Author: admin

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட சுதந்திர தின உரையில் ஆளுநர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையும், துடிப்பு மிக்க தலைமையின்கீழ் நம்நாடு அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனை களைப் படைத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் உடனான போர் நடவடிக்கைகளின் வெற்றி காலத்துக்கும் நினைவுகூரப்படும். வளர்ச்சி அடைந்த பாரதம்- 2047 என்ற நமது தேசிய பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும், பொறுப்புணர்வும் தமிழகத்துக்கு உள்ளது. எனவே, தமிழக வளர்ச் சியை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதற்கு மத்திய அரசும் நிதி பகிர்வு உட்பட பல்வேறு வழிகளில் உதவியாக உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன்…

Read More

சென்னை: சுதந்​திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வர் பதக்​கம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அளவில் தனிச் சிறப்​புடன் பணி​யாற்​றும் காவல் அதி​காரி​களுக்கு ஆண்​டுக்கு இரு​முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் இந்த ஆண்​டு, சுதந்​திர தினத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதி​காரி​களுக்கு வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி பால​நாக தே​வி, சென்னை பெருநகர போக்​கு​வரத்​துக் காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன், சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு ஐஜி சு.லட்​சுமி ஆகியோ​ருக்கு இந்த பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. மேலும், குடியரசுத் தலை​வரின் மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கங்​கள் 21 பேருக்கு வழங்​கப்​படு​கின்​றன. அதன் விவரம் வரு​மாறு: சென்னை மாநில மனித உரிமை​கள் ஆணைய (புல​னாய்​வுப் பிரிவு) காவல் கண்​காணிப்​பாளர் ஆ.ஜெயலட்​சுமி, சென்னை பெருநகர…

Read More

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தினசரி 640-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில், ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரைரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி, சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று (15-ம் தேதி ) தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழி தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.15) மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமிராகவன் – அலமேலு தம்பதியின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர் இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை முகவராகவும் இருந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன். இவரது அண்ணன்கள் மூவர் ஆர்எஸ்எஸ் ஈடுபாட்டுடன் வளர்ந்தவர்கள். எனவே, ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளில் பங்கேற்கத் தொடங்கிவிட்டார் கணேசன். 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார் என்றாலும், ஆர்எஸ்எஸ் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார். முதலில் நாகர்கோவில் நகரப் பொறுப்பாளர். அடுத்து, நெல்லை, மதுரை மாவட்டப் பொறுப்பாளர். அடுத்து, ‘எம்ஆர்டிகே’ எனப்படும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர். அடுத்து,…

Read More

சென்னை: மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் நிதி அமைச்சர், 2024-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி அன்று சமர்ப்பித்த 2024- 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பக்கம் 25ல் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து, அதுபற்றிய விவரங்களை கீழ்கண்டவாறு விளக்கியுள்ளார். ‘ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள்…

Read More

மனிதர்களாகிய, நம் உடல் பாகங்கள் அனைத்தையும் வைத்திருப்பது ஒரு ஆசீர்வாதமாக உணர்கிறது. இப்போது ஒன்றைக் கடிக்கவோ அல்லது தள்ளிவிடவோ கற்பனை செய்து பாருங்கள், அதாவது, சில விலங்குகளுக்கு, அது அவர்களின் வால் உடனான உறவு. அவர்களின் வால்களுடன் காதல்-வெறுப்பு பிணைப்புடன் 8 உயிரினங்கள் இங்கே உள்ளன, அவை உங்களையும் குழப்பிவிடும்.

Read More

விருதுநகர்: சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், அந்நாளில் பிரதமர் ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல். என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. குற்றம் சாட்டினார். இதுகுறித்து விருதுநகரில் இன்று அவர் அளித்த பேட்டியில், “தேச கட்டுமானத்திற்காக ஆர்எஸ்எஸ்காரர்கள் பாடுபட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்கான எந்த போராட்டத்திலும் ஆர்எஸ்எஸ் பங்கேற்றது இல்லை. இன்று சுதந்திரத்திற்காக போராடியவர்களை கவுரவிக்க வேண்டிய நாள். ஆனால், ஆர்எஸ்எஸ் குறித்து பேசியது சுதந்திரத்திற்காக போராடியவர்களை அசிங்கப்படுத்தும் செயல். தீபாவளி பரிசாக வரி குறைப்பு என்று கூறியுள்ளதை பொருத்திந்து பார்ப்போம். இந்த ஆட்சி தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சியாக மாறியுள்ளதற்கு காரணம் மோடியின் கொள்கைகள்தான். விவசாயிகளைப் பற்றியோ,சிறு வியாபாரிகளைப் பற்றியோ மோடிக்கு கவலை இல்லை. தமிழக ஆளுநர் ரவி,…

Read More

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு மீன்களில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், ஆளி விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகளுடன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் காட்டுகின்றன. இந்த உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் யூரிக் அமில படிகங்களால் ஏற்படும் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் சிறுநீரகங்களை அவற்றின் செயல்பாட்டில் ஆதரிக்கின்றன, யூரிக் அமிலத்தை வடிகட்டுகின்றன. வாரந்தோறும் குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை ஒமேகா -3 பணக்கார உணவுகளை உள்ளடக்கிய உணவு, யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது, மேலும் கீல்வாதம் அழற்சி அறிகுறிகளைக் குறைக்கிறதுஆதாரங்கள் மற்றும் ஆராய்ச்சி:அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, “யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான உணவு – கீல்வாதம் (குறைந்த ப்யூரின்) உணவு”மெடந்தா, “வீட்டில் இயற்கையாகவே யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது: எளிய தீர்வுகள்”அப்பல்லோ 247, “உயர் யூரிக் அமில அளவு? ஒரு நட்பு…

Read More

சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது. நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும். இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும். 1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும்,…

Read More

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கியமான 12 கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை…

Read More