Author: admin

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் மொத்​த​முள்ள 243 தொகு​தி​களில் ஆளும் என்​டிஏ கூட்​டணி 202 இடங்​களை பெற்​றுள்​ளது. அதேசம​யம் ஆர்​ஜேடி தலை​மையி​லான மெகா கூட்​டணி 35 ஆக சுருங்கி விட்​டது. ஆர்ஜேடி 25 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் முக்​கிய ஆதர​வாளர்​களான யாதவ் மற்​றும் முஸ்​லிம்​கள் எதிர்க்கட்​சிகளுக்கு வாக்​களிக்​காதது ஏன் என்ற கேள்வி எழுந்​துள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் முக்​கிய நடவடிக்​கை​யான எஸ்​ஐஆர் (வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம்) முதல் மாநில​மாக பிஹாரில் அமலானது.

Read More

தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு​முழு​வதும் 2.30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட எம்​பிபிஎஸ் முடித்த மருத்​து​வர்​கள், நீட் தேர்வை கடந்த ஆக.3-ம் தேதி எழு​தினர். தேர்வு முடிவு​கள் ஆக.19-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில், எம்டி எம்​எஸ், எம்​டிஎஸ் மற்​றும் டிப்​ளமோ 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான முதல் கலந்​தாய்வு ஆன்லைனில் தொடங்​கியது. அதன்​படி, என்ற இணை​யதளத்​தில் நவ.5-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்​டும். அன்​றைய தினம் பிற்​பகல் 3 மணி வரை கட்​டணம் செலுத்​தலாம். அக்​.28-ம் தேதி முதல் நவ.5-ம் தேதி நள்​ளிரவு 11.55 மணி வரை இடங்​களைத் தேர்வு செய்​ய​லாம். நவ.6, 7-ம் தேதி​களில் தரவரிசைப் பட்​டியல் அடிப்​படை​யில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, 8-ம்தேதி அதன் விவரம் வெளி​யிடப்படும். மேலும் 9-ம் தேதி முதல் 15-ம் தேதிக்​குள் இடஒதுக்​கீடு பெற்ற கல்​லூரி​களில் சேர வேண்​டும். 16-ம் தேதி முதல்18-ம் தேதிக்​குள் மாணவர்​களின்…

Read More

புதுடெல்லி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள டெல்லி – ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான ஆட்​டம் டெல்​லி​யில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் டெல்லி 211 ரன்​களும், ஜம்மு & காஷ்மீர் அணி 310 ரன்​களும் சேர்த்​தன. 99 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய டெல்லி அணி 69.1 ஓவர்​களில் 277 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 179 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 15 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 55 ரன்​கள் எடுத்​தது.

Read More

“நிச்சயம் எனது பேர பிள்ளைகள் வெள்ளை மாளிகையில் பெண் அதிபர் ஒருவர் பதவியில் இருப்பதை தங்கள் வாழ்நாளில் பார்ப்பார்கள் என நம்புகிறேன். அது நானாக கூட இருக்கலாம். அடுத்த அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அரசியலில் எனக்கு எதிர்காலம் உள்ளதாக நம்புகிறேன்.நான் கருத்து கணிப்புகளை கருத்தில் கொள்வது இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டேன், இங்கு அமர்ந்து பேசி இருக்கவும் மாட்டேன். தன் மீதான விமர்சனங்களை அதிபர் ட்ரம்ப்பால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Read More

தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ். செயின் ராஜின் மகனான ரஜினி கிஷன் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘ரஜினி கேங்’. ‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலகலப்பான ஹாரர் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் ரஜினி கிஷன் ஜோடியாக தீவிகா வருகிறார். மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் நடித்துள்ளது.

Read More

மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார்.

Read More

சென்னை: அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளை சந்தித்து வரும் நிலையில், முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வகையில் நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களை வென்றது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19 இடங்களையும், எச்ஏஎம் 5 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களையும் வென்றன. எதிக்கட்சிகளின் மகா கூட்டணி 35 இடங்களை மட்டுமே வென்றது. ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பிஎஸ்பி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

Read More

சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் 3 பேர் தேசிய அறி​வியல் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பாராட்டு தெரி​வித்​தார். அறி​வியல், தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்பு ஆகிய துறை​களில் சிறப்​பாகப் பணி​யாற்​று​வோருக்கு மத்​திய அரசு ஆண்​டு​தோறும் தேசிய அறி​வியல் விருது (ராஷ்ட்​ரிய விஞ்​ஞான் புரஸ்​கார்) வழங்கி கவுர​வித்து வரு​கிறது.இந்த விருது, விஞ்​ஞான் ரத்​னா, விஞ்​ஞான் ஸ்ரீ, விஞ்​ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்​நாகர், விஞ்​ஞான் டீம் என 4 பிரிவு​களில் வழங்கப்படுகிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய அறி​வியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்​கள் தலப்​பில் பிரதீப், மோக​னசங்​கர் சிவப்​பிர​காசம், ஸ்வேதா பிரேம் அகர்​வால் ஆகிய 3 பேர் தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளனர்.

Read More

கொல்கத்தா: தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ.14ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ ஷிப்​பின் ஓர் அங்​க​மாக உள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்​ சுழற்சியில் இந்​திய அணி​யானது இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-2 என சமனில் முடித்​திருந்​தது. தொடர்ந்து சொந்த மண்​ணில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக வென்​றிருந்​தது. அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யானது பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்​திருந்​தது.

Read More