Author: admin

பாரீஸ்: பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள் மன்​னர் நெப்​போலியன் காலத்து கிரீடம் மற்​றும் பிரெஞ்சு ராணி​கள் அணிந்த நெக்​லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்​ளை​யடித்து விட்டு மோட்​டார் சைக்​கிளில் தப்​பிச் சென்​றனர். இவற்​றின் மொத்த மதிப்பு 102 மில்​லியன் டாலர் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Read More

‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் தணிக்கையில் சிக்கியது. இது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வெற்றிமாறன். இதனால் நீதிபதிக்கு தனியாக ‘மனுஷி’ திரையிடல் நடைபெற்றது.

Read More

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பெரும்பாலான இடங்களிலும், நவ.19 முதல் 23-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களிலும் 19, 20 தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், 22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

Read More

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,800 குறைந்து ரூ.88,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.11.075-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை வழங்கியுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.165-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சற்றே மீளத் தொடங்கி இருப்பதுடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடும் குறைந்து வருகிறது. இதனால், தங்கத்தின் தேவை குறைந்து ஆபரணத் தங்கம் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது.

Read More

இதய நோய்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொல்கின்றன. ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளிகளின் பொதுவான பண்புகளை எடுத்துக்காட்டுகிறார்: புகைபிடித்தல், உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் மரபியல். மரபியலை மாற்ற முடியாது என்றாலும், உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மரபணு வெளிப்பாடு மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கின்றன, இந்த நிலைமைகளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்கின்றன. உலகளவில் இறப்புக்கு இதய நோய்கள் முக்கிய காரணமாகும். அமெரிக்காவில், CDC படி, இருதய நோய்களால் (CVDs) ஒவ்வொரு 34 வினாடிகளுக்கும் ஒருவர் இறக்கிறார். உலகளாவிய சுமை அதிகரித்து வருகிறது, மேலும் CVD கள் 2022 இல் உலகளவில் 19.8 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியதாக WHO தெரிவித்துள்ளது. இதய ஆரோக்கியத்தை வைப்பது இன்று முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒரு செய்திமடலில், டாக்டர் ஜெர்மி லண்டன், டென்வரில் உள்ள…

Read More

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வியடைந்த நிலையில், லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாகவும், தனது குடும்பத்துடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுபற்றி ரோகிணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நேற்று, ஒரு மகளாக, ஒரு சகோதரியாக, ஒரு திருமணமான பெண்ணாக, ஒரு தாயாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை அவதூறான வார்த்தைகளில் வசைபாடினர். என்னை அடிக்க செருப்பு எடுத்துக்கொண்டு பாய்ந்தனர். நான் என் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ளவில்லை, நான் உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை, இதன் காரணமாகவே, இந்த அவமானத்தை நான் தாங்கிக் கொண்டேன்.

Read More

கடலில் மீன்பிடிக் கப்பல்களை இயக்குவதற்குத் தகுதி படைத்த தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத் துடன் 1963ஆம் ஆண்டில் கொச்சியில் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் ஆபரேட்டிவ்ஸ் என்கிற அமைப்பு உருவாக் கப்பட்டது. அது தற்போது சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரிஸ் அண்ட் நாட்டிக்கல் இன்ஜினியரிங் (சிப்நெட்) என்கிற பெயரில் செயல்படுகிறது. 1968ஆம் ஆண்டில் சென்னை ராயபுரத்திலும் 1981ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் சிப்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கடல் மீன்பிடிக் கப்பல்களில் பணிபுரியும் ஸ்கிப்பர்கள், மேட்ஸ், இன்ஜினி யர்கள், இன்ஜின் டிரைவர்கள் போன்ற பணிகளுக்குப் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கும் ஒரே இந்திய நிறுவனம் இது.

Read More

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்​றியை தேடிக்​கொடுக்​கும் நிலைக்கு கொண்டு செல்​லக்​கூடிய​தாக இருந்​தது.

Read More

வாஷிங்டன்: அமெரிக்க அரசு முடக்கம் ஏற்பட்டு 3 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், இது நீடித்தால் அமெரிக்காவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசு வழங்கிவரும் சலுகையான ஃபுட் ஸ்டாம்ப்ஸ் (Food Stamps) என்று சுருக்கமாக அழைக்கப்படும் துணை ஊட்டச்சத்து உதவித் திட்டம் (Supplemental Nutrition Assistance Program) முடங்கும் சூழல் ஏற்படும். நவம்பரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிதியில்லை என்று வேளாண் துறை தெரிவித்துள்ள நிலையில், இதை நம்பியுள்ள 4.2 கோடி அமெரிக்கர்கள் இந்த உதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த அபாயத்தைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளாத அமெரிக்க அரசு, இப்படியொரு நிலை உருவானால் அதற்கு அமெரிக்க எதிர்க்கட்சிதான் காரணம் என்ற வகையில் ஜனநாயகக் கட்சி மீது பழியைத் தூக்கிப் போட்டுள்ளது. அமெரிக்க வேளாண் துறை செயலர் ப்ரூக் ரோலின்ஸ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஜனநாயகக் கட்சியினர் அந்நியர்களுக்கு ஆதாயமாக இருக்கும் ஹெல்த் கேர் திட்டத்துக்காக…

Read More

துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர். இதற்கு முன்பு அவரது நேரடி தமிழ்ப் படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ அவருக்கு தமிழில் ஒரு தனி இடத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் மறுபடியும் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம்தான் ‘காந்தா’. படத்தின் தொடக்கத்தில் ஒரு கொலை நடக்கிறது. கட் செய்தால் மாடர்ன் ஸ்டுடியோஸ் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), அய்யா என்று அனைவராலும் மதிக்கப்படும் இயக்குநரிடம் (சமுத்திரக்கனி) ஏற்கெனவே படப்பிடிப்பு நடந்து பின்னர் கைவிடப்பட்ட தன் படத்தை மீண்டும் எடுக்கலாம் என்று கூறுகிறார். அந்த காலகட்டத்தில் நடிப்புச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் உச்ச நட்சத்திரமான டி.கே.மகாதேவனுக்கும் (துல்கர் சல்மான்) அய்யாவுக்கும் இடையே நடந்த ஈகோ மோதலே அப்படம் ட்ராப் ஆன காரணம். மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Read More