சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமாவளவனின் 63-வது பிறந்தநாளை சென்னை, காமராஜர் அரங்கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விழா நடைபெறவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசைப்பாய்ச்சல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ‘மதச்சார் பின்மை காப்போம்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார். வாழ்த்தரங்கம் இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…
Author: admin
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உயிரிழந்த மற்றும் நிரந்தரமாக புலம்பெயர்ந்த 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மாலா பாக்சி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பிஹார் வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அப்படியானால் இந்த தகவல் பூத் மட்டத்தில் தெரிவிக்காதது ஏன்? எனவே, நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர் மற்றும் அவர்களை…
மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருதரப்பையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ரவி காய் குடும்பம் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் பிராண்டான புரூக்ளின் க்ரீமரியின் குறிப்பிடத்தக்க உரிமையைக் கொண்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ள சானியா சந்தோக், கால்நடை தொழில்நுட்பத்தில் பட்டயப்…
சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…
சென்னை:உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலி்ன்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி…
டாக்டர் வில்லியம் லி புற்றுநோய் தடுப்பில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார், சில உணவுகள் புற்றுநோய் உயிரணுக்களை பட்டினி கிடக்கும் என்பதை வலியுறுத்துகிறது. காபி, தேநீர், பிராசிகா காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த கடல் உணவு ஆகியவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த வழங்கல் வெட்டும் பண்புகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த உணவுகளை உணவில் இணைப்பது பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது, இது ஆறு இறப்புகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், WHO கூறுகிறது, 30% மற்றும் 50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுகளை சாப்பிடுவதாகும்.…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) தெலுங்கு மொழித் துறையில் 4 பேராசிரியர்கள் பணியாற்றினர். அவர்களில் 2 பேர் ஓய்வு பெற்றதால் மற்ற 2 பேராசிரியர்களில் ஒருவர், 3 ஆண்டுக்கு துறைத் தலைவராகத் தொடர்ந்துள்ளார். தற்போதைய தலைவர் பேராசிரியர் சி.எஸ்.ராமச்சந்திர மூர்த்தி விடுப்பு எடுத்ததால் சக பேராசிரியர் பி.வெங்கடேஸ்வரலுதுறைத் தலைவராக இருப்பார். இந்நிலையில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்தில் பணி முடித்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ராமச்சந்திர மூர்த்தி. அப்போது அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கைகள் மற்றும் ஒரு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். புகாரின் அடிப்படையில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணையர் டி.சரவணன் தலைமையில் விசாரணை நடந்தது. இதில், சக பேராசிரியர் வெங்கடேஸ்வரலு கூறியபடி அவரது 2 முன்னாள் மாணவர்கள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அதற்காக, உள்ளூர் ரவுடிகள்…
சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் சிறுவர் பிரிவில் 27 அணிகளும், சிறுமியர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின. இதில் ஆடவர் இறுதிப் போட்டியில் பெரம்பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்கில் முகப்பேர் வேலம்மாள் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது இடத்தை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியும் பெற்றன. சிறுமியர் பிரிவில் புரசைவாக்கம் டிஇஎல்சி மெக்டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்கில் நுங்கம்பாக்கம் வித்யோதயா மெட்ரிக் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்நிலைப் பள்ளியும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியும் கைப்பற்றின. பரிசளிப்பு வழாவில் தமிழ்நாடு…
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகள், 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரம்: சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்பாளர் பூரணி, திருநெல்வேலி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, காவல் ஆய்வாளர் உலகராணி, சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் லதா, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் குமார், தஞ்சாவூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு…
புதுடெல்லி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள்…