ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து, காசா பகுதியில் உடனடியாக பலத்த தாக்குதல்களை நடத்துமாறு பிரதமர் நெதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
Author: admin
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.’பராசக்தி’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதிலும் நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார்.
கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் நாளை மறுநாள் (19-ம் தேதி) கோவையில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் வருகையையொட்டி, 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா அரங்கில் வரும் 19-ம் (நாளை மறுநாள்) தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்றை விவசாயிகள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி பங்கேற்று இம்மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்: நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். நாகை மாவட்டத்தில் நிகழாண்டு 1.20 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற் கொள்ளப்பட்டது. நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள், வடகிழக்கு பருவமழை பெய்து பல இடங்களில் வயலில் தேங்கிய மழைநீரில் சாய்ந்து மூழ்கியதால் பெருமளவில் நெல்மணிகள் முளைவிட்டும், பயிர்கள் அழுகியும் பாதிக்கப்பட்டது.
வாழைப்பழங்கள் இயற்கையான கார்போஹைட்ரேட்டுகளின் மிகவும் அணுகக்கூடிய ஆதாரங்களில் ஒன்றாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இருப்பினும் அவற்றை எப்போது சாப்பிடுவது என்ற கேள்வி கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி நடைமுறைகள் அல்லது சீரான உணவு முறைகளைப் பின்பற்றும் நபர்களிடையே ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஊட்டச்சத்து நேரத்தைப் பற்றிய தற்போதைய விவாதங்கள், முழு உணவுகளும் வளர்சிதை மாற்ற மறுமொழிகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதில் அதிக கவனம் செலுத்துவதுடன், ஆற்றல் பயன்பாடு மற்றும் மீட்புக்கு உதவும் அன்றாட பழங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. வாழைப்பழங்களில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் மற்றும் நார்ச்சத்து மற்றும் முக்கிய நுண்ணூட்டச்சத்துக்கள் அடங்கிய கலவை இருப்பதால், அவை உட்கொள்ளும் நேரத்தைப் பொறுத்து அவற்றின் விளைவுகள் மாறுபடும். இந்த வடிவங்களைப் புரிந்துகொள்வது, வாசகர்கள் வாழைப்பழங்களை பொதுவான தின்பண்டங்களாகப் பார்க்காமல், தினசரி ஊட்டச்சத்தின் மாற்றியமைக்கும் கூறுகளாகப் பார்க்க அனுமதிக்கிறது.வாழைப்பழத்தை சரியான நேரத்தில் உட்கொள்வது ஏன் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியை பாதிக்கலாம்வாழைப்பழங்கள் திறம்பட ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டின் வடிவத்தை வழங்குகின்றன, இது…
புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளி அமீர் ரஷித் அலி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் ஆவார். கடந்த 10-ம் தேதி டெல்லியில் வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் நபி, கார் குண்டு தாக்குதலை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார்.
இஸ்தான்புல்: பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் அவ்வப்போது போரில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கத்தார் நாட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்படி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த கட்டமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கடந்த சில நாட்களாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் என்று அஞ்சப்படுகிறது.
சென்னை: திரைப்பட இயக்குநர் வி.சேகர் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (நவ.14) மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
