Author: admin

மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் குழுவை சிபிஎஸ்இ அமைத்தது. இதுகுறித்து மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலர் சஞ்சய் குமார் நேற்று கூறும்போது, ‘‘நம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தில் செயற்கை நுண்ணறிவு கல்வியை அடிப்படை திறனாக கருதவேண்டும். இதை முன்னிட்டு ஏஐ தொடர்பான பாடத்தை பள்ளிகளில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தேசிய கல்வி திட்டத்துடன் தொடர்புள்ளதாக மாற்றப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இது வழிவகுக்கும்’’என்றார்.இதன்படி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ம் வகுப்பில் இருந்தே ஏஐ மற்றும் சிடி பாடங்கள் சேர்க்கப்படும். இதன்மூலம் தீவிர சிந்தனை, படைப்பாக்கம், செயற்கை நுண்ணறிவை சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்க முடியும். இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த…

Read More

141 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 15.4 ஓவர்​களில் 2 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. டிம் ராபின்​சன் 24 பந்துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ரச்​சின் ரவீந்​திரா 16 பந்​தில் 21 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். டேவன் கான்வே 47 ரன்​களும், மார்க் சாப்​மேன் 21 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்றது.

Read More

சான்​பி​ரான்​சிஸ்கோ: இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் நேற்று முன்​தினம் முடிவடைந்​தது. இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார். இந்த பரிசோதனை டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் துணைத் தலை​வ​ராக பெங்​களூரைச் சேர்ந்த டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி​யும் பணி​யாற்​றினர்.இந்த பரிசோதனை​யில் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட் ‘சுப்​ராப்​ளக்ஸ் க்ரஸ்’ மற்​றும் சர்​வ​தேச சந்​தை​யில் கிடைக்​கும் அமெரிக்க தயாரிப்பு ‘ஜீயன்​ஸ்’ இதய ஸ்டெண்ட்​டும் தீவிர​மாக ஒப்​பிடப்​பட்​டது. அப்​போது டாக்​டர் கவுல் கூறிய​தாவது:

Read More

தற்போதைய மேல்சாந்திகளின் பணிக்காலம் முடிவடைந்ததால், புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது. ஐயப்பன் கோயிலுக்கு 14 பேரும், மாளிகைப்புரத்தம்மன் கோயிலுக்கு 13 பேரும் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பெயர்களை எழுதி, வெள்ளிக்குடத்தில் போட்டனர். பின்னர், பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் இருவர் குடவோலை முறையில் மேல்சாந்திகளை தேர்வு செய்தனர்.ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரியும், மாளிகைப்புரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ், தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Read More

சென்னை: தமிழகம் உள்​ளிட்ட 12 மாநிலங்​களில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​கள் தொடர்​பாக மாநில நிர்​வாகி​களு​டன் அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே டெல்​லி​யில் இன்று ஆலோ​சனை நடத்​துகிறார். பிஹார் தேர்​தலில் காங்​கிரஸ் கூட்​டணி படு​தோல்வி அடைந்​துள்​ளது. இந்​நிலை​யில், நாடு முழு​வதும் காங்​கிரஸின் செயல்​பாடு மற்​றும் 2026-ல் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்ள தமிழகம், புதுச்​சேரி​யில் தேர்​தல் தயார் நிலை குறித்து காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில், பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், தமிழக பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் ஆகியோ​ருடன் நேற்று முன்​தினம் டெல்​லி​யில் ஆலோ​சனை நடை​பெற்​றது.

Read More

மும்பை: அன்​னிய முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து மூன்று மாதங்​களாக ரூ.77,000 கோடி மதிப்​பிலான முதலீட்டை இந்​திய பங்​குச் சந்​தையி​லிருந்து திரும்ப பெற்ற நிலை​யில், கடந்த அக்​டோபரில் ரூ.14,610 கோடியை அவர்​கள் முதலீடு செய்​துள்​ளனர். பாரின் போர்ட்​போலியோ இன்​வெஸ்​டார் (எப்​பிஐ) எனும் அன்​னிய முதலீட்​டாளர்​கள் பல்​வேறு காரணங்​களால் இந்​திய பங்​குச் சந்​தை​யில் இருந்து கடந்த மூன்று மாதங்​களாக கணிச​மான அளவில் முதலீட்டை திரும்ப பெற்​றனர். அதன்​படி, ஜூலை​யில் ரூ.17,700 கோடி, ஆகஸ்​டில் ரூ.34,990 கோடி, செப்​டம்​பரில் ரூ.23,885 கோடி என ரூ.77,000 கோடி மதிப்​பிலான தொகையை எப்​பிஐ வெளியே எடுத்​தனர். இந்த நிலை​யில், கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் செயல்​பாடு ஊக்​கம்​பெற்று வரு​வாய் அதி​கரிப்பு, அமெரிக்க மத்​திய வங்கி வட்டி விகித குறைப்பு எதிர்​பார்ப்பு மற்​றும் அமெரிக்​கா-இந்​தியா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​படிக்கை கையெழுத்​தாகும் என்ற நம்​பிக்கை ஆகியவை வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

Read More

இதய நோய் இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாகத் தொடர்கிறது, மேலும் புதிய கண்டுபிடிப்புகள் மக்கள்தொகை முழுவதும் ஆபத்து சமமாக விநியோகிக்கப்படாமல் இருக்கலாம் என்று கூறுகின்றன. பெங்களூருவை தளமாகக் கொண்ட சமீபத்திய விசாரணையானது, சில குழுக்களுக்கு தீவிரமான இதய நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிக அளவில் ஏற்படுத்தக்கூடிய மரபணு மற்றும் பிராந்திய வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. தென்னிந்தியா அல்லது வட இந்தியர்கள் ஆபத்தான இதய நோய்களுக்கு அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்களா என்பது பற்றிய முக்கிய விவாதத்தை இந்த ஆய்வு தூண்டியுள்ளது, நீண்டகால அனுமானங்களை சவால் செய்கிறது மற்றும் ஸ்கிரீனிங் மற்றும் தடுப்பு பற்றிய அவசர கேள்விகளை எழுப்புகிறது. பூர்வீகம், புவியியல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இதய ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பு மற்றும் அதிக உயிர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் நாடு தழுவிய தடுப்பு உத்திகளுக்கு அவசியமாகிறது.இந்தியாவில் இருதய நோய் அபாய காரணிகளில் உள்ள பிராந்திய…

Read More

கொல்கத்தா: ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் மம்தா பானர்ஜி முதல்​வ​ராக பொறுப்பு வகிக்​கிறார். இவரது கட்​சி​யின் எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி. அவ்​வப்​போது ஏதாவது கருத்​துகளை தெரி​வித்து சர்ச்​சை​யில் சிக்கி வரு​கிறார்.

Read More

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜெஇஇ மெயின் தேர்வுக்கு நவ.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-1-ம், பி.ஆர்க், பி.பிளானிங் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு தாள்-2-ம் தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படுகின்றன. இந்த நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல் என இரு முறை நடத்தப்படும்.

Read More