Author: admin

சென்னை: மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​ட​தால் நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை.; உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்லை என்று திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம், சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமை அலு​வல​க​த்​தில் நேற்று நடந்​தது. இந்த கூட்​டத்​தில் திமுக தலை​வரும், தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்கொள்ளும் வகை​யில் தொகுதி பிரச்​சனை​களை களை​ய​வும், மக்​கள் குறை​களை தீர்க்​க​வும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின், ‘தா​யு​மானவர் திட்​டம்’ ஆகிய​வற்றை செயல்​படுத்தி வரு​கிறோம். நலத்​திட்​டங்​கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் நமது செல்​வாக்கு அதி​கரித்​துள்​ளது. நாள்​தோறும் கட்சி நிர்​வாகி​கள் மக்​களை சந்​தித்​துக் கொண்டே இருக்க வேண்​டும். தற்​போது பாஜக அரசு தேர்​தல் ஆணை​யம் மூலம் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மூலம் என்​னென்ன அட்​டூழி​யங்​களை பிஹாரில் மேற்​கொண்டு வரு​கிறது என்​பதை கண்​கூ​டாக பார்க்​கிறோம். வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கும் பொருட்டு கடந்த ஆண்​டு​களில்…

Read More

சென்னை: கலைஞர் பல்​கலைக்​கழக மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​காதது, துணைவேந்​தர் நியமன விவ​காரம் ஆகிய​வற்​றில் ஆளுநர் ஆர்​.என்​. ர​வி​யின் செயல்​பாடு​களுக்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வித​மாக, சுதந்​திர தினத்​தையொட்டி கிண்டி ராஜ்பவனில் அவர் இன்று மாலை அளிக்​கும் தேநீர் விருந்​தில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்க மாட்​டார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழக மக்​களின் நலன்​களுக்கு எதி​ராக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடர்ந்து கருத்து தெரி​வித்​து, செயல்​பட்டு வரு​கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வித​மாக, ஆகஸ்ட் 18, 19-ம் தேதி​களில் நடை​பெறும் அழகப்பா மற்​றும் திரு​வள்​ளுவர் பல்​கலைக்​கழகங்​களின் பட்​டமளிப்பு விழாக்​களில், முதல்​வர் ஸ்டா​லின் அறி​வுறுத்​தலின்​படி பங்​கேற்​கப் போவ​தில்லை என்று உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார். மேலும், தஞ்​சாவூர் மாவட்​டம் கும்​பகோணத்​தில் கலைஞர் பல்​கலைக்​கழகம் அமைப்​ப​தற்​கான மசோ​தா, சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டு, ஆளுநரின் ஒப்​புதலுக்​காக அனுப்​பப்​பட்​டது. அவர் அதற்கு ஒப்​புதல் அளிக்​காமல், தாமதப்​படுத்த வேண்​டும் என்ற நோக்​கத்​தோடு குடியரசுத்…

Read More

ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரம்சுந்தரி’. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியானது. தேவாலயம் ஒன்றில் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் காட்சியுடன் அந்த ட்ரெய்லர் தொடங்கியது. இந்த காட்சிக்கு கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற பெயர் கொண்ட அந்த அமைப்பு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், மத்திய தணிக்கை வாரியம், மும்பை காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் அதில், “தேவாலயம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு புனிதமான வழிபாட்டுத் தலமாகும். அதை ஆபாசமான உள்ளடக்கத்திற்கான ஒரு மேடையாக சித்தரிக்கக்கூடாது. இந்த சித்தரிப்பு மத வழிபாட்டுத் தலத்தின் ஆன்மீக புனிதத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சியை பொதுத் தளங்களில் இருந்து நீக்கவில்லை…

Read More

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் மறைந்த தலைவர், முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது. அரசியல் விளக்கவுரை கூட்டத்தை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். கட்சியின் தேசிய செயலாளர்கள் அமர்ஜித் கவுர், நாராயணன், ஆனி ராஜா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி.…

Read More

சென்னை: ​மாநில கல்விக் கொள்​கை​யின்​ படி முறை​யான கால அட்​ட​வணை அமைத்​து, பாடத்​திட்​டங்​களை மேம்​படுத்த வேண்டும் என்று அதி​காரி​களுக்கு அமைச்​சர் அன்​பில் மகேஸ் அறி​வுறுத்​தி​னார். பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்டம் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகித்​தார். துறை செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன், தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ் மற்​றும் துறை சார்ந்த இயக்​குநர்​கள் பலர் கலந்​து​ கொண்​டனர். சட்​டப்​பேர​வை​யில் பள்​ளிக்​கல்​வித் துறை தொடர்​பாக வெளி​யான அறி​விப்​பு​களின் நிலை, செயல்​படுத்த வேண்​டிய திட்​டங்​கள், துறை​யின் எதிர்​கால இலக்​கு​கள் உள்​ளிட்​டவை குறித்து இதில் விவா​திக்​கப்​பட்​டன. அதை தொடர்ந்​து, ‘தற்​போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்​கை​யில் இடம்​பெற்​றுள்ள அம்​சங்​களை அமல்​படுத்​து​வதற்​கான செயல் திட்​டங்​களை வகுக்க வேண்​டும். பாடத் திட்​டங்​களை மேம்​படுத்த கால அட்​ட​வணை தயாரித்து பணி​யாற்ற வேண்​டும்’ என்பன உட்பட பல அறி​வுறுத்​தல்​களை அமைச்​சர் அன்​பில் மகேஸ் வழங்​கி​னார்.…

Read More

புதிய நகரத்தை ஆராய்வதா? ஒரு புதிய நகரத்தில் சுற்றுலாப் பயணிகளாக இருப்பதால், முடிந்தவரை ஆராய்வதில் நாங்கள் அடிக்கடி மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பயணம் மோசமான திருப்பத்தை ஏற்படுத்தும். மோசடி செய்பவர்களுக்கு எங்களை ஏதேனும் ஒரு வழியில் அல்லது வேறு வழியில் மோசடி செய்ய வெவ்வேறு வழிகள் உள்ளன, மேலும் அவர்கள் பயன்படுத்தும் தந்திரங்களை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவர்களின் தந்திரங்கள் மிகவும் மறைக்கப்பட்டுள்ளன, ஒருவர் அவர்களை ஒருபோதும் யூகிக்க முடியாது, ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், உலகெங்கிலும் என்ன மோசடிகள் நடக்கிறது என்பதை கொஞ்சம் தயாராக இருப்பதன் மூலமும், அவர்களைத் தவிர்க்கலாம். பயணத்தில் இருக்கும்போது ஒருவர் எதிர்கொள்ளக்கூடிய அனைத்து மோசடிகளையும் பட்டியலிடுவதன் மூலம் உங்கள் பயணங்களை பாதுகாப்பாகவும் மன அழுத்தமாகவும் மாற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

Read More

புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த், “உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நீண்ட காலமாக மிகவும் மதிக்கும் ஒரு தலைவரிடமிருந்து அவற்றைப் பெறுவது மிகப்பெரிய மரியாதை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக…

Read More

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று வெளியிட்ட சுதந்திர தின உரையில் ஆளுநர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வையும், துடிப்பு மிக்க தலைமையின்கீழ் நம்நாடு அனைத்துத் துறைகளிலும் இதுவரை இல்லாத புதிய சாதனை களைப் படைத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் உடனான போர் நடவடிக்கைகளின் வெற்றி காலத்துக்கும் நினைவுகூரப்படும். வளர்ச்சி அடைந்த பாரதம்- 2047 என்ற நமது தேசிய பயணத்தை வழிநடத்தக்கூடிய பங்கும், பொறுப்புணர்வும் தமிழகத்துக்கு உள்ளது. எனவே, தமிழக வளர்ச் சியை மேம்படுத்துவதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதற்கு மத்திய அரசும் நிதி பகிர்வு உட்பட பல்வேறு வழிகளில் உதவியாக உள்ளது. தமிழ் மொழி மற்றும் அதன்…

Read More

சென்னை: சுதந்​திர தினத்தயொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 24 அதி​காரி​களுக்கு குடியரசுத் தலை​வர் பதக்​கம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய அளவில் தனிச் சிறப்​புடன் பணி​யாற்​றும் காவல் அதி​காரி​களுக்கு ஆண்​டுக்கு இரு​முறை குடியரசுத் தலை​வர் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் இந்த ஆண்​டு, சுதந்​திர தினத்தை முன்​னிட்டு குடியரசுத் தலை​வரின் தகை​சால் பணிக்​கான பதக்​கம் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் அதி​காரி​களுக்கு வழங்​கப்​படு​கிறது. அதன்​படி, பொருளா​தா​ரக் குற்​றப்​பிரிவு கூடு​தல் டிஜிபி பால​நாக தே​வி, சென்னை பெருநகர போக்​கு​வரத்​துக் காவல் கூடு​தல் ஆணை​யர் கார்த்​தி​கேயன், சிலை கடத்​தல் தடுப்​புப் பிரிவு ஐஜி சு.லட்​சுமி ஆகியோ​ருக்கு இந்த பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. மேலும், குடியரசுத் தலை​வரின் மெச்​சத்​தக்க பணிக்​கான பதக்​கங்​கள் 21 பேருக்கு வழங்​கப்​படு​கின்​றன. அதன் விவரம் வரு​மாறு: சென்னை மாநில மனித உரிமை​கள் ஆணைய (புல​னாய்​வுப் பிரிவு) காவல் கண்​காணிப்​பாளர் ஆ.ஜெயலட்​சுமி, சென்னை பெருநகர…

Read More

சென்னை: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தினசரி 640-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில், ஞாயிறு, பண்டிகை நாட்களையொட்டி வரும் தேசிய விடுமுறை நாட்களில், வழக்கமாக 30 சதவீதம் வரைரயில் சேவைகள் குறைத்து இயக்கப்படும். அதன்படி, சுதந்திர தினத்தை ஒட்டி, இன்று (15-ம் தேதி ) தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழி தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Read More