சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கியமான 12 கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை…
Author: admin
மனதை வளைக்கும் ஆப்டிகல் மாயை பார்வையாளர்களுக்கு மூன்று முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்ட கருப்பு பூனைகளைக் கொண்ட புகைப்படத்திற்குள் மறைக்கப்பட்ட நான்காவது பூனையைக் கண்டுபிடிக்க சவால் விடுகிறது. புதிர் அதிக-மாறுபட்ட வடிவங்களில் கவனம் செலுத்தும் மூளையின் போக்கை சுரண்டுகிறது, இதனால் உருமறைப்பு பூனை கண்டறிவது கடினம். மறைக்கப்பட்ட பூனையை ஏழு விநாடிகளுக்குள் வெற்றிகரமாகக் கண்டறிவது கூர்மையான காட்சி செயலாக்க திறன்களைக் குறிக்கிறது, இதுபோன்ற மாயைகளின் மூளை பயிற்சி நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. முதல் பார்வையில், இந்த புகைப்படம் ஒரு நேர்த்தியான செங்குத்து வரிசையில் அமைந்துள்ள மூன்று அழகான கருப்பு பூனைகளை சித்தரிக்கிறது. அவற்றின் பளபளப்பான கோட்டுகள் மற்றும் ஆர்வமுள்ள கண்கள் பழுப்பு நிற நிலப்பரப்புக்கு எதிராக உடனடியாகத் தெரியும். ஆனால் இங்கே ஆச்சரியம், இந்த படத்தில் எங்காவது சுரக்கப்படும் நான்காவது பூனை உள்ளது. 7 வினாடிகளுக்குள் அதைக் கண்டறிவதே உங்கள் பணி!கடன்: contentCover2527/ redditஇந்த மாயை உயர்-மாறுபட்ட வடிவங்களைப் பார்ப்பதற்கு மனித மூளையின் சார்பைப் பயன்படுத்துகிறது;…
அமேசான் ப்ரைம் தளத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டது. முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் காமெடி காட்சிகளும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர்…
மதுரை: ”நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படை காரணமாக திகழ்கிறது” என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சுதந்திர தின விழாவில் கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில், மேயர் இந்திராணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவுக்கு ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாநகராட்சி பள்ளிகள், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த 6 பள்ளி தலைமை ஆசிரியர்கள், சுகாதாரப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பரப்புரையாளர்கள், நகர சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனார்கள் மற்றும் துய்மை பணியாளர்களுக்கு மேயர்…
சில நேரங்களில் நிஜ வாழ்க்கை புனைகதைகளை விட அந்நியராகத் தெரிகிறது, இந்த குறிப்பிட்ட சம்பவம் அவ்வாறு தெரிகிறது! வேலை-வாழ்க்கை சமநிலையின் தேவை, மற்றும் பெரும்பாலான ஊழியர்கள் எரிந்ததாக உணரும் ஒரு நேரத்தில், ஒரு பெண் இப்போது தனது நிறுவனத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய பணம் செலுத்தியதற்காக வழக்குத் தொடுத்துள்ளார் என்பது செய்தி. ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்! பலருக்கு ஒரு கனவு சூழ்நிலையாகத் தோன்றலாம்- எந்தவொரு வேலையும் செய்யாமல் சம்பளம் பெறுவது-லாரன்ஸ் வான் வான்ஹோவ் என்ற 59 வயதான பெண்ணுக்கு ஒரு கனவாக மாறியுள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஆரஞ்சை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்கிறார், நிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முறை மட்டத்தில் விட்டுவிட்டதாகக் கூறி- அவளுக்கு முழு சம்பளத்தை வழங்குவதன் மூலம், ஆனால் பணிகள் இல்லை, பொறுப்புகள் இல்லை, கிட்டத்தட்ட மனித தொடர்பு இல்லை.பிரெஞ்சு ஒளிபரப்பாளர் எஃப்.டி.வி உடன் பேசிய வான் வாஸ்ஸன்ஹோவ் தனது…
மதுரை: தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினையை வைத்து திமுக கூட்டணியை உடைக்க நினைப்பது அற்பமான அரசியல் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று மதுரையில் தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகரில் இன்று விசிக நிர்வாகி இல்ல விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விசிக தொடக்கத்திலிருந்து குரல் கொடுத்து வருகிறோம். மத்திய, மாநில அரசு துறைகளில் தனியார் மயம் தீவிரமடைந்து வருகிறது. அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் அப்புறப்படுத்தியதாக காவல் துறையும் அமைச்சரும் தெரிவித்தனர். தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். அதனை தனியார் மயமாக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். கைது செய்ததை கண்டித்ததோடு, அவர்கள் மீதான வழக்கையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினோம். இதை வைத்து அரசியல் செய்வது அர்த்தமற்ற அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை…
ஆம், அது சரி. புரதம் தசைகள் மற்றும் திசு பழுதுபார்ப்பை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதத்தின் பற்றாக்குறை மனநிலை அல்லது சிக்கல் சிந்தனையின் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை, அவை செரோடோனின், டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும். இந்த நரம்பியக்கடத்திகள் மனநிலை, உந்துதல், கவனம் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு காரணமாகின்றன. ஆனால் புரத அளவுகள் குறையும் போது, அது இருண்ட தன்மை, எரிச்சல், பதட்டம் மற்றும் மன அழுத்த பதில்களுக்கு வழிவகுக்கும்.
சென்னை: நடிகை கஸ்தூரி இன்று சென்னை தியாகராய நகரில் அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத் குயின் இந்தியா (Namis South Queen India) நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி மற்றும் நமீதா மாரிமுத்து இன்று முதல் அதிகாரபூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்தார். 79-வது சுதந்திர தினமான இன்று புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவனில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார். இதனை தொடந்து பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்தில் நீடிக்க எந்த அளவுக்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் எதிர்க்கட்சி வாக்குகள் வெளிப்படையாகக் குறைக்கப்படுகிறது. பிஹாரில் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனவே இதனால் யார் பயனடைகிறார்கள் என்பது தெரிகிறது. இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல, இந்தியாவின் ஜனநாயகத்தைக்…
50 ஆண்டு கால திரையுலக பயணத்துக்கு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், “அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ…