Author: admin

சென்னை: கேந்​திரிய வித்​யால​யா, நவோதயா பள்​ளி​களில் காலி​யாக உள்ள 14,967 பணி​யிடங்​களுக்கு டிச.4-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்டுமென அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களில் 9,126, நவோதயா பள்​ளி​களில் 5,841 என மொத்​தம் 14,967 ஆசிரியர் மற்​றும் பணி​யாளர் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. இதில் 13,008 பணி​யிடங்​கள் இடைநிலை, பட்​ட​தா​ரி, முது​நிலை ஆசிரியர், முதல்​வர், துணை முதல்​வர், நூல​கர் பதவி​களுக்​கானவை. மீத​முள்ள 1,959 பணி​யிடங்​கள் உதவி ஆணை​யர், நிர்​வாக அதி​காரி, இளநிலை உதவி​யாளர், மூத்த உதவி​யாளர், உதவி பிரிவு அலு​வலர் (ஏஎஸ்​ஓ), நிர்​வாகப் பணி​யாளர், நிதி அதி​காரி, பொறி​யாளர், மொழிபெயர்ப்​பாளர் மற்​றும் சுருக்​கெழுத்​தாளர் என ஆசிரியர் அல்​லாத பிரி​வில் வரு​கின்​றன.

Read More

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சேவை துறை வளர்ச்சி வேகம் கடந்த ஐந்து மாதங்​களில் இல்​லாத அளவுக்கு அக்​டோபரில் குறைந்​துள்​ள​தாக மாதாந்​திர ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.எச்​எஸ்​பிசி இந்​தியா சர்​வீசஸ் பிஎம்ஐ வணிக செயல்பாட்டு குறி​யீடு செப்​டம்​பரில் 60.9-ஆக இருந்த நிலை​யில், அக்​டோபரில் 58.9-ஆக குறைந்​துள்​ளது.

Read More

பெரிய நகரங்களில் அமைந்துள்ள ஒரு சில முக்கிய விமான நிலையங்களை மட்டுமே நாடுகள் சார்ந்து இருப்பது வழக்கம். எவ்வாறாயினும், பெருநகர எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மகத்தான விமான வலையமைப்பைப் பராமரிப்பதன் மூலம் அமெரிக்கா உலகிலிருந்து தனித்து நிற்கிறது. 16,000 க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் பல்வேறு நிலப்பரப்புகளில் பரவியுள்ள நிலையில், பெரிய நகரங்களை சிறிய கிராமப்புற நகரங்களுடன் இணைக்கும் அசாதாரண அளவிலான இணைப்பை நாடு உருவாக்கியுள்ளது. இந்த அளவிலான உள்கட்டமைப்பு மக்கள் எவ்வாறு பயணிக்கிறது, பொருட்கள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன மற்றும் கடினமான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சமூகங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பதை கணிசமாக வடிவமைக்கிறது. இணைப்பு மற்றும் பிராந்திய மேம்பாட்டை மேம்படுத்துவதில் பிராந்திய விமான நிலையங்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அடர்த்தியான விமான நிலைய நெட்வொர்க்குகள் பிராந்திய அணுகலை மேம்படுத்துகின்றன, பயண சமத்துவமின்மையை குறைக்கின்றன மற்றும் மேற்பரப்பு போக்குவரத்து குறைவாக இருக்கும் பொருளாதார…

Read More

பட உபயம்: Claire Diperna பென்சில்வேனியாவில் உள்ள யுனிவர்சிட்டி பூங்காவில் ஒரு அமைதியான மதிய நேரத்தில், விண்வெளி பொறியியல் மாணவி திவ்யா தியாகி (22) பல தலைமுறை காற்றியக்கவியலாளரை தோற்கடித்த சமன்பாடுகளில் புதைந்திருந்தார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் முன்னோடி ஹெர்மன் க்ளாவர்ட்டால் முன்வைக்கப்பட்ட புதிர், காற்றாலை விசையாழிகள் காற்றிலிருந்து ஆற்றலை எவ்வாறு பிரித்தெடுக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் மையமாக இருந்தது. தியாகி கண்டுபிடித்தது விசையாழி வடிவமைப்பில் உள்ள அடிப்படை சிக்கலைப் பார்ப்பதற்கான புதிய வழி.அவரது ஆராய்ச்சி, ‘விண்ட் எனர்ஜி சயின்ஸ்’ இல் வெளியிடப்பட்டது, பொறியாளர்களுக்கு பாதுகாப்பான, திறமையான காற்றாலைகளை உருவாக்க உதவும் சூத்திரங்களை வழங்குகிறது. “கிளாவர்ட்டின் பணி புத்திசாலித்தனமாக இருந்தது, ஆனால் அவர் ஆராயாத அம்சங்கள் இருந்தன. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்,” என்று அவள் சொல்கிறாள்.ஆரம்பகால ஆர்வம்தியாகி, கலிபோர்னியாவில் உள்ள லகுனா ஹில்ஸில், இந்தியக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்தார், மேலும் விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி…

Read More

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், மகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது, அதில் ஆர்ஜேடி கட்சி 25 இடங்களில் மட்டுமே வென்றது. இந்தச் சூழலில், ரகோபூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற தேஜஸ்வி யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Read More

சென்னை: தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிவிப்பில், “2026-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும். மே.8-ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும்.

Read More

தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது.கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன.

Read More

யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.34 வயதான ஜோரான் மம்தானி ஒரு சட்ட வல்லுநர். இவர் தனது தேர்தல் உரைகளில், “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயரடுக்கு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மம்தானி, அபார வெற்றி பெற்றுள்ளார். 20 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று அபார வெற்றிச் சரித்திரத்தை பதிவு செய்துள்ளார். ஜனவரி மாதம் மம்தானி நியூயார்க் மேயராக பதவியேற்பார்.

Read More

பின்பு உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்பு விரதமிருக்கும் பக்தர்களுக்கு சிவச்சாரியார்கள் காப்பு கட்டிவிட்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இவர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்தபின் தேன், சர்க்கரை கலந்த தினை மாவும், மாலையில் எலுமிச்சம் பழச்சாறு, இரவு பால் இலவசமாக வழங்கப்பட்டது.தினமும் இரவு 7 மணியளவில் விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து அருள் பாலிப்பார். தினமும் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11, மாலை 5 மணியளவில் சண்முகார்ச்சனையும் நடைபெறும்.

Read More

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தில் சாந்தவர்மன் என்ற வித்தியாசமான அரசனாக நடித்துப் பெயர் பெற்றவர் எஸ்.எஸ். சிவசூரியன். ஏமாளி ராஜாவாக அவர் வரும் அத்தனை காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. முன்னதாக, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் ஆகியோருடன் பல நாடகங்களில் நடித்திருக்கும் இவர், சர்வாதிகாரி, பூமாலை, ஆரவல்லி உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவரது கடைசிப் படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஊர்க்காவலன்’.தனது இறுதிக் காலம் வரை நாடகங்களில் நடித்து வந்த அவர் பெயரில் ‘எஸ்.எஸ்.சிவசூரியன் கலைக்கூடம்’ மற்றும் எஸ்.எஸ்.சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் இளவரசு, எழுத்தாளர் பவா செல்லதுரை, நூற்றாண்டு விழா கொண்டாடும் எஸ்.எஸ்.சிவசூரியன் மகனும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் தொடங்கி வைத்து…

Read More