இஸ்தான்புல்: பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அவ்வப்போது போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த கட்டமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் என்று அஞ்சப்படுகிறது.
Author: admin
சென்னை: திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (நவ.14) மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அதன் பிறகும் பணி நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. சில மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை கஷ்டப்படுத்துகின்றனர். இதை உடனடியாக கைவிட வலியுறுத்தி நவம்பர் 18-ம் தேதி (இன்று) முதல் எஸ்ஐஆர் தொடர்பான படிவங்களைப் பெறுவது, இணையத்தில் பதிவேற்றம் செய்வது (Digitisation), ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது என அனைத்துப் பணிகளையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.இந்த போராட்டத்தில் அனைத்து கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர் முதல் ஆய்வாளர் வரை, அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை என அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களும் முழுமையாக பங்கேற்பார்கள். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) பணி மேற்கொள்ளும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நகராட்சி/ மாநகராட்சிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ளும் அனைத்து துறை அலுவலர் சங்கங்களையும் ஒருங்கிணைந்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் பணியாளர்களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சிக்கு சேவைகள் துறை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. எனினும் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் இன்னமும் சவால்கள் நீடித்து வருகின்றன. இது உட்கட்டமைப்பு மாற்றம் மெதுவாக நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
விரைவான ஒளியியல் மாயையுடன் உங்கள் கண்காணிப்புத் திறனை சோதிக்கவும்! 67 வினாடிகளுக்குள் மறைந்திருக்கும் 76 என்ற எண்ணைக் கண்டறிய உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன. இந்த சவால் கவனம் மற்றும் வடிவ அங்கீகாரத்தை கூர்மைப்படுத்துகிறது, உங்கள் காட்சி செயலாக்கத்தை அழுத்தத்தின் கீழ் தள்ளுகிறது. புத்திசாலித்தனமாக மாறுவேடமிட்ட 76, அதன் மாற்றப்பட்ட இலக்கங்களுடன், சிவப்பு அறுகோணங்களுக்கு மத்தியில் கீழ்-இடதுக்கு அருகில் தோன்றுகிறது. அதை விரைவில் கண்டறிவது சிறந்த மன சுறுசுறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்த தந்திரமான ஆப்டிகல் மாயை மூலம் உங்கள் மூளையை சோதிக்கவும்! 67 வினாடிகளில் மறைந்திருக்கும் 76 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க உங்களுக்கு 5 வினாடிகள் மட்டுமே உள்ளன. கூர்மையான கண்காணிப்பு திறன் மற்றும் விரைவான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே இந்த சவாலை முறியடிக்க முடியும். முதல் பார்வையில், வரிசை எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் 76 என்ற எண் புத்திசாலித்தனமாக மாறுவேடமிடப்பட்டுள்ளது, உடனடியாகக் கண்டறிவது கடினம். இந்த புதிர் உங்கள் காட்சி…
பாட்னா: உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடியை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி உள்ளதாக ஜன் சுராஜ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 243 இடங்களில் என்டிஏ 202, மெகா கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு சட்டக் கல்லூரிஇணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு, நவம்பர் 19 முதல் 24 வரை நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மும்பை: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனுமான கிரேம் ஸ்மித் பங்கேற்றார். அப்போது அவர், கூறியதாவது: துணைக் கண்ட ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன்னரே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விக்கெட்களை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை கையாள்வதற்கான உத்திகளை வகுக்கும் முயற்சியில் ஈடுபடும் என்று நான் நம்புகிறேன்.
அப்போது லாட்டரி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் இந்தியாவை சேர்ந்தவன். கடந்த 18 மாதங்களாக அபுதாபியில் பணியாற்றி வருகிறேன். அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவேன். அண்மையில் யுஏஇ லாட்டரியின் 12 டிக்கெட்டுகளை வாங்கினேன். இதில் கடைசி டிக்கெட்டை எனது அம்மாவின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து வாங்கினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.விலை உயர்ந்த காரை வாங்க திட்டமிட்டு உள்ளேன். எனது முதல் பரிசு கிடைத்ததை 7 நட்சத்திர ஓட்டலில் மிகப்பெரிய விழாவாக கொண்டாட உள்ளேன். இந்தியாவில் உள்ள என் தாய், தந்தையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து வருவேன். போதிய பணம் இருப்பதால் நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடும்பமாக வாழ்வோம். எனது தாய், தந்தைக்கு சில கனவுகள் உள்ளன.
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேரே இஸ்க் மே’. இதில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இந்தப் படம் நவ. 28-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
