புதுடெல்லி: மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தையை, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் தொடங்கி வைத்தார். டெல்லி ஹரியானா பவனில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சுமார் 50 முஸ்லிம் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல், சிறுபான்மை பிரிவு தலைவர் இந்திரேஷ் குமார், இணை செயலாளர்கள் கிருஷ்ண கோபால் மற்றும் ராம்லால் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். முஸ்லிம்கள் தரப்பில் அகில இந்திய இமாம்கள் சங்க தலைவர் உமர் அகமது இலியாஸி ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் முஸ்லிம் வக்பு மசோதா குறித்த விவாதம் நடைபெற்றது. மேலும் மதத்தின் பெயரில் வாக்கு வங்கி அரசியல், கும்பல் படுகொலை, மதக் கலவரங்களுக்கு வித்திடும் தவறான செய்திகள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும்விவாதிக்கப்பட்டன. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இலியாஸி கூறும்போது, ‘‘எங்கள் இமாம்கள் அமைப்பும்…
Author: admin
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதை தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 2-வது சுற்று கலந்தாய்வு, இணைய வழியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த சுற்று 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள கட்-ஆப் மதிப்பெண் 178.965 முதல் 143.085 வரை எடுத்துள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்ய வேண்டும். 29-ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை அவர்கள் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 31-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம் விளாசும் முயற்சியில் ஈடுபடலாம். இந்நிலையில்தான் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 500+ ரன்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2015-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 572 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.…
2017ஆம் ஆண்டு வெளியான ‘வல்ல தேசம்’ படத்தை இயக்கியவர் என்.டி. நந்தா. இவர் தற்போது முழுக்க முழுக்க ஏஐ மூலம் ஒரு முழு இசை வீடியோ ஆல்பம் பாடலை, உருவாக்கி கவனம் ஈர்த்திருக்கிறார். இப்பாடலுக்கு இவரே இசையமைக்கவும் செய்திருக்கிறார். லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் என்.டி. நந்தா கல்வி பயின்றுள்ளார். தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளார். ‘என் உயிரின் ஓசை நீயே’ என்று தொடங்கும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை பேசுகிறது. இப்பாடல் ‘யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்’ எனும் பெயரில் சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி…
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள். சத்யா பன்னீர்செல்வம் 2016-ல் பண்ருட்டி எம்எல்ஏ-வாக தேர்வான நாளில் இருந்தே அவருக்கும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. மணல் பிரச்சினையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மல்லுக்கட்டாக மாறியதால் 2021 ஏப்ரலில் சத்யா பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்தே நீக்கினார் இபிஎஸ். அப்போதே, “எம்.சி.சம்பத், (சிதம்பரம்) எம்எல்ஏ-வான பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோரை நான் வணங்கும் சிவனும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது” என சாபம் விட்டார் சத்யா பன்னீர்செல்வம். இந்த நிலையில், 2021-ல் பண்ருட்டி தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது.…
டெல்லியில் உள்ள ஆடை வாரத்தில் ஃபால்குனி ஷேன் மயக்கத்திற்கான ஷோஸ்டாப்பரை திருப்பி, அக்ஷய் குமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுபாதையில் பெரும் திரும்பினார். அவர் ஒரு தந்த ஷெர்வானி தொகுப்பைக் காண்பித்தார், சிக்கலான பட்டு எம்பிராய்டரி மற்றும் தங்க விவரங்களுடன் அரச நேர்த்தியை வெளிப்படுத்தினார். 12 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஓடுபாதை மறுபிரவேசம் செய்தவர் யார்? அக்ஷய் குமாரைத் தவிர வேறு யாரும் இல்லை, அவர் நடக்கவில்லை, அவர் அதை வைத்திருந்தார். ஜூலை 25 அன்று, பாலிவுட் நட்சத்திரம் டெல்லியில் 2025 ஆம் ஆண்டில் ஹூண்டாய் இந்தியா கோச்சர் வாரத்தில் டிசைனர் டியோ பால்குனி ஷேன் மயில் நிகழ்ச்சிக்காக ஷோஸ்டாப்பரை மாற்றியது, நேர்மையாக, இது ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு அரச மறுபிரவேசம் போல் உணர்ந்தது.நேர்த்தியையும் பழைய பள்ளி அழகையும் கத்திக் கொண்ட ஒரு தந்த ஷெர்வானி செட்டில் வளைவைக் குறைத்தபோது அக்ஷய் ஒரு மொத்த தேசி இளவரசர் போல தோற்றமளித்தார். ஷெர்வானி…
புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை ஐசிஎப்-ல் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம் வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும். ஜீரோ கார்பன் உமிழ்வு நிலையை அடைய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் போக்குவரத்தில் முதன்மையாக உள்ள ரயில்வேயில் ஹைட்ரஜன் இன்ஜினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அந்த இலக்கை நாம் விரைவாக அடைய முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய ரயில்வே…
கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ல் வெளியாகி வெற்றி பெற்றபடம், ‘அந்த 7 நாட்கள்’. அதே தலைப்பை இப்போது புதிய படத்துக்கு வைத்துள்ளனர். காதல் – த்ரில்லர் படமான இதில் அஜித் தேஜ், ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய்உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.சுந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார். கோபிநாத் துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் முரளிக பீர்தாஸ் தயாரித்துள்ளார். “இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டார். சென்னை, கொடைக் கானலில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது” என்றது படக்குழு.
சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமதாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார். ‘உரிமை மீட்க… தலைமுறை காக்க’ என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி. முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிலையில், ராமதாஸ் அளித்த…
பல தசாப்தங்களாக, விஞ்ஞானிகள் பிரபஞ்சம் என்றென்றும் விரிவடையும் என்று நம்பினர், இருண்ட ஆற்றல் எனப்படும் ஒரு மர்மமான சக்தியால் முடிவில்லாமல் வெளிப்புறமாக இயக்கப்படும். ஆனால் ஒரு புதிய ஆய்வு ஒரு ஆத்திரமூட்டும் யோசனையுடன் அந்தக் காட்சியை உயர்த்தியுள்ளது: காஸ்மோஸ் ஒரு நாள் விரிவடைவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக “பெரிய நெருக்கடி” என்று அழைக்கப்படும் ஒரு பேரழிவு நிகழ்வில் தன்னைத்தானே வீழ்த்தலாம். தற்போது முன்கூட்டியே மற்றும் பியர் மதிப்பாய்வுக்காக காத்திருக்கும் இந்த ஆராய்ச்சியின் படி, இந்த தலைகீழ் சுமார் 20 பில்லியன் ஆண்டுகளில் நிகழக்கூடும். புதிய மாதிரிகள் மற்றும் புதிய வானியல் தரவுகளின் அடிப்படையில், விஞ்ஞானிகள் நமக்குத் தெரிந்த எல்லாவற்றின் தலைவிதியை மறுபரிசீலனை செய்கிறார்கள்.பிரபஞ்சம் என்றென்றும் விரிவடையாதுபிரபஞ்சத்தின் தலைவிதியின் பாரம்பரிய மாதிரி இருண்ட ஆற்றல் நிலையானது மற்றும் நேர்மறையானது என்ற அனுமானத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது, இது காலப்போக்கில் விண்மீன் திரள்களை வேகமாகத் தள்ளும் ஒரு சக்தி. ஆனால் டார்க் எனர்ஜி சர்வே (டிஇஎஸ்)…