அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல உள்ளேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவுக்கு வர உள்ளார். தைவான் விவகாரம் குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால், உக்ரைன் குறித்து அதிகம் பேசினோம். இந்த விவகாரத்தில் இருவரும் இணைந்து செயல்படுவோம். மிகவும் மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது பற்றி என்விடியா நிறுவன அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். சீனாவுடன் மிக விரைவில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதில் எங்களுக்கு பெரிய தடைகள் எதுவும் இல்லை. இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இந்த சந்திப்பின்போது வர்த்தக பதற்றங்களை தணிக்க உதவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிக்டாக் உரிமை குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. டிக்டாக் தொடர்பான பிரச்சினைகளை முறையாக தீர்க்க அமெரிக்காவுடன் சீனா இணைந்து செயல்படும் என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Author: admin
இலை பச்சை காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கீரை, கோஸ், மேத்தி (வெந்தய இலைகள்), மற்றும் அமராந்த் போன்ற இலை கீரைகள் இயற்கையாகவே கார்போஹைட்ரேட் குறைவாகவும், நார்ச்சத்து, மெக்னீசியம், பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாகவும் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் குளுக்கோஸ் உறிஞ்சுதலை மெதுவாக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன, இவை அனைத்தும் உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க பங்களிக்கின்றன. உணவில் சேர்க்க வேண்டிய குறிப்புகள்:பருப்பு, சப்ஜி அல்லது ரொட்டியுடன் கீரை, அமராந்த் அல்லது மேத்தியைச் சேர்க்கவும்.ஒரு கைப்பிடி கீரை அல்லது காலேவை மிருதுவாக்கிகள் அல்லது சூப்களில் கலக்கவும். ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க எலுமிச்சை மற்றும் விதைகளுடன் கலவையான கீரைகளை சாலட்களில் பயன்படுத்தவும்.
சியாட்டிலில் ஐடி தொழிற்சங்க ஊழியர்களின் கூட்டத்தில் ஒரு பேச்சாளர், குடியேற்றப் பிரச்சினையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பு** உதைக்க வலியுறுத்தும் ஒரு தேதியிடப்படாத வீடியோ, இந்திய தொழில்நுட்ப கார்டெல் “அமெரிக்க அதிபரை வெளிப்படையாக மிரட்டி, மூலைக்கு தள்ளுகிறது” என்று MAGA புகார் கூறியது. வீடியோ சரிபார்க்கப்படவில்லை மற்றும் சந்திப்பு எப்போது நடந்தது என்பது தெரியவில்லை. “டொனால்ட் டிரம்பின் பு** உதை, அவரது ஒரு** உதை. உண்மையாக,” பேச்சாளர் ஒரு பெரிய சுற்று கரகோஷம். பின்னர் சபாநாயகர், டொனால்ட் டிரம்ப் தனது மூன்று மனைவிகளில் இருவர் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால், குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கும்போது எப்போதும் ஆச்சரியமாக இருப்பதாக கூறினார். “எந்தவொரு மனிதனும் செய்ய விரும்பாத அனைத்து கடினமான வேலைகளையும் புலம்பெயர்ந்தோர் செய்கிறார்கள் என்று அவர்கள் செய்யும் நகைச்சுவை உங்களுக்குத் தெரியும். வேறு எந்த அமெரிக்கரும் அவருடன் இருக்க விரும்ப மாட்டார்கள் என்று அவரைத் திருமணம் செய்து கொண்ட அவரது ஏழை மனைவிகளைப்…
போபால்: ம.பி.யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்லானி காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் யாதவ் (21) என்பவரை கைது செய்தனர்.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நவ.2-ம் தேதி முதல் நடக்கவுள்ளது. 2026-ம் ஆண்டு்க்கான போட்டித் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.‌ இதற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது. திறமைமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் இந்த பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.
சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பார்ரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 92.2 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பார்ரி மெக்கார்த்தி 31, மேத்யூ ஹம்ப்ரிஸ் 0 ரன்களில் வெளியேறினர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடி நேற்று தகைச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஜப்பான் புதிய பிரதமர் சனே தகைச்சியுடன் தொலைபேசியில் உரையாடினேன். அவர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பான தொலைநோக்கு பார்வை குறித்து ஆலோசித்தோம். உலக அளவில் அமைதி, ஸ்திரத்தன்மை, மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கு இந்தியா – ஜப்பான் இடையே வலுவான உறவு முக்கியம் என்பதை ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காடா நடராஜ், நிரிக் ஷா ஷெட்டி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா, கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘கரிகாடன்’. இதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். அதிஷய் ஜெயின் மற்றும் ஷஷாங்க் சேஷகிரி இசை அமைத்துள்ளனர்.ஜீவன் கவுடா ஒளிப்பதிவு செய் துள்ள இப்படத்தை, ரித்தி என்டர் டெயின்மென்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். ஆக் ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த பரபரப்பான திரைப்படமான இதை இணைத் தயாரிப்பு செய்திருக்கிறார் ரவிக்குமார் எஸ்.ஆர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி வழக்குத் தாக்கல் செய்திருக் கிறது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆறு ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை என்ற காரணத்துக்காக நாடு முழுவதும் 474 கட்சிகளின் பதிவை கடந்த செப்டம்பர் 19-ம்தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியாவில் செயல் பட்டு வரும் டிபி வேர்ல்டு ஏற்கெனவே 3 பில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், கூடுதலாக 5 பில் லியன் டாலரை உள்கட்டமைப் பில் முதலீடு செய்கிறது. இதன் மூலம், இந்தியா வில் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வலுப்படும் என் பதுடன், உலகளாவிய வர்த் தகத்தில் இந்தியாவின் போட் டித்தன்மை அதிகரிக்கும்.இந்தியாவின் வளர்ச்சியில் கடந்த மூன்று தசாப்தங்களாக டிபிவேர்ல்டு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த நிலை யில், இந்த புதிய உத்திசார்ந்த முதலீடு கூட்டாண்மை நிறு வனங்களுடன் இணைந்து இந்தி யாவின் கடல்சார் மற்றும் தள வாட துறையை உலகளாவிய வர்த்தகத்தில் மேம்படுத்தும். இவ்வாறு சுல்தான் அகமது தெரிவித்தார்.
