Author: admin

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாளை சென்​னை, காம​ராஜர் அரங்​கில் ஆக.16-ம் தேதி (நாளை) கொண்​டாட ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆக.16-ம் தேதி மாலை 4 மணி முதல் நள்​ளிரவு 12 மணி வரை விழா நடை​பெறவுள்​ளது. அதன்​படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழு​வினரின் இசைப்​பாய்ச்​சல் நிகழ்ச்​சி​யும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழு​வினரின் நடன நிகழ்ச்​சி​யும் நடை​பெறுகிறது. அதைத் தொடர்ந்​து, ‘மதச்​சார் ​பின்மை காப்​போம்’ தலைப்​பில் கவியரங்​கம் நடை​பெறும். இதில் இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ், கவிஞர் விவே​கா, ஆண்​டாள் பிரியதர்​ஷினி, இளைய கம்​பன், தஞ்சை இனியன், அருண் பார​தி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். விசிக துணை பொதுச்​செய​லா​ளர் வன்​னியரசு வரவேற்​புரை​யாற்​றுகிறார். வாழ்த்​தரங்​கம் இரவு 11 மணிக்​குத் தொடங்​கு​கிறது. இதில், மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வர் கமல்​ஹாசன்…

Read More

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதன்​படி, கடந்த 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில் உயி​ரிழந்த மற்​றும் நிரந்​தர​மாக புலம்​பெயர்ந்த 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளன. தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த நடவடிக்​கையை எதிர்த்து காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள், ஏடிஆர் தொண்டு நிறு​வனம் உட்பட பல்​வேறு தரப்​பினர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 11 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சூர்ய காந்த் மற்​றும் ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறிய​தாவது: பிஹார் வாக்​காளர் பட்​டியலில் 65 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ளது. இதில் 22 லட்​சம் பேர் இறந்​து​விட்​ட​தாக தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. அப்​படி​யா​னால் இந்த தகவல் பூத் மட்​டத்​தில் தெரிவிக்​காதது ஏன்? எனவே, நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் பெயர் மற்​றும் அவர்​களை…

Read More

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 25 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2021 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முதல்தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக 2022-ம் ஆண்டு அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர், முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்கிற்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருதரப்பையும் சேர்ந்த மிகவும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். ரவி காய் குடும்பம் ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் மற்றும் ஐஸ்கிரீம் பிராண்டான புரூக்ளின் க்ரீமரியின் குறிப்பிடத்தக்க உரிமையைக் கொண்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றுள்ள சானியா சந்தோக், கால்நடை தொழில்நுட்பத்தில் பட்டயப்…

Read More

சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை. ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல்…

Read More

சென்னை:உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ‘உங்​களு​டன் ஸ்டா​லி்ன்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தவும், இந்த தி்ட்டங்கள் தொடர்பான அரசின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் போன்ற திமுக சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் தடை கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன், வழக்கறிஞர் எம்.சத்யகுமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் மற்​றும் திமுக மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதே கோரிக்​கை​யுடன் வழக்கு தொடர்ந்த அதி​முக எம்​.பி…

Read More

டாக்டர் வில்லியம் லி புற்றுநோய் தடுப்பில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார், சில உணவுகள் புற்றுநோய் உயிரணுக்களை பட்டினி கிடக்கும் என்பதை வலியுறுத்துகிறது. காபி, தேநீர், பிராசிகா காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஒமேகா -3 நிறைந்த கடல் உணவு ஆகியவை அவற்றின் அழற்சி எதிர்ப்பு மற்றும் இரத்த வழங்கல் வெட்டும் பண்புகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த உணவுகளை உணவில் இணைப்பது பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். உலகளவில் மரணத்திற்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். 2020 ஆம் ஆண்டில், புற்றுநோய் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்தது, இது ஆறு இறப்புகளில் ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல காரணிகள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், WHO கூறுகிறது, 30% மற்றும் 50% புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறை மாற்றம், சரியான உணவுகளை சாப்பிடுவதாகும்.…

Read More

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்தில் (பிஎச்​யூ) தெலுங்கு மொழித் துறை​யில் 4 பேராசிரியர்​கள் பணி​யாற்​றினர். அவர்​களில் 2 பேர் ஓய்வு பெற்​ற​தால் மற்ற 2 பேராசிரியர்​களில் ஒரு​வர், 3 ஆண்​டுக்கு துறைத் தலை​வ​ராகத் தொடர்ந்​துள்​ளார். தற்​போதைய தலை​வர் பேராசிரியர் சி.எஸ்​.​ராமச்​சந்​திர மூர்த்தி விடுப்பு எடுத்​த​தால் சக பேராசிரியர் பி.வெங்​கடேஸ்​வரலுதுறைத் தலை​வ​ராக இருப்​பார். இந்​நிலை​யில், கடந்த ஜுலை 28-ம் தேதி பிஎச்யூ வளாகத்​தில் பணி முடித்து இரு சக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார் ராமச்​சந்​திர மூர்த்​தி. அப்​போது அவர் மீது கடுமை​யான தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் கைகள் மற்​றும் ஒரு காலில் முறிவு ஏற்​பட்டு படு​கா​யம் அடைந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வாராணசி மாநகர காவல் துறை துணை ஆணை​யர் டி.சர​வணன் தலை​மை​யில் விசா​ரணை நடந்​தது. இதில், சக பேராசிரியர் வெங்​கடேஸ்​வரலு கூறியபடி அவரது 2 முன்​னாள் மாணவர்​கள் தாக்​குதல் நடத்​தி​யது தெரிய வந்​தது. அதற்​காக, உள்​ளூர் ரவுடிகள்…

Read More

சென்னை: ​சான் அகாட​மி​யின் 7-வது சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான வாலி​பால் போட்டி சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது. 3 நாட்​கள் நடை​பெற்ற இந்​த தொடரில் சிறு​வர் பிரி​வில் 27 அணி​களும், சிறுமியர் பிரி​வில் 16 அணி​களும் கலந்து கொண்டு விளை​யாடின. இதில் ஆடவர் இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான் போஸ்கோ 20-25, 25-23, 25-23 என்ற செட் கணக்​கில் முகப்​பேர் வேலம்​மாள் அணியை தோற்​கடித்து சாம்​பியன் பட்​டம் வென்​றது. 3-வது இடத்தை மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்​கிலோ இந்​தி​யன் பள்​ளி​யும், 4-வது இடத்தை ராயபுரம் செயின்ட் பீட்​டர்ஸ் அணி​யும் பெற்​றன. சிறுமியர் பிரி​வில் புரசை​வாக்​கம் டிஇஎல்சி மெக்​டலின் 25-18, 25-7 என்ற செட்கணக்​கில் நுங்​கம்​பாக்​கம் வித்​யோதயா மெட்​ரிக் அணியை வீழ்த்தி சாம்​பியன் ஆனது. 3-வது இடத்தை சென்னை மேல்​நிலைப் பள்​ளி​யும், 4-வது இடத்தை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்​ளி​யும் கைப்​பற்​றின. பரிசளிப்பு வழா​வில் தமிழ்​நாடு…

Read More

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: புலன் விசா​ரணைப் பணி​யில் மிகச் சிறப்பாக பணி​யாற்​றியதை அங்​கீகரிக்​கும் வகை​யிலும், பணி​யில் ஈடு​பாடு மற்​றும் அர்ப்​பணிப்​புடன் பணிபுரிந்​ததை பாராட்டும் வகை​யிலும் 10 காவல் ​துறை அதி​காரி​கள், 2025-ம் ஆண்டு சுதந்​திர தினத்தை முன்​னிட்​டு, தமிழக முதல்​வரின் காவல் புலன் விசா​ரணைக்​கான சிறப்​புப் பணிப் பதக்​கங்​கள் வழங்க தேர்ந்​தெடுக்​கப்பட்​டுள்​ளனர். அவர்​களின் பெயர் விபரம்: சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, சைபர் கிரைம் செல் பிரிவு, காவல் துணை கண் காணிப்​பாளர் பூரணி, திருநெல்​வேலி குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, காவல் ஆய்​வாளர் உலக​ராணி, சென்னை குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்​வுத் துறை, கடத்​தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்​வாளர் லதா, சேலம் மாவட்​டம் மகுடஞ்​சாவடி காவல் நிலைய காவல் ஆய்​வாளர் செந்​தில் குமார், தஞ்​சாவூர் குற்​றப்​பிரிவு குற்​றப்​புல​னாய்வு…

Read More

புதுடெல்லி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள்…

Read More