Author: admin

புதுடெல்லி: சீனாவின் ஷாங்காய் நகரில் சீன ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனையான அனஹத் சிங், உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள எகிப்தின் சனா இப்ராகிமுடன் மோதினார். இதில் அனஹத் சிங் 11- 5, 6- 11, 4- 11, 7- 11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியின் கால் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான ராதிகா சுதந்திர சீலன், தாய்லாந்தின் அனந்தன பிரசேர்த்ரதனகுல்லுடன் மோதினார். இதில் ராதிகா 11- 7, 11- 3, 11- 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Read More

இதனைத் தொடர்ந்து ஜப்பான் சென்ற ட்ரம்ப், அந்நாட்டின் புதிய பிரதமர் சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதை ஜப்பான் ஆதரிப்பதாக சனே தகைச்சி கூறியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் தனியாக அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது பேசிய தகைச்சி, “தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்வதில் அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சாதனையாகும்” என தெரிவித்துள்ளார்.

Read More

மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி. அப்படம் போதிய வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை கவனித்து வந்தார். தற்போது அதனை மிராக்கிள் மூவிஸ் என்ற மும்பை நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக தெரிகிறது.

Read More

மதுரை: சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குள் இருந்து வரும் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் ஆளுகைக்குள் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேட்டுக்கொண்டுள்ளார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பார் அசோசியேஷனுக்கு (எம்எம்பிஏ) இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்தபோது தமிழ் கற்றேன். தமிழ் இலக்கியம் உட்பட பல்வேறு புத்தகங்களை படித்தேன். அப்போது சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றிருந்த தனக்கு அநீதி இழைத்த மதுரை மாநகரை கண்ணகி எரித்த சம்பவம் என்னை பாதித்தது. இது தொடர்பான பல்வேறு கருத்துகளை எனது தீர்ப்புகளில் தெரிவித்துள்ளேன்.

Read More

ஓடுபாதையை நீட்டித் தால் மதுரையில் இருந்து நேரடி யாகவே விமானங்கள் சர்வதேச விமானநிலையங்களுக்கு இயக்கப்படும், மதுரையும் சர்வதேச விமானநிலையமாகி விடும் என தென் மாவட்ட தொழில் முனைவோர், பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடந்த கால் நூற்றாண்டாக மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவைத் தேர்தல் என எதுவாக இருந்தாலும் அரசியல் கட்சிகள் வைக்கும் முக்கிய வாக்குறுதி, மதுரையை சர்வதேச விமானநிலையமாக மாற்றுவோம், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வோம் என்பதுதான். ஆனால், அதிமுக, திமுக எந்தக் கட்சியின் ஆட்சியிலும் மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இரு கட்சிகளின் அரசுகளும் ஆர்வம் காட்டவில்லை என்றும் மதுரை விமானநிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தூத்துக்குடி விமானநிலையமும், திருச்சி விமானநிலையமும் பாதிக்கப்படும் என்றும் அக்கட்சிகளின் தென் மாவட்ட, மத்திய மாவட்ட முக்கியப் பிரமுகர்கள் நினைப்பதாகக் கூறுகின்றனர்.

Read More

உயர் இரத்த அழுத்தம், அல்லது உயர் இரத்த அழுத்தம், உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான முன்னணி ஆபத்துகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) அதை நிர்வகிப்பதில் வாழ்க்கை முறை தேர்வுகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று வலியுறுத்துகிறது, மேலும் இதயநோய் நிபுணர்கள் முதல் படியாக மில்லியன் கணக்கானவர்களுக்கு இரத்த அழுத்தத்தை மோசமாக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை அடையாளம் காண வேண்டும் என்று கூறுகின்றனர்.உயர் இரத்த அழுத்தத்தில் நிறுத்துவதற்கான சிறந்த பழக்கம்உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான உணவு மாற்றம் சோடியம் உட்கொள்ளலைக் குறைப்பதாகும், குறிப்பாக பதப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட மற்றும் உணவக உணவுகளில் காணப்படும் அதிகப்படியான சோடியத்தைத் தவிர்ப்பதன் மூலம்.அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, அமெரிக்கர்கள் உட்கொள்ளும் சோடியத்தில் 70-75 சதவிகிதம் உப்பு ஷேக்கரில் இருந்து அல்ல, மறைக்கப்பட்ட…

Read More

டிசம்பர் 2025 இன் முதல் நாள் சூரிய செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கொண்டு வந்துள்ளது, இது சூரியனின் காந்த நடத்தை மற்றும் பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியில் நிலையான நிலைமைகளை சார்ந்து இருக்கும் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையேயான உறவுக்கு புதுப்பிக்கப்பட்ட அறிவியல் கவனத்தைத் தூண்டியது. ஒரு எதிர்பாராத X2-வகுப்பு எரிப்பு அதிகாலையில் வெடித்தது, சூரிய மண்டலங்கள் எவ்வாறு திடீரென சீர்குலைக்க முடியும் மற்றும் இந்த மாற்றங்கள் வானொலி தொடர்பு மற்றும் வளிமண்டல அயனியாக்கத்தை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதை நினைவூட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக பெரிய மற்றும் காந்தவியல் சிக்கலான சூரிய புள்ளி குழு இப்போது பூமியை எதிர்கொள்கிறது, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் பல செயலில் உள்ள பகுதிகள் மேலும் விரிவடையக்கூடிய சாத்தியக்கூறுகளைக் காட்டுவதால் அவதானிப்புகளை தீவிரப்படுத்துகின்றன. இந்த திடீர் வெடிப்பு மற்றும் பெரிய அளவிலான காந்த ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் கலவையானது தற்போதைய சூரிய வளர்ச்சியை விண்வெளி வானிலை…

Read More

பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்​தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்​சார்யா தனது சகோ​தரர் தேஜஸ்வி மீது மறை​மு​மாக குற்​றம் சாட்டி உள்​ளார்.

Read More

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்கு விண்​ணப்​பித்த மாணவர்​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் பணி​கள் நாளை (அக்​டோபர் 31) நடை​பெறவுள்​ளன. இலவச கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ) தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். மாநிலம் முழு​வதுள்ள 7,717 தனி​யார் பள்​ளி​களில் சுமார் ஒரு லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில் எல்​கேஜி அல்​லது ஒன்​றாம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாகப் படிக்​கலாம்.

Read More

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 15ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், 26-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். 29 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21- 12 21- 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Read More