பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. சித்தராமையா முதல்வராகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் ஹுசேன், “சித்தராமையாவின் ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது.…
Author: admin
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருப்புவனம் கொடூர சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்புவனம் கொடூர நிகழ்வு பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். விரைந்து கைதும் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு, அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாதவை. இன்று அதை நிறைவேற்றிக் காட்டியுள்ளார்…
அதை எப்படி செய்வது:முழங்கால்கள் இடுப்பு அகலத்துடன் உங்கள் பாயில் மண்டியிடவும்.ஆதரவுக்காக உங்கள் கைகளை உங்கள் கீழ் முதுகில் வைக்கவும்.மெதுவாக உங்கள் முதுகில் வளைந்து, உங்கள் கைகளை உங்கள் குதிகால் அடைகிறது.உங்கள் தலையை மெதுவாக பின்னோக்கி சாய்த்து, உங்கள் மார்பைத் திறக்கவும்.ஆழமாக சுவாசிக்கும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை வைத்திருங்கள்.மெதுவாக மீண்டும் தொடக்க நிலைக்கு வாருங்கள்.இது எவ்வாறு உதவுகிறதுஒட்டக போஸ் உங்கள் கழுத்தில் அமைந்துள்ள தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளைத் தூண்டுகிறது. இந்த சுரப்பிகள் வளர்சிதை மாற்றம் மற்றும் கால்சியம் அளவைக் கட்டுப்படுத்துகின்றன, அவை ஹார்மோன் சமநிலைக்கு முக்கியமாகும். ஆழமான நீளம் கழுத்து மற்றும் முதுகில் பதற்றத்தை நீக்குகிறது மற்றும் நாளமில்லா அமைப்புக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த போஸ் மாதவிடாய் பிடிப்புகளை எளிதாக்குகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும், இது பெரும்பாலும் ஹார்மோன் அளவை சீர்குலைக்கிறது.
புதுடெல்லி: வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்டும் இதேபோல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காவடி யாத்திரை செல்லும் பாதைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டே யஷ்வீர் மஹராஜ் என்ற துறவி கோரிக்கை விடுத்திருந்தார். இவர் ‘‘யோகா சாதனா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்நகரில் நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி…
புதுடெல்லி: கானா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தையொட்டி பிரிக்ஸ் மாநாட்டிலும் அவர் பங்கேற்றுப் பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஜூலை 9-ம் தேதி வரை அவர் 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். முதலாவதாக நேற்று மாலை அவர் கானா சென்றடைந்தார். டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: முதலில் ஆப்பிரிக்காவின் மதிப்புமிக்க நட்பு நாடும், உலகளாவிய தெற்கின் முக்கிய பங்காளியுமான கானா நாட்டுக்குச் சென்றடைவேன். அங்கு அதிபர் ஜான் டிராமணி மகாமாவுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, பல்வேறு துறைகளில் இந்தியா-கானா…
சென்னை: சென்னையில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்க மூலதன நிதியின் கீழ் ரூ.19.44 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவொற்றியூர் – டி.பி.பி.சாலை, மணலி – செட்டிமேடு, மாதவரம் – சிஎம்டிஏ லாரி முனையம், தண்டையார்பேட்டை – செல்லவாயல், ராயபுரம் – பேசின் பாலச் சாலை மற்றும் மூர்மார்க்கெட், அண்ணாநகர் – செனாய் நகர், தேனாம்பேட்டை – பீட்டர்ஸ் சாலை, கோடம்பாக்கம் – காந்தி நகர், வளசரவாக்கம் – நொளம்பூர், யூனியன் சாலை, ஆலந்தூர் – பி.வி.நகர், பெருங்குடி – வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு மற்றும் தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலை, சோழிங்கநல்லூர் -…
புதுடெல்லி: நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மூலம் மற்றொரு நிவாரணத்தை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அதன்படி 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்கு வது அல்லது தற்போது 12 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகும் பல பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பெரிதும் பலனளிக்கும். குறிப்பாக, பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர் கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 விலை கொண்ட ஆயத்த…
டிடாக்ஸ் என்ற சொல் கடத்தப்பட்டது. எந்தவொரு ஆரோக்கிய கடையிலும் நடந்து செல்லுங்கள் அல்லது இன்ஸ்டாகிராம் வழியாக உருட்டவும், யாரோ ஒரு பிரகாசமான பச்சை சாறு, ஒரு போதைப்பொருள் தேநீர் அல்லது “உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்துவதாக” உறுதியளிக்கும் ஒரு விலையுயர்ந்த சப்ளிமெண்ட் ஆகியவற்றைக் காண்பீர்கள்.”இது உங்கள் கல்லீரல் ஒரு அடைபட்ட வடிகால் பைப் போல சந்தைப்படுத்தப்படுகிறது, மேலும் உங்களுக்கு தேவையானது அதை சுத்தமாக பறிக்க செலரி சாறு மட்டுமே.ஆனால் இங்கே உண்மை: உங்கள் கல்லீரலுக்கு அதன் வேலையைச் செய்ய நவநாகரீக போஷன்கள் அல்லது செயலிழப்பு உணவுகள் தேவையில்லை. இது ஏற்கனவே உங்கள் உடலில் மிகவும் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்றாகும்-உங்கள் இரத்தத்தை வடிகட்டுதல், கொழுப்புகளை வளர்சிதைமாக்குதல், ஆல்கஹால் உடைத்தல் மற்றும் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு செயல்பாடுகளை நிர்வகித்தல். உங்களுக்கு மருத்துவ நிலை இல்லையென்றால், அதற்கு போதைப்பொருள் தேவையில்லை. அதற்குத் தேவையானது ஆதரவு -குறைவான சுமை, அதிக சமநிலை மற்றும் சுகாதார அமுதங்களாக…
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 33 பேர் காயத்துடன் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக சிகாச்சி தொழிற்சாலை செயலாளர் விவேக் தெரிவித்துள்ளார். இந்த விபத்து ரியாக்டர் வெடித்ததால் இல்லை. நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் என்று விவேக் கூறியுள்ளார். இதையடுத்து விபத்து குறித்து தலைமை ரசாயன நிபுணர் பிரதாப் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ரசாயன நிபுணர் சூர்ய நாராயணா, பூனாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சந்தோஷ் கோகே ஆகிய 3 பேரை தெலங்கானா அரசு விசாரணைக்காக நியமனம் செய்துள்ளது. மேலும் சிகாச்சி ரசாயன நிறுவனம்…
சென்னை: பள்ளி மாணவர்களுக்காக ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உள்ளிட்ட பாடங்களில் 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பி.எஸ். எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய 2 படிப்புகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது. இந்நிலையில், 10, 11- 12-ம் வகுப்பு மாணவர்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஆர்க்கிடெக்சர் டிசைன், இன்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் ஆகியவை தொடர்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இவை 8 வார காலம் கொண்ட ஆன்லைன் படிப்புகள். இதில் மாணவர்களை சேர்க்க செய்யுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஆகஸ்ட், அக்டோபர், ஜனவரி என 3 தொகுதிகளாக இந்த படிப்புகள் நடத்தப்படும். ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் code.iitm.ac.in/schoolconnect என்ற…