான விமான நிலைய நெட்வொர்க்குகள் பிராந்திய அணுகலை மேம்படுத்துகின்றன, பயண சமத்துவமின்மையை குறைக்கின்றன மற்றும் மேற்பரப்பு போக்குவரத்து குறைவாக இருக்கும் பொருளாதார…
பட உபயம்: Claire Diperna பென்சில்வேனியாவில் உள்ள யுனிவர்சிட்டி பூங்காவில் ஒரு அமைதியான மதிய நேரத்தில், விண்வெளி பொறியியல் மாணவி திவ்யா தியாகி (22) பல தலைமுறை காற்றியக்கவியலாளரை தோற்கடித்த சமன்பாடுகளில் புதைந்திருந்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் முன்னோடி ஹெர்மன் க்ளாவர்ட்டால் முன்வைக்கப்பட்ட புதிர், காற்றாலை விசையாழிகள் காற்றிலிருந்து ஆற்றலை எவ்வாறு பிரித்தெடுக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் மையமாக இருந்தது. தியாகி கண்டுபிடித்தது விசையாழி வடிவமைப்பில் உள்ள அடிப்படை சிக்கலைப் பார்ப்பதற்கான புதிய வழி.அவரது ஆராய்ச்சி, ‘விண்ட் எனர்ஜி சயின்ஸ்’ இல் வெளியிடப்பட்டது, பொறியாளர்களுக்கு பாதுகாப்பான, திறமையான காற்றாலைகளை உருவாக்க உதவும் சூத்திரங்களை வழங்குகிறது. “கிளாவர்ட்டின் பணி புத்திசாலித்தனமாக இருந்தது, ஆனால் அவர் ஆராயாத அம்சங்கள் இருந்தன. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்,” என்று அவள் சொல்கிறாள்.ஆரம்பகால ஆர்வம்தியாகி, கலிபோர்னியாவில் உள்ள லகுனா ஹில்ஸில், இந்தியக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்தார், மேலும் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி…
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தச் சூழலில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.
தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது.கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன.
