லக்ஷ்மி மிட்டல் அதிக வரி செலுத்தியதற்காக இங்கிலாந்தை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஃகுத் தொழில் அதிபர் லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் வசிக்கிறார் என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, தொழிலாளர் அரசாங்கத்தின் பரம்பரை வரிதான் பணக்காரர்கள் பெருமளவில் வெளியேறியது என்று குற்றம் சாட்டியுள்ளது. அதிபர் ரேச்சல் ரீவ்ஸ் தனது வரவிருக்கும் பட்ஜெட்டில் மற்றொரு வரி உயர்வை சுமத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏப்ரல் மாதத்தில் டோம் அல்லாத நிலையை நீக்கினார். இந்த அமைப்பு இங்கிலாந்தில் வசிக்கும் செல்வந்தர்கள் நாட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு மட்டுமே வரி செலுத்த அனுமதித்தது — கடல் வருவாயிலிருந்து அல்ல. மிட்டலின் ஆலோசகர்களில் ஒருவரை மேற்கோள் காட்டி, இங்கிலாந்தில் வசிக்கும் பல செல்வந்தர்கள் உலகில் வேறு இடங்களில் உள்ள தங்கள் சொத்துக்களுக்கு ஏன் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பதில் ஒரு தீர்வில் இருப்பதாகக்…
Author: admin
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதற்கு இத்திட்டம் தடையாக இருக்காது” என வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திட்ட வரைவு அறிக்கை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) ஆகியவற்றின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. திட்ட வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்டால், தமிழ்நாடு உள்பட பாதிக்கப்பட்ட தரப்பினர் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாடு அரசின் மனு முன்கூட்டிய நடவடிக்கை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது.” என தெரிவித்தனர்.
சென்னை: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலு வலர்கள் நிர்பந்திக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக்கல்வித் துறை அளித்த விளக்கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் மீதே இத்திட்டத்தின் முழு கவனமும் பதிந்துள்ளது. முக்கியமாக எந்த ஒரு அரசு அலுவலரோ, ஆசிரியரோ எந்த நிதியையும் பெற நியமிக்கப்படவில்லை. இந்த தளத்தில் பெறப்படும் பங்களிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகும்.
தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தோகாவில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் அனுபமா ராமசந்திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்கில் ஹாங்காங்கின் ஆன் யியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் 23 வயதான சென்னையை சேர்ந்த அனுபமா, ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.
சென்னை: சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் உள்ள பரணி காலனி, சூர்யா தெருவில் ஸ்ரீ பால விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது. இதுகுறித்து இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது: 1983-ம் ஆண்டு, நானும் எனது நண்பரும் சேர்ந்து ரூ.20,000 பணத்தை வைத்து, ஒரு குடிசை அளவிலேயே விநாயகருக்கு கோயில் எழுப்பினோம். 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் பேசும்போது, “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது” என்றார்.
பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல… தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது.
சென்னை: வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் ரூ.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘மினி டைடல்’ பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே 4.98 ஏக்கர் பரப்பளவில் ரூ.32 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மினி டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேர் நேரடியாகவும், 50 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து அங்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.
லைமரன்ஸ் என்பது ஒரு தீவிரமான, தன்னிச்சையற்ற காதல் ஆவேசமாகும், இது வழக்கமான மோகத்திற்கு அப்பாற்பட்டது, ஊடுருவும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சி சார்பு கொண்ட நபர்களை உட்கொள்கிறது. மருத்துவ நோயறிதல் இல்லை என்றாலும், இந்த நிலை தினசரி வாழ்க்கையை சீர்குலைத்து, முழு உடல் அழுத்தத்தை ஏற்படுத்தும். மனித ஏக்கத்தின் வடிவத்தை சீர்குலைப்பதாக இருந்தாலும், இது முற்றிலும் நோயியலா அல்லது உருமாற்றம் உண்டா என்று ஆராய்ச்சியாளர்கள் விவாதிக்கின்றனர். நாங்கள் அனைவரும் அங்கே இருந்தோம் – காதல் உறவு முடிந்த பிறகும், அந்த நபரைப் பற்றி நினைப்பதை நிறுத்த முடியாமல் எங்கள் இதயம் உடைந்தது. ஆனால் சில சமயங்களில் இந்த ஏக்கம் சாதாரண மனவேதனைக்கு அப்பாற்பட்டது. முன்னாள் எண்ணங்கள் உங்களை நுகர ஆரம்பிக்கும். நீங்கள் அதை உணரும் முன், நீங்கள் உரையாடல்களை மீண்டும் இயக்கி, சமரசங்களை கற்பனை செய்து, தப்பிக்க முடியாத ஒரு சுழற்சியில் நழுவுவீர்கள். அது லைமரன்ஸ்.லைமரன்ஸ் என்றால் என்ன லைமரன்ஸ் என்பது தன்னிச்சையான…
